புதுக்கோட்டை எழுத்தாளர் -236 ஆர்.திருமலை , எம்.ஏ. (பிறப்பு - 1924). சிறந்த வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் மாணவர். இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் நிர்வாகம் தொடர்பான துறையின் கீழ் குறிப்பாக ஜமீன்தாரிகளின் கள வருவாய் தீர்வு, ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாநிலத்தின் பூர்வீக நிலங்களுக்கான கணக்கெடுப்பு பணியில் தீவிர அனுபவம் பெற்ற இவர் புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். அறிவியல் வரலாற்றியல், இலக்கியத்தில் கிராம பண்பாடு ஆகிய ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். இவரது எழுதிய நூல்களில் முக்கியமானது "ராஜேந்திர வின்னகர்". இந்நூல் சோழர் - பாண்டிய நகரங்களைப் பற்றியது. STUDIES IN ANCIENT TWONSHIPS OF PUDUKOTTAI - R. TIRUMALAI எனும் இந்நூல் புதுக்கோட்டையின் பண்டைய நகரங்கள் பற்றிய செய்தியைப் பேசுகிறது. 1981 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்தது. இந்நூலுக்கு அணிந்துரை திரு. ஆர். வெங்கடராமன் ( ஆர். வெங்கட்ராமன்) அவர்கள். இந்நூலுக்கு இவர் அணிந்துரை தருகையில் ஜூலை 9, 1981 இந்திய நிதி அமைச்சராக இருந்தார். பிறகு இவர் இந்...
புதுக்கோட்டைக்குள் எழுதப்பட்ட முதல் வரலாறு புதுக்கோட்டை எழுத்தாளர் - 235 எஸ்.இராதாகிருஷ்ண ஐயர் , பி.எ. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கும் அருகில் சூலமங்கலம் எனும் ஊரைச் சார்ந்தவர். 1918- 19 ஆம் ஆண்டுகளில் கல்லூரியின் முதல்வராக இருக்கையில் புதுக்கோட்டை மாநிலம் பொது வரலாறு எழுத அன்றைய சமஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொள்ள, A GENERAL HISTORY OF THE PUDUKKOTTAI STATE BY S. RADHAKRISHNA AIYAR, B.A Late Principal of H.H.The Maharajah`s College, Pudukkottai எனும் தலைப்பில் இந்நூலை எழுதினார். இந்நூல் புதுக்கோட்டை தர்பார் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1916 ஆம் ஆண்டு ஸ்ரீ பிரகதம்பா ஸ்டேட் பிரஸ்,புதுக்கோட்டை வழியே இந்நூல் வெளிவந்தது. முன்னுரை செய்தி ஸ்பெயின் நாட்டில் மாஞ்சனரிஸ் என்றொரு நதி ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மாட்ரிட் எனுமிடத்தில் ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள். அந்தப் பாலத்தைப் பார்வையிட பயணிகளில் இருவர் இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். ஒருவர் சொல்கிறார், " பாலங்கள் இல்லாத ஆறுகளை ந...