முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

புதுக்கோட்டையை எழுதியவர்கள் வரிசை -06

புதுக்கோட்டை எழுத்தாளர் -236 ஆர்.திருமலை , எம்.ஏ. (பிறப்பு - 1924). சிறந்த  வரலாற்றாசிரியரும் பேராசிரியருமான திரு. கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் மாணவர்.  இந்திய அரசு மற்றும் மாநில அரசின் கீழ் நிர்வாகம் தொடர்பான துறையின் கீழ் குறிப்பாக ஜமீன்தாரிகளின் கள வருவாய் தீர்வு, ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாநிலத்தின் பூர்வீக நிலங்களுக்கான கணக்கெடுப்பு பணியில் தீவிர அனுபவம் பெற்ற இவர் புதுக்கோட்டை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் பணியாற்றியுள்ளார். அறிவியல் வரலாற்றியல்,  இலக்கியத்தில் கிராம பண்பாடு ஆகிய ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். இவரது எழுதிய நூல்களில்  முக்கியமானது "ராஜேந்திர வின்னகர்". இந்நூல் சோழர் - பாண்டிய நகரங்களைப் பற்றியது. STUDIES IN ANCIENT TWONSHIPS OF PUDUKOTTAI - R. TIRUMALAI எனும் இந்நூல் புதுக்கோட்டையின் பண்டைய நகரங்கள் பற்றிய செய்தியைப் பேசுகிறது. 1981 ஆம் ஆண்டு இந்நூல் வெளிவந்தது. இந்நூலுக்கு அணிந்துரை திரு. ஆர். வெங்கடராமன் ( ஆர். வெங்கட்ராமன்) அவர்கள். இந்நூலுக்கு இவர் அணிந்துரை தருகையில் ஜூலை 9, 1981   இந்திய நிதி அமைச்சராக இருந்தார். பிறகு இவர் இந்...
சமீபத்திய இடுகைகள்

புதுக்கோட்டையை எழுதியவர்கள் வரிசை - 05

புதுக்கோட்டைக்குள் எழுதப்பட்ட முதல் வரலாறு புதுக்கோட்டை எழுத்தாளர் - 235 எஸ்.இராதாகிருஷ்ண ஐயர் , பி.எ. புதுக்கோட்டை மன்னர் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். இவர் தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்திற்கும் அருகில் சூலமங்கலம் எனும் ஊரைச் சார்ந்தவர். 1918- 19 ஆம் ஆண்டுகளில் கல்லூரியின் முதல்வராக இருக்கையில் புதுக்கோட்டை மாநிலம் பொது வரலாறு  எழுத அன்றைய சமஸ்தான நிர்வாகம் கேட்டுக்கொள்ள, A GENERAL HISTORY OF THE PUDUKKOTTAI STATE BY S. RADHAKRISHNA  AIYAR, B.A Late Principal of H.H.The Maharajah`s College, Pudukkottai எனும் தலைப்பில் இந்நூலை எழுதினார். இந்நூல் புதுக்கோட்டை தர்பார் குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 1916 ஆம் ஆண்டு ஸ்ரீ பிரகதம்பா ஸ்டேட் பிரஸ்,புதுக்கோட்டை வழியே இந்நூல் வெளிவந்தது. முன்னுரை செய்தி ஸ்பெயின் நாட்டில் மாஞ்சனரிஸ் என்றொரு நதி ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே மாட்ரிட் எனுமிடத்தில் ஒரு பாலம் கட்டியிருக்கிறார்கள்.  அந்தப் பாலத்தைப் பார்வையிட பயணிகளில் இருவர் இவ்வாறு பேசிக்கொண்டார்களாம். ஒருவர் சொல்கிறார், " பாலங்கள் இல்லாத ஆறுகளை ந...

