முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கந்தர்வன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 160 கந்தர்வன் , இயற்பெயர் க.நாகலிங்கம் . கவிஞர், எழுத்தாளர், விமர்சகர், பேச்சாளர். வளரும் படைப்பாளர்களைத் தம்பி எனத் தட்டிக் கொடுத்து வளர்த்தெடுத்தவர். இளம் வயதில் அரசுப் பணிக்கு வந்துவிட்ட இவர், அவசர பிரகடனம் காலத்தில் இருபது மாதங்கள் வேலை இழந்து பின்னர் வேலையில் சேர்ந்தவர். இவரது பிறப்பிடம் இராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் என்கிற கிராமம். இவரது தந்தையார் கணேசன் விடுதலைப் போராட்ட வீரர். 1983 ஆம் ஆண்டு வேலை மாறுதலால் புதுக்கோட்டைக்கு வந்தவர், இவ்வூரைச் சொந்த ஊராக மாற்றிக்கொண்டார். அரசு வருவாய்த் துறையில் மாவட்ட கருவூல அதிகாரியாக பணியாற்றி பணிநிறைவு பெற்றார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவராகவும், மாநில பொறுப்புகளிலும் அங்கம் வகித்தவர். தீவிர இடதுசாரியாக, தொழிற்சங்கவாதியாக திகழ்ந்தவர். ‘மக்கள் எழுத்தாளர் சங்கம்’ தோன்ற காரணமானவர்களில் ஒருவர். பிறகு இச்சங்கம் ‘தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்’ என்றானது. இச்சங்கத்தின் மாநில துணைத் தலைவராக செயலாற்றினார். பேசுவதைப் போல எழுதவும் எழுதுவதைப் போல பேசவும் செய்தவர். ‘லா.ச.ராவுடன் ஒரு அழுத்தமான உரையாடல்’,...

மு.பெரியசாமி

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 159 மு.பெரியசாமி , கால்நடைத் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். அங்காளம்மன் கோவில் தெரு, எம்.ஆர்வி காலனி, அறந்தாங்கி . எல்லாச் சுவரங்களிலும் என் இசை ( கவிதைகள்) இவரது சமீப கவிதைத் தொகுப்பு. இளமை ஒரு கனாக்காலம் மட்டுமல்ல, நிலாக்காலம் என்று சொல்லும்படியாக இயற்கையை நேசித்து வாசிப்பதற்கு வண்ணமுது தரும் கவிஞர். இந்நூலுக்கு அணிந்துரை அறந்தாங்கித் தமிழ்ச் சங்கம் முனைவர் சே.யோ.இளங்கோவன், வாழ்த்துரை சித்தாந்த புலவர் வீ. ரெங்கையா தந்துள்ளார்கள். தழைக்கும் வாழ்வொரு நாள், தேடிவரும் உனக்காக, வரும் நாள் பாடம், தோற்கடி தோல்வியை, கடலே இனிக்குமென்று, கடல் கொண்ட நீர் என கவித்துவமான தலைப்புகள் கொண்ட கவிதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் ஒரு கவிதை தழைக்கும் வாழ்வொரு நாள் எரியும் விளக்கிருந்தால் இரவுக்கு ஒளியுமுண்டு அறியும திறனிருந்தால் அறிவுக்கு வளர்வுமுண்டு அறியாமை இருள் விலக்க தெரியாத மக்களுக்கு திரியாய் எரிந்து நீ திசையெங்கும் வெளிச்சமிடு எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பதிலே பயனில்லை நல்லவர்கள் நல்லதென் நவிழ்வதிலே நலமுண்டு பொல்லார்கள் புகழ்வதர்...

ஜெ.ஜான் தேவசகாயம்

  புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 158 ஜெ.ஜான் தேவசகாயம், புதுக்கோட்டை. விவாகரத்து , தள்ளிவிடுதல் – DIVORSE. இவரது முதல் நூல்.  விவாகரத்துப் பற்றி பரிசுத்த வேதம் என்ன சொல்கிறது, என்பதைச் சுருக்கமாக சொல்லும் புத்தகம் இது. வேதத்தின் பார்வையில் விவாகரத்து முற்றிலும் தவறானது. அது பாவம் என்பதை இப்புத்தகம் வலியுறுத்துகிறது. தேவன் இணைத்ததை மனிதன் பிரிப்பது பாவம். கணவன் மனைவி பிரிவுக்கு இடம் கொடுக்காமல் இருவரும்  ஐக்கியப்பட்டு சேர்ந்து வாழ்வதற்காக குறிப்புகளை இந்நூல் தருகிறது. 

