முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மங்களா

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 211   மங்களா , இயற்பெயர் ஆர். மங்களராஜ், (  பெற்றோர் – ராஜீ, ரஞ்சிதம்), பாரதிதாசன் இல்லம், மச்சுவாடி.  பேராசிரியர், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  கவிதை, கட்டுரை, ஆய்வு, சிறுகதை, நாவல் என்று பன்முகமான படைப்புகள் தந்தவர். தனிமரம், சேர நன்னாட்டிளம் பெண்களுடனே இரு சிறுகதைத் தொகுப்புகள்; நிம்மதி, ராகம் தவறிய பாடல்கள், போலிகள் என மூன்று நாவல்கள், கோட்டின் கீழே புள்ளி, எட்டயப்புரத்துக் குடில் என கவிதைத் தொகுப்புகள், குருதிப்புனல் நாவல் ஒப்பாய்வு- ஆய்வு நூல், புதியதோர் உலகம் செய்வோம் ( நாடகத் தொகுப்பு)  என பல படைப்புகள் தந்தவர். இவரது கடைசி நூல் ‘ ஒரு முடிவின் தொடக்கம்’.  இவரது ‘ கோட்டின் கீழே புள்ளிகள் ’ எனும் நெடுங்கவிதை ‘ யுனிவர்சிட்டி டுடே’ என்கிற டெல்லி பத்திரிகையில் ஆங்கில மொழியாக்கம் பெற்றது. மேலும் இக்கவிதை கும்பகோணம் அரசு தன்னாட்சிக் கல்லூரியில் பாடமாக இடம் பெற்றது. மேலும் ‘வாழவிடுங்கள்’ என்கிற சிறுகதை மலையாளத்தில் அட்சரம் என்கிற பத்திரிகையில் வெளியானது. இவரது ‘அறிவு ஜீவி’ என்கிற கவிதை ‘ பார...

சாமி. பழனியப்பன்

புதுக்கோட்டை எழுத்தாளர் -210 சாமி . பழனியப்பன், புதுக்கோட்டை மாவட்டம் புதுப்பட்டியைச் சேர்ந்தவர். இவர் தொழிற்பொருட்டு  கொழும்பில் வசிக்கையில் அங்கு  வீரகேசரி இதழில்  துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.  1947 ஆகஸ்ட் 15, இந்தியா சுதந்திரமடைய அந்தச் சுதந்திரத்தை விமர்சிக்கும் பொருட்டு ' யாருக்குச் சுதந்திரம் ?' என்ற கவிதையை எழுதி அனுப்ப புதுக்கோட்டையில் இயங்கிய வந்த  பொன்னி இதழ் அக்கவிதையைப் பிரசுரம் செய்தது. இக்கவிதையால் தமிழகத்திலும் கொழும்பிலும் சர்ச்சையானது. இதனால் வீரகேசரி ஆசிரியருக்கும் கவிஞருக்கும்  கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஆகவே சாமி பழனியப்பன் வீரகேசரி பத்திரிகையிலிருந்து விலகித் தமிழகம் திரும்பினார். பின்னர்  அக்கவிதைக்கு எதிரான கொந்தளிப்பை அமைதிப்படுத்த  ' அமைதி கொள்க ' என்றொரு கவிதையை எழுதினார். அக்கவிதையை 1947 நவம்பர் பொன்னி இதழ்  வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரை கவிஞராக ஏற்றுக்கொண்டது.  'தமிழகம்' திரும்பிய இவர் பின்னர் ' பொன்னி ', 'வாரச்செய்தி', 'தமிழகம்', 'தென்றல்' முதலிய பத்திரிகைகளில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார...

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...

