முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூலை, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ப.உமாபதி

 புதுக்கோட்டை எழுத்தாளர் -09 ப.உமாபதி ,  (பிறப்பு - 24.11.1939 பெற்றோர் - கயி. பழனியப்பன் - காசியம்மாள்) . கரம்பக்குடி தெற்குத் தெரு. கரம்பக்குடியில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் படித்தவர். முதுகலை தத்துவம்,  சமூக அறிவியல் முடித்து ஆசிரியராக பணியாற்றினார். பிறகு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் வெற்றிபெற்று ஊரக வளர்ச்சித்துறையில்  அதிகாரியாகவும் பிறகு  புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது பணிக்காலம் 36 ஆண்டுகள். தமிழ் , ஆங்கிலம் இரு மொழிகளிலும் எழுதக்கூடியவர். திறனாய்வாளர், சொற்பொழிவாளர். ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் அலுவலர்களுக்கு வழிகாட்டி நூல்களாக எழுதப்பெற்ற மூன்று நூல்களில் இடம் பெற்றிருந்தார். கரம்பக்குடி தமிழ் இலக்கிய மன்றத்தின் ஆலோசகர், கரம்பக்குடி கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் உட்பட பல அமைப்புகளில் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். சமுதாயச் சிற்பி விருது, சிறந்த சமூக சேவை விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். சமீபத்தில் கரம்பக்குடி தமுஎகச கலை இரவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றார். இந்தப் பூமிய...

தமிழ்ச்செம்மல் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி

ஆறாவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் எழுத்தாளர் புதுக்கோட்டை எழுத்தாளர் -221 தமிழ்ச்செம்மல் ஞானாலயா பா. கிருஷ்ணமூர்த்தி , (பிறப்பு - 15.08.1941). ஊர் -  திருவாரூர் மாவட்டம் காவலக்குடி. புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஞானாலயா இல்லத்தில் வசித்து வருகிறார். முதுகலைப் பட்டதாரி ஆசிரியர், தலைமை ஆசிரியர், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் விரிவுரையாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பெற்றோர் - கா.வீ.பாலசுப்பிரமணியன்,  கி.மீனாட்சி அம்மாள். துணைவியார் டோரதி கிருஷ்ணகுமார். ஞானாலயா என்பது இவரது இணையர் டோரதி கிருஷ்ணமூர்த்தி யுடன் இணைந்து உருவாக்கிய  நூலகம். இந்த நூலகம் குறித்து இலங்கை நாளிதழ் வீரகேசரி (16.12.2014 ) இவ்வாறு எழுதியுள்ளது. ஞானாலயா பிறந்த கதை கிருஷ்ணமூர்த்தி - டோரதி தம்பதிகள் இருவரும் அரசு துறையில் ஆசிரியப் பணி புரிந்தவர்களே என்பதால் பணிமாற்றம் காரணமாக ஊடகங்களில் பணிபுரிந்து உள்ளார்கள். பல இடங்களில் பணியாற்றி 1979இல் இவர்கள் புதுக்கோட்டைக்கு வந்தார்கள். இவர்கள் கலப்புத் திருமணம் செய்த தம்பதிகள் என்பதால், இவர்களுக்கு வாடகை வீடு தர அங்க...