சுப.ராதாபாய்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 157 சுப.ராதாபாய் , பொருளாதாரத் துறையில் இளங்கலைப் பட்டம்,  மக்கள் தொகையியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தில் செவிலியர் பணியினைத் திறம்பட ஆற்றி ஓய்வு பெற்றவர். சிறந்த சேவைப் பெண்மணி,  சிறந்த செவிலியர், சிறந்த கவிஞர் விருதுகள் பெற்றவர். ஒரு சிறுகதைத் தொகுப்பும் ஏழு ஆய்வுக்கட்டுகரைகளும் படைத்துள்ளார். வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் பட்டிமன்றங்கள் நடத்தியவர்.  தமுஎகச நடத்திய 200 கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கில் பங்கேற்று கவிஞர் மு.மேத்தா அவர்களால் சிறப்பிக்கப்பெற்றவர். நிஜத்தில் நிழல் எனும் இச்சிறுகதைத் தொகுப்பு புதுகைத் தென்றல், தினத்தந்தி, ராணி இதழ்களில் வெளியான கதைகளின் தொகுப்பு. பன்னிரெண்டு சிறுகதைகளைக் கொண்டிருக்கிறது. கடவுளின் பரிசு என்றொரு சிறுகதை. புதுக்கோட்டையின் புறநகர்ப்பகுதி பூங்குடியை மையமாகக் கொண்ட கதை. ஒரு தம்பதி குழந்தைகள் இல்லாமல் தவிக்கிறார்கள். குழந்தை பேறு இல்லாமைக்கு கணவரும் மனைவியும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொள்கிறார்கள். குழந்தை பேறு தள்ளிப் போகிறது. ஏதேனும் ஒரு குழந்தையைத் த...

வீ. மாரிமுத்து

  புதுக்கோட்டை எழுத்தாளர் -156 வீ. மாரிமுத்து, வீரையா - மாரிக்கண்ணு இவர்களின் மகனார். கவிஞர், ஆசிரியர் பயிற்சி முடித்து பள்ளியில் பணியாற்றுகிறார். மாங்கனாம்பட்டி, வம்பன் காலனி, ஆலங்குடி.  சிவப்புக்கோடிட்ட பாடங்களில் தேர்ச்சி. ..எனும் இந்நூல் கவிஞரின் முதல் தொகுப்பு. முனைவர் சு. மாதவன் அவர்கள் நூலின் அணிந்துரையோடு தன் மாணவன் என்கிற பெருமையில் அவரது கவிமையைக் கண்டு உச்சி முகர்ந்து வாழ்த்துகிறார். கவிமாரிப் பொழிய வருகிறான் கவி மாரி... இவனிடம் கவிமேகங்கள் கருக்கொண்டுள்ளன இது தொடக்கமழை! இனிமேல் தொடர் மழைதான் எதிர்பாருங்கள் முத்துக்கள் விதைப்பான் வித்தைகள் சமைப்பான் எத்திக்கும் நிறைப்பான்! வாழ்க! வளர்க!சிறக்க!,  என்று. வாழ்த்துரை  தந்திருக்கும் கவிஞர் வம்பன் செபாவுக்கு இவர் கவிதைக்குழந்தையாகவும் இவரது விரல் பிடித்து நடந்து இவர் பிடிக்கும்  பேனாவையும் பிடித்தவராக இருக்கிறார்.  செபா- வின் வேரில் துளிர்த்த இணைமரம் வீ.மாரிமுத்து, இதை நினைக்கவே நெஞ்சு பூச்சொரிகிறது. இவரது கவிதைகள்  காதல், ஏழ்மை, சமத்துவம்,  நட்பு,  உறவுகள், தமிழ், விவசாயம்...

