புதுக்கோட்டைக்குள் எழுதப்பட்ட முதல் வரலாறு புதுக்கோட்டை எழுத்தாளர் - 235 எஸ்.இராதாகிருஷ்ண ஐயர் , பி.எ. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கும் அருகில் சூலமங்கலம் எனும் ஊரைச் சார்ந்தவர். 1918- 19 ஆம் ஆண்டுகளில் கல்லூரியின் முதல்வராக இருக்கையில் புதுக்கோட்டை மாநிலம் பொது வரலாறு எழுத அன்றைய சமஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொள்ள, A GENERAL HISTORY OF THE PUDUKKOTTAI STATE BY S. RADHAKRISHNA AIYAR, B.A Late Principal of H.H.The Maharajah`s College, Pudukkottai எனும் தலைப்பில் இந்நூலை எழுதினார். இந்நூல் புதுக்கோட்டை தர்பார் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1916 ஆம் ஆண்டு ஸ்ரீ பிரகதம்பா ஸ்டேட் பிரஸ்,புதுக்கோட்டை வழியே இந்நூல் வெளிவந்தது. முன்னுரை செய்தி ஸ்பெயின் நாட்டில் மாஞ்சனரிஸ் என்றொரு நதி ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மாட்ரிட் எனுமிடத்தில் ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள். அந்தப் பாலத்தைப் பார்வையிட பயணிகளில் இருவர் இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். ஒருவர் சொல்கிறார், " பாலங்கள் இல்லாத ஆறுகளை ந...
அண்டனூர் சுரா