விஜயா சிவகாசிநான்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -220 விஜயா சிவகாசிநான், ( 18.09.1940) , பெற்றோர் – இராதாகிருஷ்ணன், பாக்கியத்தம்மாள்). சிறுகதை வேந்தர் என அழைக்கப்படுகிறார். புதுக்கோட்டை வடக்கு மூன்றாம் வீதியில் வசித்து வருகிறார். 2002 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் உலகத் தமிழ் எழுத்தாளர் சங்கம்  தொடங்கப்பட்டது.  புதுக்கோட்டை மாவட்டக் கிளையின் தலைவராக இருந்தவர். 1960 முதல் சிறுகதைகள், மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள் எழுதி வருகிறார். சிறுகதை, பெருங்கதை, குறுநாவல், நாடகம், கவிதை என இவரது மொத்த படைப்புகள் – 756. 1980  ஆம் ஆண்டுகளில் இவரது சிறுகதைகள் வராத பத்திரிகைகள் இல்லை. நிறைய எழுதியவர். இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறார்.  பள்ளியில் படிக்கையில் புதுக்கோட்டையில் தீ அணைப்பு நிலையம் புதிதாகத் தொடங்கப்பட்டது. இதன் முன்னிட்டு தீ அணைப்பு வாரம் என்று ஒரு வாரம் கொண்டாடப்பட்டது. அதற்காக நாடகப் போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் இவர் எழுதிய ‘ பயர் ஆபிசர் சண்முகம்’ என்கிற நாடகம் முதல் பரிசு பெற்றது. அதிலிருந்து நாடகம் எழுதுதல், நடித்தலில் பேரார்வம் கொண்டு எழுதத் தொடங்கினார். இவர் எழுதிய தெய்வமலர் கதை...

புதுக்கோட்டை ஆவணப்பதிவுக்கு வித்திட்டவர்

புதுக்கோட்டை ஆவணப்பதிவுக்கு வித்திட்டவர் ( புதுக்கோட்டை எழுத்தாளர் - 131 ) சர். வில்லியம் ப்ளாக்பர்ன்        புதுக்கோட்டை வரலாறு குறித்து எழுதுகையில், வாசிக்கையில், தேடுகையில் பிளாக்பர்ன் என்கிற பெயரைத் தவிர்த்துவிட்டு புதுக்கோட்டை வரலாறை உள்வாங்க முடியாது. யார் இந்த பிளாக்பர்ன்?   புதுக்கோட்டை வரலாற்றில்   ப்ளாக்பர்ன் எனும் பெயரில் இருவர்   இடம் பெறுகிறார்கள். ஒருவர்  சர். வில்லியம் ப்ளாக்பர்ன் , மற்றொருவர் ஜான் ப்ளாக்பர்ன் . முன்னவர் தஞ்சாவூரில்   ஆங்கிலேய அரசின் ரெசிடெண்ட் அதிகாரியாக இருந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாக குழறுபடியால் கலகமும் கலவரமும் நிகழ்ந்தேறியது. அப்பொழுது புதுக்கோட்டையின் பொறுப்பு ரெசிடெண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். இவர் புதுக்கோட்டையுடன் தொடர்புடைய காலம் (1807 – 1825). ஜான் ப்ளாக்பர்ன் என்பவர் யார்? இவர் வில்லியம் ப்ளாக்பர்னின் சகோதரர். ஆங்கிலேய அரசால் புதுக்கோட்டைக்கு நியமிக்கப்பட்ட பொலிட்டிக்கல் ஏஜெண்ட். நவம்பர் 20, 1846 அன்று இப்பதவியில் நியமிக்கப்பட்டார். முன்னவர் கடுபிடியான ஆங்கிலேய அதிகாரி. பின்ன...

அருள்வாக்கி அப்துல் காதிர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -219 அருள்வாக்கி அப்துல் காதிர் ( பிறப்பு -  1866 ஆம் ஆண்டு கண்டி – போப்பிட்டி எனும் கிராமத்தில் பிறந்தவர்). இஸ்லாமிய ஆன்மீகக் கவிஞர், சந்தத் திருப்புகழ்ப் பாடிய புலவர் என அடையாளம் காணப்பெற்றவர். அருள்வாக்கி என்பது பதினாறு வயதில் யாழ்ப்பாணத்தில் புலவர்கள் மத்தியில் தனது செய்யுளாற்றலை வெளிப்படுத்தி 'அருள்வாக்கி' எனும் சிறப்புப் பட்டத்தைப் பெற்றவர். ஈழத்து இஸ்லாமிய இலக்கியத்திற்கு ஒளிபாய்ச்சியவர்களில் ஒருவர். பதங்கள், சிறப்புப் பாயிரங்கள், சாற்றுக்கவிகள், வாழ்த்துக்கவிகள், சரமகவிகள், சீட்டுக்கவிகள் என்று பாடியுள்ளார். இவர் மகாகவி சுப்பிரமணிய பாரதி காலத்தவர். இருபத்து எட்டு நூல்களுக்கும் மேல் எழுதியுள்ளார்.  இவர் இயற்றிய நூல்களில் ஒன்று " திருமயம் காட்டுபாவா சாகிபு ஆண்டவர் காரணக்கும்மி ".  காட்டுபாவா பள்ளிவாசல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஒன்றியத்தில் மிக முக்கியமான வழிபாட்டு தளம். பிராமணப் பெண்களைக் கள்வர்களிடமிருந்து காப்பாற்றி உயிர்த்துறந்தார்.  ஒரு பெரியவர் கனவில் தோன்றி சொன்னதன் பேரில்  நவாப் ஆட்சிக்காலத்தில் காட்டுபாவா உ...