சுப்பிரமணிய பாரதி

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 155 சுப்பிரமணிய பாரதி , புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில்  குடுமிமாமலையில் பிறந்தவர். இவரது தந்தையார் வைத்தீசுர தீட்தர். இவரது காலத்தைச் சரியாக கணிக்க முடியவில்லை. பொருட்டொகை நிகண்டு , இந்நூலை இயற்றியவர் சுப்பிரமணிய பாரதியவர்கள் என்றாலும இந்நூலைப் புதிப்பித்து வெளிக்கொணர்ந்தவர் சே.ரா.சுப்பிரமணியக் கவிராயர். இவர் திருவாவடுதுறையாதீனவித்துவான், மதுரைத் தமிழ்ச்சங்கத்துச் சைவ நூற்பரிசோதகருமாக இருந்தவர். இந்நூலை வெளியிட்டது மதுரை தமிழ்ச்சங்கம், பாண்டித்துரை தேவர் அவர்கள். நிகண்டு என்றால் சொற்களஞ்சியம், சொற்றொகை என்று பொருள். அகராதி என்றும் பொருள் கொள்ளலாம். சூடாமணி நிகண்டு, திவாகர நிகண்டு வரிசையில் பொருட்டொகை நிகண்டு முக்கிய இடம் வகிக்கிறது. சிவமயம், கணபதி துணையை வேண்டி, விநாயகர்துதியுடன் நிகண்டு தொடங்குகிறது. அருட்கடல் விநாயக னடியிணை யிறைஞ்சிப் பொருட்டொகை நிகண்டினைப் புகலுது மியாமே - என்பது நிகண்டின் முதல் பாடல். ஒரு பொருள், இருபொருள், முப்பொருள், நாற்பொருள், ஐம்பொருள், ஆறுபொருள், ஏழு பொருள், எண் பொருள், ஒன்பது பொருள், பத்துப்பொருள், பத...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...

வீ.செல்லப்பன்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 153 வீ.செல்லப்பன் , தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தந்தை பெரியார் இல்லம், சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை. தமிழ்மன்றம், நுகர்வோர்குழு கூட்டுறவுச்சங்கம்,  பகுத்தறிவு பணிகளில் பங்களிப்பு செய்கிறவர். தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் எனும் இந்நூல் பணி ஓய்வுக்குப் பிறகு இவர் எழுதிய முதல் நூலாகும். ஒரு மொழியில் எழுத்துக்கள் அமையும் முறைகள், தமிழ் மொழியில் அமைந்துள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை, திருந்தாத் தமிழ் நெடுங்கணக்கு, தற்போதுள்ள தமிழ் எழுத்து முறையால் ஏற்படும் கேடுகள், பழைய எழுத்துமுறைகள், இதுநாள் வரை மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்கள், தமிழக அரசின் எழுத்துச் சீர்திருத்த ஆணை, தற்போது எழுத்து முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்,தமிழ் எழுத்துச் சீரமைப்பால் ஏற்படும் நன்மைகள் , எழுத்துச் சீர்திருத்தம் வேண்டும் தமிழறிஞர்கள் கருத்துக்கள் ஆகிய தலைப்புகளைப் பொருளடக்கமாகக் கொண்ட நூல் இது. " ஒரு மொழியானது எந்த அளவிற்குத் தொன்மை வாய்ந்தது என்று கூறுகிறார்களோ,  அந்த அளவிற்கு அம்மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று ...

கலியராஜன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 152 கலியராஜன் , புதுக்கோட்டையில் பிறந்தவர். இவரது தந்தையார் திருமலைச்சாமி அஞ்சல் துறையில் பணியாற்றியவர். இவரது இளமைக் காலம் புதுவயல், கண்டனூர், பள்ளத்தூர், கோட்டையூர், கானாடுகாத்தான் என புதுக்கோட்டையையொட்டியுள்ள  செட்டிநாட்டு ஊர்களில் கழிந்தது. பள்ளிப் படிப்பைப் புதுக்கோட்டையில் முடித்த இவர் செயின்ட் ஜோசப் கல்லூரியில் பொறியியல் படித்தார். அப்போது இவருடன் வகுப்புத் தோழராகப் படித்தவர்கள் முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் திரு . ஏ.பி.ஜெ. அப்துல்கலாம், பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள். பொறியியல் பட்டப் படிப்பு முடித்தவுடன் பொதுப்பணித் துறையில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. உடுமலை அமராவதி அணைக்கட்டுத் திட்டத்தில் பங்கேற்று பணியாற்றினார். பின்னர் காரைக்குடி, மதுரை தூத்துக்குடி, கோவை, உதகை போன்ற நகரங்களில் பாலிடெக்னிக்  முதல்வராகப் பணியாற்றி 1991 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். பணியின் பொருட்டு கோவையில் குடியேறி கோவைவாசியானாலும் இவர் எழுதும் நூல்களில் தன்னைப்  புதுக்கோட்டைக்காரர் என அடையாளப்படுத்திக்கொள்கிறார். பணி ஓய்வுக்கு ...