பா.சு.ரமணன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 208 பா.சு.ரமணன் , இயற்பெயர் பா. சுவாமிநாதன் , பிறப்பு - ஆவுடையார் கோவிலுக்கும் அடுத்து குடிகாடு. தற்போது சென்னையில் வசிக்கிறார். எழுத்தாளர். பத்திரிகையாளர். அரவிந்த்,  அரவிந்த் சுவாமிநாதன், சிசுபாலன்,  அரவிந்த் செல்லையா ஆகிய புனைப்பெயர்களில் படைப்புகள் தருகிறார். சித்திரக் கவிஞர் அ.ப.சுவாமிநாத சர்மா அவர்களின் பேரன்.  வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ' தென்றல் ' மாத இதழின் இணை ஆசிரியர். ஆன்மீகம் தொடர்பான பத்தி எழுத்துகள், தொடர், கட்டுரைகள் எழுதி வருகிறார். ஆனந்த விகடன் இவரது படைப்புகளை நூலாக்கம் செய்துள்ளன.  சித்திரக் கவி மீது ஈடுபாடு கொண்டவர். இந்த வடிவக் கவிதைகள் குறித்தும் சித்தர்கள், சிறு தெய்வங்கள்,  தேவதைகள் குறித்தும் கட்டுரைகள் எழுதி வருகிறார். வரம் தரும் அன்னை, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர், சத்குரு சேஷாத்ரி சுவாமிகள், குரு தரிசனம் இவர் எழுதிய நூல்களில் முக்கியமானவை. இவரது தந்தை ப.சு.பாலசுப்பிரமணியன் எழுத்தாளர். இலக்கிய ஆர்வலர். கதை, சிறுகதை, நாடகம் எழுதியுள்ளார். ஆனந்த விகடன் இதழில் முத்திரை கதைகள் எழுதி பரிசு பெற்றவர்....

ஆ.ப. சுவாமிநாத சர்மா

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 207 ஆ.ப. சுவாமிநாத சர்மா .  புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோயிலை அடுத்த குடிக்காட்டில் செப்டம்பர் 4, 1900 அன்று பிறந்தவர். தமிழ்ப்புலவர். கோனாபட்டு சரசுவதி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசியராகப் பணியாற்றியவர். முருகப் பக்தர். முருகன் மீது பல்வேறு தோத்திரப் பாடல்கள் பாடியவர். இவர் எழுதிய நூல்களில் வரத கணேசர்  தோத்திரப் பாமாலை,  சுவாமிநாதன் தோத்திரக் கொத்து,  குன்றை மும்மணிக் கோவை, சுவாமிநாதன் சித்திரக் கவிகள், கணிதம் பற்றி  இவர் எழுதிய கணக்கியல்  நூல்கள் முக்கியமானவை. ‘ சந்தச் சரபச் சித்திரப் பாவல ஆசான், மதுரவரகவி’ என்றெல்லாம் போற்றப்பட்டவர். இளம் வயதிலேயே இவருக்கு ஆசுகவியாகத் தமிழ்ப் பாடல்களைப் பாடும் ஆற்றல் வந்தது. தமது 23ம் வயதில் சுவாமிமலை முருகன் மீது பாடல்கள் புனைந்து அதை  ‘ சுவாமிநாதன் தோத்திரக் கொத்து’ என்னும் பெயரில் வெளியிட்டார். தொடர்ந்து ‘சித்திரக் கவி’ இலக்கணத்தைத் தாமாகவே பயின்று தேர்ந்தார். முரசு பந்தம், மயூர பந்தம், நாக பந்தம், அட்ட நாக பந்தம், கூடச் சதுக்க பந்தம், ரத பந்தம் என்று பல நூற்றுக்கணக்கான சி...

ப.சிகாகிரீசன்,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 206 ப.சிகாகிரீசன் ,  புலவர். தமிழ்ச்சுடர்,  சொற்பொழிவுச் செம்மல் என்று அழைக்கப்பட்டவர்.  1961 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் உரையாற்றிய கி.வா.ஜ " அனுபூதிக்கு ஒரு அருணகிரி. அருந்தமிழுக்கு ஒரு சிகாகிரி" என்று பாராட்டுப்பெற்றவர். சிகாகிரி என்பது குடுமியான்மலை சிவனின் பெயர். இவர் புதுக்கோட்டை கோனாபட்டில் பிறந்தவர். இவரது தந்தையார் பஞ்சாபகேச தீட்சிதர் சமஸ்தான ஆஸ்தான வித்வானாக இருந்தவர். மேலும் புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் உயர்நிலைப் பள்ளி உருவாகக் காரணமாக இருந்தவர். சிகாகிரீசன்,  ஸ்ரீ புவனேஸ்வரி விஜயம் மாத இதழைத் தொடங்கி அதன் ஆசிரியராக இருந்தார். திருக்கோகர்ணம்,  கீரனூர், பெருங்களூர்,  காந்திநகர் பள்ளிகளில் தமிழாசிரியராக இருந்தவர். கம்பராமாயணம் சொற்பொழிவுக்குப் பெயர் போனவர். இவரது சொற்பொழிவைப் பாராட்டி அன்றைய அறநிலையத் துறை அமைச்சர் கே.வி.சுப்பையா, ' கம்பன் கவியமுதன் 'என்கிற பட்டத்தைக் சிகாகிரீசனுக்கு வழங்கினார். புதுக்கோட்டை திலகவதியார் திருவருள் ஆதீனம் இவருக்கு உபன்யாச சிரோமணி எனும் பட்டத்தை வழங்கியது. மேலும் இவர...