ஷேக்ஸ்பியர் வரியைக் கொண்டு எழுதப்பட்ட புதுக்கோட்டை வரலாறு

புதுக்கோட்டையை எழுதிய நூல்கள் வரிசை -04 ஷேக்ஸ்பியர் இயற்றிய நாடகங்களில் ஒன்று ரிச்சர்ட் -II. அந்த நாடகத்தில் ஓரிடம், தயவுசெய்து நாம் அனைவரும் தரையில் அமர்ந்து அரசர்களின் சோகமான மரணங்களை குறித்து பேசுவோம். வஞ்சகத்தால் வீழ்ந்தார்கள், வாளினால் போரில் மாண்டார்கள். துரோகம் செய்து அவர்கள் கொன்றவர்களின் ஆவியால் அலைக்கழிக்கப்பட்டார்கள். சிலர் மனைவியால் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள், இன்னும் சிலரோ தூங்கும் போது கொல்லப்பட்டார்கள். அனைவரும் மாண்டு போனார்கள். ஒரு மன்னனின் தலையை அலங்கரிக்கும் வெற்று மணிமகுடம் மரணத்தையும் அவன் அரசவைக்கு கூட்டி வரும். மரணம் அரசவையில் அமர்ந்து மன்னனின்  ஜம்பத்தை எள்ளி நகையாடும். நாடகத்தின் சில காட்சிகளுக்கு மூச்சு விட அனுமதிக்கும், ராஜ்ஜியங்களைக் கைப்பற்று, பயத்தை பிறருக்கு பரிசாக்கு,  உன் தோற்றத்தால் பிறருக்கு மரண பயத்தை கொடு என்று அகந்தையினாலும் கர்வத்தினாலும் ஒரு அரசனுக்கு போதை ஏற்றும். "ஏதோ, இவனின் ஆவியை பாதுகாக்கும் சுவராகிய தசை மட்டும் வெண்கலத்தால் ஆனது போல எண்ணி வாழ்கிறானே" என்று எள்ளி நகையாடும். அந்தோ கடைசியில் வந்தது கோட்டைச...

புதுக்கோட்டை வரலாறு தொகுதி - II பகுதி - II

தொகுதி - II பகுதி - II புதுக்கோட்டையை மிக நீண்ட வரலாறாக எழுதியவர் கே.ஆர். வெங்கடராம ஐயர் , B.A,L.T,M.R.A.S, இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியுடன் ஒருங்கிணைந்திருந்த  உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்தவர். ஆண்டு -1935. புதுக்கோட்டை வரலாறு பலர் எழுதியிருந்தாலும் மிக நீண்ட வரலாறாக எழுதியவர். இவர் எழுதிய வரலாறு  மூன்று பெரும் தொகுதிகளாக வெளிவந்தன. 1.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I ) 2.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART I ) 3.   MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART II ) இம்மூன்று நூல்களும் வெவ்வேறு காலத்தில் வெளிவந்தாலும் மறுபதிப்பாகவும் திருத்தப்பட்ட பதிப்பாகவும் வெளிவந்த ஆண்டு -  2002 . MANUAL OF THE PUDUKOTTAI STATE ( VOLUME I I PART II ) இந்நூல் முதல் பதிப்பு வெளியான ஆண்டு – 1944. மறுபதிப்பு - 2002 இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருப்பவர் முனைவர் ஆர். கண்ணன் இ.ஆ.ப.  இந்நூல் புதுக்கோட்டை மாவட்டத்திற்குட்பட்ட தாலுகா  ஊர்களையும் அதன் அமைவிடங்கள் பற்றியும் பதிவு செய்துள்ளது. ஆ...

மன்னராட்சிக்கு முந்தைய கால வரலாற்றை எழுதியவர்

புதுக்கோட்டையை எழுதியவர்கள் வரிசை - 03 (புதுக்கோட்டை எழுத்தாளர் - 233)  டாக்டர் வீ.மாணிக்கம் , புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் பணியாற்றியவர். வரலாற்றுத் துறை. இவரது மணி விழா காலத்தையொட்டி, " புதுக்கோட்டை வரலாறு " எனும் இந்நூலைப் படைத்துள்ளார். இவர் எழுதிய மற்றொரு முக்கியமான நூல் கொங்கு நாடு. வரலாறு என்பது மன்னர்களின் வரலாறு அல்ல, இனக்குழுக்களின் இடம் பெயர்வு வரலாறு எனும் கருத்தியலோடு ஒத்துப்போகிறவர். இனக்குழுச் சமுதாயத்தின் சிதைவடையும் போக்கே இந்திய வரலாறு எனும் கருத்தியல் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. தாபரின் இனக்குழுச் சமுதாயத்திலிருந்து அரசு எனும் நூலில் இக்கருத்தியல் மெய்ப்பிக்கப்பட்ட போதிலும் வரலாற்று ஆய்வுகளில் இது இன்னும் தீர்க்கமாக எதிரொலிக்கவில்லை. இனக்குழுச் சமுதாயத்தின் எச்சங்கள்  இன்றும் செறிவாகக் காணப்படும் புதுகைப் பகுதியின் ஆய்விற்கு இக்கருத்தியல் நன்கு பொருந்தும் என்கிறார், இந்நூலின் முன்னுரையில் நூலாசிரியர். மேலும் இவர் ஒரு நாட்டின் வரலாறு என்பது அந்நாட்டின் குறுநிலப் பரப்புக்களின் வரலாற்று நிகழ்வுகளை உள்ளடக்கியது என்கிறார். புதுக்கோட்டை கல்வெட்டுகளில் குறிப...