பி. வெங்கட்ராமன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 151 பி. வெங்கட்ராமன் . எழுத்தாளர் , அச்சகத்தார், பதிப்பாளர், இதழாசிரியர். தனது இயற்பெயரிலும் வடமலையழகன் எனும் புனைபெயரிலும் எழுதியவர்.  சமஸ்தான  இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காகிதத் தட்டுப்பாடு மேலோங்கிய காலத்தில் அதுவரை இயங்கிக் கொண்டிருந்த பல அச்சகங்களும் பல இலக்கிய , குழந்தை இதழ்களும் நின்றுவிட்டிருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் தொடர்ந்து இயங்கியது புதுக்கோடடை கண்ணபிரான் அச்சகம். பல இதழ்களை அச்சேற்றிக் கொடுத்தது இந்த அச்சகம்தான்.  இதை நடத்தியவர் பரசுராம். இவரது மகன் பி. வெங்கட்ராமன் அவர்கள். தற்போது சென்னையில் வசிக்கிறார். தந்தையார் பரசுராமிடம் தானொரு இதழ்த்தொடங்கி நடத்தப்போவதாக விருப்பம் தெரிவித்தார். அப்போது இவருக்குப் பள்ளி வயது. தந்தையும் விருப்பத்திற்கு இசைவு தெரிவிக்க ' டிங் டாங் ' எனும் குழந்தை இதழைத் தொடங்கினார். இந்த இதழின் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள். மேலும் இவர் அகிலனுடன் நெருங்கிய நட்பு கொண்டவர். பி.வி என அழைக்கப்படும் வெங்கட்ராமன் ,  வடமலையழகன் எனும் புனைப்பெயரில் பல படைப்புகள் தந்துள்ளார். ச...

கவிஞர் தங்கம் மூர்த்தி

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 150 கவிஞர் தங்கம் மூர்த்தி . இயற்பெயர் மூர்த்தி. தந்தையார் தங்கம், ஹோமியோபதி மருத்துவர். பாரத் நகர் , புதுக்கோட்டையில்  வசித்து வருகிறார். ஆங்கில இலக்கியம் படித்தவர். கவிஞர் பாலாவின் மாணவர்.  பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் ஆட்சிக்குழு உறுப்பினராகவும், சாகித்ய அகாடமியின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் செயலாற்றியவர் . கவிஞர், கதைஞர். பட்டிமன்றம், கவியரங்கம், நூல் திறனாய்வு, தனிச் சொற்பொழிவு என எவ்வகை மேடைகளையும் தன்வசப்படுத்தி கேட்பவர் செவிகளுக்குத் தேன்தமிழாற்றுபவர். இவரது எழுத்து ஹைக்கூவில் தொடங்கியது . புதுக்கவிதை, விமர்சனத்தொடர், சிறுகதை வடிவ கவிதை எனக்   கதைஞராக மிளிர்கிறார். தமிழ்ச்செம்மல் விருது ,  மக்கள் நலக் கவிஞர் விருது, கவிஞர் சிற்பி விருது, செல்வன் கார்க்கி விருது, கவிக்கோ விருது, விக்கிரமன் விருது, சௌமா விருது, ஈரோடு தமிழன்பன் விருது உட்பட பல விருதுகள் பெற்றவர். தேவதைகளால் தேடப்படுபவன் எஎனும்இந்நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருது பெற்றது. இவரது முதல் தொகுப்பு டிசம்பர் 1994 ஆம் ஆண்டு வெளிவந்தது....

