புதுக்கோட்டை எழுத்தாளர் -201 புத்தமித்திரர் , புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து இருபத்தைந்து கல் தூரத்தில் தென்கிழக்கு கடற்கரையொட்டியுள்ள பொன்பற்றி எனும் ஊரில் பிறந்தவர். வீர ராசேந்திர சோழ மன்னன் அதிகாரத்திற்குட்பட்ட சிற்றரசராக ஆட்சிப்புரிந்தவர். புத்த மதத்தவர். இந்நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி 1063 - 1070. இவர் வீரசோழியம் எனும் இலக்கண நூலைப் படைத்தார். இப்பெயர் வீர ராசேந்திர சோழனைக் குறிக்கும். " மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன், மெய்தவத்தால் தொக்கவன், யார்க்கும் தொடரவொண்ணாதவன், தூயனெனத் தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப் புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே " எனும் வரும் முதற் செய்யுள் மூலம் இவர் பொன்பற்றி எனும் ஊரைச் சேர்ந்தவர் அறியமுடிகிறது. " தேமேவிய தொங்கற் நேர்வீர சோழன் திருப்பெயரால் பூமே லுரையப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே " என்று பாடியுள்ள அடிகள் மூலம் இந்நூலை இயற்றிவித்தவன் வீரராசேந்திர சோழ மன்னனாவான் என அறியமுடிகிறது. வீரசோழியம் வடமொழி இலக்கண விதியைத் தன்னகத்தே கொண்ட நூல். எழுத்து, சொல், பொருள், ய...
அண்டனூர் சுரா