'சக்தி’ சித்தார்த்தன்.

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 205 ‘சக்தி’ சித்தார்த்தன் . இவரது இயற்பெயர் கு.சிவசுப்பிரமணியன் . இலக்கிய வித்தகர் என்று அழைக்கப்பட்டவர். பிறப்பு திருமயம் . தற்போது பெங்களூரில்  வசித்து வருகிறார். மாணவர் பருவத்தில் ‘சக்தி’ எனும் புனைப்பெயரில் கவிதைகள் எழுதியதால்  பெயருக்கும் முன்னே சக்தி சேர்ந்துக்கொண்டது. மாணவர் பருவத்தில் ‘விவேகானந்தர்’ என்கிற கையெழுத்து பிரதியை நடத்தியவர். இவர் கடியாபட்டியில் படிக்கின்ற பொழுது அப்பள்ளிக்கு பெருந்தலைவர் காமரா்ஜர் வருகைத் தந்தார். அவ்விழாவில் பாரதியார் பாடலைப் பாடி பெருந்தலைவரிடம் பாராட்டுப் பெற்றவர். ‘கல்பனா’ என்ற மாத இதழுக்குச் சில ஆண்டுகள் ஆசிரியராக இருந்துள்ளார்.         தமிழ்நாடு கலை இலக்கிய மன்றத்தின் மாவட்டச் செயலாளராக இருந்தவர். தோழர் ஜீவானந்தம் தொடங்கிய கலை இலக்கியப் பெருமன்றத்தில் ஈடுபாடு கொண்டு செயலாற்றியவர். மீ.சேதுராமன், புதுகைத் தென்றல் மு.தர்மராஜன் தொழிற்சங்கத் தலைவர் ஜகன் உடன் இணைந்து புதுக்கோட்டை நகர்மன்றத்தில் பாரதி விழா நடத்தியிருக்கிறார்.        சித்தா...

சி.ஆ.வெ.இராமலிங்க செட்டியார்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 204 சி.ஆ.வெ.இராமலிங்க செட்டியார் , சுப்பிரமணியபுரம். ஸ்ரீகந்தரம்மானை இவர் எழுதிய நூல். சிதம்பரம் ஸ்ரீசிவராமன் செட்டியார் பரிசோதித்து தஞ்சாவூர் மாநகரம் ஸ்ரீ வித்யா விநோதினி அச்சுக்கூடத்தில் இந்நூல் அச்சிடப்பட்டது. ஆண்டு 1912. பக்கங்கள் – 266. இந்நூல் முருகவேளின் கதையைப் பாடுகிறது. கச்சியப்ப சிவாசாரியசுவாமிகள் கந்தபுராணம் அருளினார். அதனைச் சுருக்கி தருமபுர ஆதினத்துச் சம்பந்த சரணாலய சுவாமிகள் புராணம் அருளினார். இவ்விரு நூல்களையும் ஆழ்ந்து கற்றுணர்ந்து யாவரும் பொருள் விளங்கி இனிது படிக்கும் பொருட்டு சி.ஆ.வெ. இராமலிங்க செட்டியார் ஸ்ரீகந்தரம்மானைப் பாவாய் இயற்றியுள்ளார். உற்பத்தி காண்டம், அசுரகாண்டம், மகேந்திர காண்டம், யுத்த காண்டம், தேவகாண்டம், தட்ச காண்டம் என ஆறு காண்டங்களைக் கொண்டது. இந்நூல் காப்பு, சிவருமான்துதி, உமாதேவியர் துதி, விநாயகர் துதி, சுப்பிரமணியர் துதி, வீரவாகுதேவர் துதி, சமயகுரவர்கள் துதி, கச்சியப்ப சிவாசாரியாரி துதி ஆகிய துதிகளைக் கொண்டு இந்நூல் இயற்றப்பட்டுள்ளது. இந்நூல் அரங்கேறிய விதத்தை நூலாசிரியர் இவ்வாறு பாடுகிறார் ‘சுந்தர வினாயருஞ்...