கவிஞர் தெ.சி.க. சுவாமி,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 149 கவிஞர் தெ.சி.க. சுவாமி , கீழராஜா 4 ஆம் வீதி, செந்தூர் இல்லம் , புதுக்கோட்டை.கவிஞர், ஆய்வாளர், ஓவியர். சாதிகளே தேவையில்லை! ஏன்? எப்படி? ஓர் முழு ஆய்வு நூல்.  விஞ்ஞானத்தின் வேகம், மனித வரலாறு, தொழிலாளர்கள் தோற்றம், மன்னனும் மக்களும், சாதிகள் வலுப்பெற்ற விதம், ஐவகை நிலப்பிரிவு, போர் துவங்கிய வரலாறு, உரிமைப் போராட்டம், பெண்ணடிமை, அறமும் மறமும், தொழில் வழிச் சாதிகள், பெண்கள் சாதிப் பிரிவில் அடங்கமாட்டார்கள், சோம்பேறிகளால் வரும் ஏற்றத்தாழ்வுகள்,தெய்வபக்தி தோன்றிய வரலாறு, என பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்நூல் பேசுகிறது. பல்லவர் காலத்தில் ஆரியர்களின் கலப்பு அதிகமாகியபடியால் கடவுள்களின் பெயர்களும் வழிபாடுகளும் சைவ சமயப் பிரிவுகளும் அதிகமாயின.  சோழர்கால சமூக வாழ்க்கை சாதி பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. விஜயநகர நாயக்கர் காலத்தில் வர்ணாசிரமம் தர்மத்தை போற்றி காப்பது அரசின் கடமை என்று மன்னர்கள் கருதினர். இந்து சமய அடிப்படையில் தோன்றிய சாதி வேறுபாடுகள் அனைத்திற்கும் அரசினர் பாதுகாப்பு அளித்தனர், என்று தமிழ்நாட்டுச் சமுதாய - பண்பா...

புதுக்கோட்டை அப்துல்லா

  புதுக்கோட்டை எழுத்தாளர் – 148 புதுக்கோட்டை அப்துல்லா , இயற்பெயர் - முகமது அப்துல்லா . திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர். தந்தையார் – முகமது இஸ்மாயில்.  வணிகவியல் மேலாண்மையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். புதுக்கோட்டை நகர திமுக மாணவரணி துணை அமைப்பாளர், நகர அமைப்பாளர், பொதுக்குழு உறுப்பினர், சிறுபான்மையினர் அணி துணை செயலாளர், வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நல அணி இணை செயலாளர்,.. உட்பட பல பொறுப்புகளில் செயலாற்றியவர். புதுக்கோட்டை நாடாளுமன்றத் தொகுதி  பறிக்கப்பட்டு அத்தொகுதி திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, கரூர் நாடாளுமன்றத் தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இவர் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டதன் மூலம்  புதுக்கோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற பெருமையுடன் புதுக்கோட்டைத் தொகுதி மக்களின் ஏமாற்றத்தைப் போக்கியவர். தற்போது தமிழக ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 66 மசோதாக்கள் , புதுக்கோட்டை  நகர வீதிகளில் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் பதாகைகளால், அரசியல் கடந்து பொதுமக்களின் கவனத்திற்கு உள்ளாகியிருக்கிறார்...