புதுக்கோட்டை வரலாறு முதலில் எழுதியவர்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 232 புதுக்கோட்டை சமஸ்தானம் 1686 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. இந்தத் தொடக்கம் வரலாறு எழுதியவர்களுக்கிடையில் மாறுபட்ட கருத்து நிலவுகிறது. புதுக்கோட்டை சமஸ்தானம் ஆட்சி மற்றும் நிர்வாகத்தில் தனியரசாக இயங்கியது. அதேநேரம் 1800 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து சமஸ்தானத்தின்  காவல், இராணுவம், நிதி மற்றும் நிர்வாகம்  திருச்சிராப்பள்ளியை  மையமாகக் கொண்டு பிரிட்டிஷார் ஆளுகையின் கீழ் இருந்தது. புதுக்கோட்டையைப் பிரிட்டிஷார் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் ஓர் உள்ளடங்கிய பகுதியாக நிர்வகித்தது. திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வந்து செல்ல தனி நுழைவு அனுமதி சீட்டுகள் இருந்திருக்கவில்லை. பிரிட்டிஷாரின் திருச்சி  மாவட்ட நிலவரைப்படத்தில் புதுக்கோட்டை உள்ளடங்கிய பரப்பாகவே வரையப்பட்டுள்ளது. எப்.ஆர்.ஹெமிங்வே எனும் ஆங்கிலேயர் 1900 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் THE LIBRARY OF THE UNIVERSITY OF CALIFORNIA LOS ANGELS எனும் பிரிட்டன் நிறுவனம்  பிரிட்டிஷார் ஆளுகையின் கீழுள்ள தென்னிந்தியா குறிப்பாக மெட்ராஸ் மாகாண மாவட்டங்களின் வரலாறை ஓலைச்சுவடி மற்றும் பிற ஆதார குறிப்புகளைக...

புதுக்கோட்டையை முதலில் ஆவணப் படுத்தியவர்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -231 வில்லியம் ப்ளாக்பர்ன் புதுக்கோட்டை வரலாறு குறித்து எழுதுகையில், வாசிக்கையில், தேடுகையில் பிளாக்பர்ன் என்கிற பெயரைத் தவிர்த்துவிட்டு புதுக்கோட்டை வரலா ற் றை உள்வாங்க முடியாது. யார் இந்த பிளாக்பர்ன்?   புதுக்கோட்டை வரலாற்றில்   ப்ளாக்பர்ன் எனும் பெயரில் இருவர்   இடம் பெறுகிறார்கள். ஒருவர் சர். வில்லியம் ப்ளாக்பர்ன் , மற்றொருவர் ஜான் ப்ளாக்பர்ன் . முன்னவர் தஞ்சாவூரில்   ஆங்கிலேய அரசின் ரெசிடெண்ட் அதிகாரியாக இருந்தவர். புதுக்கோட்டை சமஸ்தானம் நிர்வாக குழறுபடியால் கலகமும் கலவரமும் நிகழ்ந்தேறியது. அப்பொழுது புதுக்கோட்டையின் பொறுப்பு ரெசிடெண்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்டவர். புதுக்கோட்டைக்கு ஆங்கிலேய அரசால் நியமிக்கப்பட்ட முதல் ஆங்கிலேய அதிகாரி இவர். புதுக்கோட்டையுடன் தொடர்புடைய இவரது காலம் பிப்ரவரி 1807 முதல் ஆகஸ்ட் 6, 1809. பிறகு மார்ச்5, 1810 முதல் மார்ச் 3, 1823. இடைப்பட்ட காலத்தில் கேப்டன் புட்லர் பொறுப்பு அதிகாரியாக இருந்திருக்கிறார். ஜான் ப்ளாக்பர்ன் எனும் அரசியல் பிரதிநிதி. ஜான் ப்ளாக்பர்ன் என்பவர் யார்? இவர் வில்லியம் ப்ளாக...