புதுக்கோட்டை எழுத்தாளர் – 143 சாமி கிரிஷ் , இயற்பெயர் – சாமியப்பன் முத்துக்கிருஷ்ணன் . கவிஞர், குறும்பட இயக்குநர், திறனாய்வாளர், சிறார் சிறுகதையாளர். பிறப்பு - இடையாத்தி மேற்கு – நெய்வேலி. கரம்பக்குடி ஒன்றியம் ஒடப்பவிடுதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராகப் பணியாற்றுகிறார். தமுஎகச மாவட்டச் செயற்குழு உறுப்பினர். தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கரம்பக்குடி கிளை செயலாளர். கவிஞர் ஸ்டாலின் சரவணனின் தேவதைகளின் வீடு நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டதன் பிறகு கவிதைகள் மீதான ஆர்வத்தால் எழுதத் தொடங்கினேன், என்கிறார். ஆனந்த விகடன், குங்குமம், கணையாழி, பேசும் புதிய சக்தி, காமதேனு, புரவி உள்ளிட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளிவந்துள்ளன. துருவேறிய தூரிகைகள் , பட்டாம்பூச்சியின் புகைப்பட ப்ரியங்கள் என்கிற இரு கவிதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார். துருவேறிய தூரிகை கவிதை நூலுக்காக தமிழ்நாடு கலை இலக்கிய மேடையின் படைப்பூக்க விருது பெற்றவர். இவரது சிறார் சிறுகதையான கூர்ப்பி இவரால் குறும்படமாக எடுக்கப்பட்டு, சிறந்த குறும்படமாக தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் விருது பெற்றது. ...
அண்டனூர் சுரா