புலவர் ந. சண்முகம்,

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 147 புலவர் ந. சண்முகம் , தமிழாசிரியர், அய்யர் குளம் - வடகரை, புதுக்கோட்டை.   மெய்யுணர்வும் பேரின்ப வாழ்வும் - மார்க்க அரேபியா அருளிய ஆத்ம சிந்தனை எனும் இந்நூல் மார்க்க அரேலியர் அருளிய ஆத்ம சிந்தனை எனும் மூல நூலின் செய்யுள் வடிவமாகும். நூலின் மூலம் உரோம நாட்டுச் சக்கரவர்த்தி மார்க்க அரேலியர் இயற்றியது. இவர் கி.பி 121 இல் பிறந்து நாற்பதாவது வயதில் ரோமாபுரி சக்கரவர்த்தியாகி கி.பி 180 இல் மறைந்தவர். ஒரு மாமன்னனுக்குரிய கடமைகளிலிருந்து சிறிதும் வழுவாமல் அரண்மனை வாழ்க்கையினின்று விலகிவிடாமல் அன்பு, பணிவு, அடக்கம், சகிப்புத்தன்மை , உழைப்பு எல்லாவற்றிற்கும் மேலாக சுக போகங்களைத் துச்சமாக மதித்து மேற்கொண்ட எளிமை முதலான பண்புகளில் சிறந்து விளங்கியவர். இவர் அருளிய தத்துவமே ஆத்ம சிந்தனை. இந்நூலைத் தமிழில் மூதறிஞர் ராஜாஜி தமிழுக்கு மொழிபெயர்த்தார். இந்த மொழிபெயர்ப்பு பரலி சு. நெல்லையப்பர் ஆசிரியராக இருந்த லோகோபகாரி பத்திரிகையில் தொடராக வெளிவந்தது. தமிழகத்தின் காந்தி என அழைக்கப்பட்ட பொ. திரிகூடசுந்தரம் பிள்ளை இதே நூலை இதய உணர்ச்சி என்கிற தலைப்பில் வெளியி...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ந. ஆறுமுகம்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 145 ந. ஆறுமுகம் ,  தலைவர், குறிஞ்சி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குடியிருப்போர் நலச்சங்கம், புதுக்கோட்டை.  சொந்த ஊர் - வெண்ணாவல்குடி ,  புதுக்கோட்டை மாவட்டம்.  இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து கிராம நிர்வாகப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் பன்னிரெண்டு வயது முதலே ஆர்வம் கொண்டவர்.  கல்லூரி காலங்களிலும் அரசுப் பணி காலத்திலும் எழுதிய கவிதைகளில் தொகுப்பே கவிதைச்சரமாக மலர்ந்துள்ளது. இவர் பல கவியரங்குகளின் கலந்துகொண்டு சிறந்த கவிஞர் எனப் பாராட்டப் பெற்றுள்ளார். இவரது துணைவியார் திருமதி என்.ராக்கம்மாள் , ஆலங்குடி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர். கவிதைச் சரம் எ னும் இந்நூல் மரபு, புதுக்கவிதை, சினிமா மெட்டு என பல வடிவக் கவிதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் ஒரு பாடல். மாரியம்மா துதி ( என்னடீ ராக்கம்மா- மெட்டு ) அடி என்னம்மா பொன்னம்மா பூவம்மா -தாயே எங்கமுத்து மாரியம்மா! - திருக் கண்ணனூர்ப் பெண்ணே- என் வெண்ணாவல் நாட்டி...

எஸ்.நடராஜன்

புதுக்கோட்டை எழுத்தாளர் – 144 எஸ்.நடராஜன் , தமிழாசிரியர், சுப்புராமய்யர் மத்யதரகலாசாலை, புதுக்கோட்டை. தாய்நாடு இதழின் முன்னாள் உதவி ஆசிரியர். சமஸ்தான புதுக்கோட்டையில் பெரிய பதிப்பகமாக இருந்த கார்த்திகேயினி பிரசுரத்தின் உரிமையாளர். பல நூல்களும் ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். பல அறிஞர்களின் படைப்புகளைத் தொகுத்துள்ளார். புதுமுறை அகராதி எனும் இந்நூல் கார்த்திகேயினி பிரசுரம் தொகுத்திற்கும்  புதுக்கோட்டையின் முதல் அகராதி. 10.11.1949 அன்று இந்நூல் வெளிவந்தது. இந்நூலின் முன்னுரை தமிழ் – லெக்ஸிக்கன் பதிப்பாசிரியர் எ ஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள். இந்த அகராதி மூன்று உள்ளுறைகளைக் கொண்டிருக்கிறது. ண,ன பேதங்கள், ர, ற பேதங்கள், ல,ழ,ள பேதங்கள். இவ்வெழுத்துகளால் உருவாகும் சொற்களுக்கு இடையேயான பொருள்களை இந்த அகராதி நூல் விளக்குகிறது. குணட்டு – கதிர் முதலியவற்றின் சிறுகொத்து. குனட்டு – குறும்பு. சேணம் – கலணை, சுவர்க்கம், மெத்தை. சேனம் – பருந்து ஏரான் – பள்ளிக்கூடத்திற்கு முதலில் வருகிறவன். ஏறான் – ஏற்றான்.   ஒருவு – ஆடு ஒறுவு – வருத்தம். அலகு – அகலம், அளவு. அழகு – வனப்பு, ச...