புதுக்கோட்டையின் தலையெழுத்தை எழுதிய நூல்கள் வரிசை -01

( புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 218 ) புதுக்கோட்டை சமஸ்தானக் காலத்தில் நீதிமன்றத்தின் ஆதாரமாக  இரண்டு நூல்கள்  இருந்துள்ளன. ஒன்று ஸ்மிருதி சந்திரிகா . மற்றொரு நூல் குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம். ஸ்மிருதி சந்திரிகா எனும் இந்நூலை எழுதியவர் தெப்பனா பட்டா. இவர் வாழ்ந்த காலம் (1150 - 1225). மைசூர். பிராமணர். சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி கர்நாடக பகுதியை ஆட்சி செய்தான். இவனது ஆட்சிக்காலத்தில் மனுஸ்மிருதி கன்னட மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, அரசவை சட்ட நூலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி மானவ குலம் அல்லது மானவ தர்மம் அனைவருக்கும் போதிக்கப்பட்டது.  அந்நூல் பிராமணர்கள் வாயிலாக வடுகர்கள் ஆட்சி செய்த ஆந்திராவிற்குள்ளும் சோழர்கள் ஆண்ட தமிழகத்திற்குள்ளும்  இறக்குமதியானது. தென் இந்தியாவில் மனுஸ்மிருதி வியாபிக்க காரணமாக இருந்தது தக்காணத்தின் மையம் என சொல்லப்படுகிற கர்நாடகம். மநு ஸ்மிருதி அரசின் மையம் மைசூர் ஆனது. பிரிட்டிஷார் ஆட்சி தமிழகத்தில் ஆழமாக காலூன்றும் வரை  ஸ்மிருதி சட்டங்கள் நடைமுறையில் இருந்தன.  புதுக்கோட்டை தனியரசாக விளங்கியதால் சுதந்திர...

காரை வீரைய்யா

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 217 காரை வீரைய்யா,  (பிறப்பு -1950; பெற்றோர் சுப்பையா - சீதையம்மாள்) புதுக்கோட்டை காரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர். சமூக நல ஆர்வலர். துணை வட்டார வளர்ச்சி அலுவலனாகப் பணியாற்றி ஓய்வு பெற்றபின் எழுத்துப் பணியின் மூலம் சமூகத்திற்குத் தொண்டு செய்கிறார். பல நூல் எழுதியுள்ள இவர் அணு ஆயுத வெள்ளமும் தீவிரவாத தீயும் என்ற நூல் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தனிமனித ஒழுக்க வாழ்க்கையே ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் என்கிற கருத்தை தன் எழுத்து வழி வலியுறுத்துபவர். ஆசை பொல்லாதது (1979), சமாதானப் புறா ( 2006) அன்பு பெருகட்டும் மோதல் குறையட்டும் ( 2010 ) அணு ஆயுத வெள்ளமும் தீவிரவாதத் தீயும் ( 2018) இது சரவெடி அல்ல சாட்டை அடி - கவிதைகள் ( 2019) என ஐந்து நூல்கள் எழுதியுளளார். இது சரவெடி அல்ல சாட்டை அடி - கவிதைகள் எனும் இத்தொகுப்பு மனித சமூக அவலங்களை எடுத்துக் கூறும் எச்சரிக்கை மணி மற்றும் விழிப்புணர்வு கவிதைகள். இத்தொகுப்பில் ஏழைத் திருடனும் பணக்காரத் திருடனும் என்றொரு கவிதை.  பசித்திருடன்,  பக்குவத் திருடன், உல்லாசத் திருடன், அடாவடித் திருடன்,  ...