மு.ரா.கந்தசாமிக் கவிராயர்

 புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 203 ( புதுக்கோட்டையை எழுதிய நூல்கள்) அரிமழத்தலபுராணம் - மூலமும் குறிப்புரையும், இந்நூலை எழுதியர் மு.ரா.கந்தசாமிக் கவிராயர் . இவர் சமஸ்தான வித்வான் ஸ்ரீமத் இராமராமிக் கவிராயரின் குமாரர். மதுரை விவேகபாநுப் பத்திராதிபர் . இந்நூலை இயற்றும்படி கேட்டுக்கொண்டவர் அரிமழம் மு.அ.செ. முத்தையா செட்டியாரின் குமாரர் செல்லப்ப செட்டியார். இந்நூல் இயற்றப்பட்டு வெண்பாக்களைப் பரிசோதித்தவர், சே.ரா. சுப்பிரமணியக் கவிராயர். 1907 ஆம் ஆண்டு மதுரை விவேகபாநு அச்சியந்திரசாலையில் பதிக்கப்பட்டது. இந்நூலின் மொத்தப் பக்கங்கள் – 165. அரிமழத்தார் என்பது சிவபெருமான். இந்நூலுக்கு சாற்றுக்கவிகள் நால்வர் எழுதியுள்ளார்கள். அரிமழம் ஸ்ரீசிவாந்நதசுவாமி, அவரது மாணாக்கரும் ஸ்ரீ கா.ந.நரசிம்மசாஸ்திரியின் புத்திரருமாகிய ஸ்ரீ காமாட்சி சாஸ்திரி மற்றும் சோழவந்தான் வித்துவான் ஸ்ரீமத் அ. சண்முகம்பிள்ளை, முறையூர் ஸ்ரீமாந்பழ.சி.ஷண்முகஞ்செட்டியாரின் புதல்வர் சமூக வித்துவான் கொட்டாம்பட்டி மகா ஸ்ரீ கருப்பையாப் பாவலர் என நால்வர் எழுதியுள்ளனர். இந்நூலில் வாழ்த்துப் பாடலுக்கும் முன்பாக பரமசிவன், உமையம...

மணல்மேல்குடி, கவி.வெண்ணிலவன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -202 மணல்மேல்குடி, கவி.வெண்ணிலவன் . இயற்பெயர் - பா.வெற்றிவேல் . ஊர் - மணமேல்குடி. இவரது சித்தி மகள் தங்கையின் பெயர் வெண்ணிலா .  தங்கை அவரது மீது காட்டிய அன்பு, பாசத்தின் பேரால் தனது பெயரை வெண்ணிலவன் என்று மாற்றிக்கொண்டார். வெண்ணிலாவின் தோழி கவிதா இவரது மீது பாசம் காட்டியதால் வெண்ணிலவன் எனும் புனைப் பெயருக்கும் முன் கவி சேர்த்துக்கொண்டு மணமேல்குடி கவி. வெண்ணிலவன் எனும் புனைபெயரில் எழுதி வருகிறார். சிறுகதையாசிரியர்,  கவிஞர், நாடக ஆசிரியர். சிறுகதை, கவிதை, வானொலி நாடகங்கள்  என 127 படைப்புகள் எழுதியுள்ளார். மணமேல்குடி ஸ்ரீ ஜெகதீஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர். உலகத் திருக்குறள் பேரவையின் மணமேல்குடி கிளைத் தலைவர். வெற்றி வெளிச்சம், இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. ஆண்டு -2005. வேமன் பதிப்பகம். ஆசியுரை பொன்னம்பல அடிகளார். வெற்றி வெளிச்சம் எனும் தலைப்பிட்ட சிறுகதை அய்யனார் கோவிலில் மீது ஊர் கொண்டுள்ள பக்தியைக் காதல் கொண்டு பேசுகிறது. வைதேகி, ராஜேஷ் இருவரும் ஒரே ஊரைச் சார்ந்த மாற்றுச் சமூகத்தவர். இருவரும் காதலிக்கிறார்கள். அவ்வூர் அய்ய...