புதுக்கோட்டை எழுத்தாளர் - 192 அ. அமீர்பாட்சா , அறந்தாங்கி. பிறப்பு - தஞ்சாவூர் மாவட்டம் , பேராவூரணி அடுத்த பூக்கொல்லை . தற்போது அறந்தாங்கியில் வசித்து வருகிறார். இளங்கலை சமூகவியல் படித்தவர். ஆன்மீகவியல் மற்றும் தத்துவவியலில் குறித்து உரையாற்றுவதில் விருப்பம் கொண்டவர். மதங்களும் மானுடமும் எனும் இந்நூல் இவரது முதல் படைப்பு. நான்கு தலைப்புகளின் கீழ் மதம் மதம் சார்ந்த கற்பிதங்களை அலசுகிறார். 1.பகவத் கீதையும் கீதையை விமர்சிக்கும் மறுப்பக்கம் நூலுக்கு மறுப்புரையும், 2.இஸ்லாமிய மதமும் அதன் தத்துவ இயலும், 3.புத்தம் ஒரு புதிர், 4.பின்னுரையில் எக்ஸிஸ்டென்ஷியலிசம் பற்றிய சில கருத்துக்கள். உலகம் எப்படி இயங்குகிறது, என்று ஆராயாமல் உலகை இயக்குவது யார்? அதன் அடிப்படை என்ன? என்று ஆராய்ந்ததன் விளைவுதான், மானுடர்கள் கடவுளை ஏற்றுக்கொள்ளத் தூண்டியது. மனிதன் என்பவன் இப்போது என்னவாக உள்ளானோ, அது அல்ல. இப்போது என்னவாக இல்லையோ, அதுதான் - போன்ற கருத்தியல்களால் இருத்தலியல் கோட்பாடுகளை விளக்குகிறார். கிரேக்க இதிகாச கதையில் ஸிஸிஃபஸ் எனும் கதாபாத்திரத்தைக் கொண்டு மனித வாழ்வு ...
அண்டனூர் சுரா