வைரநதி

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 216 வைரநதி , இயற்பெயர் - வைர.ந.தினகரன் . (பெற்றோர் - வைர.நமசிவாயம், யோகம்பாள் தம்பதியினர்). பெற்றோர் பெயர்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு வைரநதி என்று புனைபெயராக மாற்றிக்கொண்டவர். புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயிலுக்கு அருகில் 12 ஆம் நூற்றாண்டில் வீரசோழியம் எழுதிய புத்தமித்திரன் வாழ்ந்த புண்ணியபூமியாம் பொன்பேத்தி- பேரானவூரில் பிறந்தவர்.  சமூகவியல் மற்றும் நூலக தகவல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள இவர் தற்பொழுது நூலக தகவல் அறிவியலில் ஆராய்ச்சி படிப்பு (Ph.D.) மேற்கொண்டுள்ளார். ஒரு நதியின் கீதம் (2007) விழித்தெழு தமிழா ( 2009) என்று இரு நூல்கள் எழுதியுள்ளார். ஒரு நதியின் கீதம், எனும் இந்நூல் புற உலகவாழ்வில் தனது மனதைப் பாதித்தவைகளைக் கருவாகக் கொண்டு வெவ்வேறு கால கட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகளின் தொகுப்பு. கீதம் என்றால் என்ன? காதல் கீதமா? மகிழ்ச்சிக் கீதமா? சோகக் கீதமா? புரட்சிக் கீதமா? நதி கீதம் பாடுமா? நதி கீதம் பாடும். நதி பாடும் கீதத்தைக் கேட்டு ரசிப்பவர்கள் பலர் உண்டு. இந்த நதியின் கீதம் காதல், சோகம், புரட்சி, மகிழ்ச்சி, சமூகம், த...

புதுக்கோட்டை எழுத்தாளர் - 215

புதுக்கோட்டை எழுத்தாளர் - 215 (  புதுக்கோட்டையின் முதல் சர்ச்சை எழுத்தாளர் மற்றும்  நூல் ) ஆவுடையார் வழக்குரைத்த அம்மானை, இந்நூலை இயற்றிய புலவர் யாரென்று தெரியவில்லை. "திருப்பெருந்துறையெனும் ஆவுடையார்கோயில் ஆவுடையார் வழக்குரைத்த அம்மானை' என்னும் நூல்  தஞ்சை மாவட்டம் ( அன்றைக்கு) ஆவுடையார் கோவிலிலிருக்கும் பெரியய்யா பிள்ளை குமாரர் கதிர்வேல் பிள்ளையிடமிருந்த ஏட்டுப் பிரதியாகும். இதனை ஆவுடையார் கோவிலிருக்கும் வெங்கிடாசலத் தேவர் குமாரர் சேங்கியப்பத் தேவர், காமாட்சி பிள்ளை குமாரர் வேலாயுதம் பிள்ளை வேண்டியபடி புதுக்கோட்டை புத்தக வியாபாரம் அரங்கசாமி நாயுடு சங்கநிதி விளக்க அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப் பெற்றது. ஆண்டு கி.பி. 1910, குறும்பர்-குறும்ப வேளாளர்-காராளர் ஆனபூர்வ குடிகளை  பிராமணர்களுக்காக பாண்டியன்  விரட்டியடித்தான். அந்தணர்களுக்கு எதிராக குறும்பர்களுக்கு உதவியவர் மாணிக்கவாசகர் என்று சொல்லும் நூலாக ' ஆவுடையார் வழக்குரைத்த அம்மானை' என்கிற நூல் பாடப்பட்டுள்ளது .  திருப்பெருந்துறை இருக்கும் இடம் கான நாடு. அது குறும்பர் நாடாக இருந்தது. வடக்கே இருந்து வரவழைக...