புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 126 அழ.கணேசன் , அழகப்பன் கணேசன். கணேஷ் நகர் (நெடுவை), சத்தியமங்கலம், குளத்தூர் வட்டம். நார்த்தாமலை. கறிக்கடை நடத்துகிறார். மெத்தப் படித்தவர்கள்தான் கவிதைகள், கட்டுரைகள் எழுத முடியுமென்கிற கருத்தை முழுமையாக உடைத்திருப்பவர். மூன்றாம் வகுப்பு கூட முழுதும் முடிக்காத இவர் ஆறு நூல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார். இந்தியாவிலுள்ள பல நகரங்களையும் பல நாடுகளையும் சுற்றி வந்தவர். இவரது முதல் கவிதை சிங்கப்பூர் இதழில் வெளியான அற்புத சிங்கபுரம் என்கிற கவிதையாகும். ஆனந்த ஜோதி, சாரல், கீதம், உரத்த சிந்தனை உட்பட பல இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன. கண்ணால் காண்பது அனைத்தையும்/ கற்றுமுடி/ இல்லையேல் செத்து மடி என அறம் பாடுகிறவர். இவரது முதல் கவிதைத் தொகுப்பு எளியவனின் ஏணிப்படிகள் , புதுக்கோட்டை மீரா பதிப்பகம் மூலம் வெளியானது. மனதைப் பாரமாக்கிய புத்தக வரிகள், இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையிலாடும் ஊஞ்சல் ஆகிய நூல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன. கவனத்தில் கொள்ளவேண்டிய கவிதைகள் எனும் இத்தொகுப்பு , மணிமேகலை பி...
அண்டனூர் சுரா