முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 105

புதுகை மு. தருமராசன்,  முத்துராஜூ- லட்சுமிகாந்தம் இணையரின் மகன். தற்போது சென்னையில் வசிக்கும் இவரைப் பலரும் அழைப்பது புதுகையார் என்றுதான். வங்கிப் பணியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எழுத்து, பேச்சு, கவிதை, பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். பத்தொன்பது ஆண்டுகளுக்கும் மேலாக  புதுகைத் தென்றல் மாத இதழை நடத்தி வருகிறார். இந்த இதழ் இடைநிற்றல் இல்லாமல் 236 ஆவது இதழைக் கண்டிருக்கிறது. மேனாள் அமைச்சர் இராம.வீரப்பன் தலைமையில் இயங்கும் சென்னைக் கம்பன் கழகத்தின் பொருளாளர். இவரது துணைவியார் பானுமதி தருமராசனும் எழுத்தாளரே. இருவரும்  இலக்கிய இணையராக செயலாற்றுகிறார்கள்.


புதுகை மு. தருமராசன்,  பனிரெண்டு நூல்கள் எழுதியுள்ளார். இவரது நூல்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மொழியாக்கம் பெற்றுள்ளன. நயனுறு நடைச்சித்திரம் எனும் இந்நூல் சிகரம் தொட்ட சாதனையாளர்கள் குறித்து பேசுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் அருளாளர் இராம.வீரப்பன், ஞானாலயா கிருஷ்ணமூர்த்திபுதுகைபி.வெங்கட்ராமன்,..ஆகியோர்களின் சாதனைகளைப் பதிவு செய்கிறது.




'பிரசிடெண்ட்' சி. ராமச்சந்திரன் எனும் கட்டுரை . முக்கியமானது. வல்லாத்திராக்கோட்டை ராமச்சந்திரன் குடும்பத்தை மேனாள் அமைச்சர் இராம. வீரப்பன் பிரசிடென்ட் குடும்பம் என்றே அழைப்பார். முப்பது ஆண்டுகள் ஊராட்சித் தலைவராக இருந்தவர் இவரது தந்தை. இவரைத் தொடர்ந்து ராமச்சந்திரன் 43 ஆண்டுகள் அப்பதவியில் இருந்துள்ளார். இப்பதவியில் மட்டுமின்றி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் பெரியார் வழியில் யாரையும் மரியாதையுடன் அழைக்கிறவர்.  கிராமத்தில் அனைத்து சாதி, சமூக மக்களும் அடுத்தடுத்துக் குடியிருக்கும் ஓர் குடியிருப்பினை கேர் காலனி என்ற பெயரில் உருவாக்கிய இவரது முயற்சி சமத்துவபுரம் தோன்றுவதற்கு முன்பே அவர் ஏற்படுத்திய சமுதாயப் புரட்சி என்கிறார்.மதுக்கடைகள் இல்லாத வல்லாத்திராக்கோட்டையை நிர்வகித்தவர். இலக்கியப் பணியில் ஈடுபாடு கொண்டுள்ள புதுகை கம்பன் கழகச் செயலாளர் திரு. சம்பத்குமார் இவரது மூத்தமகன். சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞராக இருந்து தற்போது உயர்நீதி மன்ற நீதிபதியாக பணியாற்றும் திரு.சுரேஷ்குமார் இவரது இளைய மகன்.

'சான்றாண்மைக்கு ஆழி' புதுகையார்! என  முனைவர் இரா. மோகன் அவர்கள் புதுகை மு. தருமராசனைப் புகழாரம் சூட்டுகிறார். மதுரை மாநகரில் இயங்கி வரும் இலக்கிய இணையர் அறக்கட்டளை 2010 ஆம் ஆண்டு புதுகைத் தென்றல் இதழுக்குச் சிறந்த இலக்கிய இதழ் விருது வழங்கிச் சிறப்பித்தது. மேலும் 2016 ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தது. புதுக்கோட்டை ஆளுமைகளை அடையாளம் கண்டு  பதிவு செய்யும் இவரின் தொண்டு அளப்பரியது.

அண்டனூர் சுரா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...