முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

ஜனவரி, 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

குறிஞ்சித் தங்கம் க.தங்கவேலு

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 169 க.தங்கவேலு ,  குறிஞ்சித்தங்கம் என்று அறியப்படுகிறார். திருக்கோகர்ணம் அபிராமி நகரில் வசித்துவரும்  இவரது பூர்வீகம் இலங்கை பதுளை - கொள்ளுமண்டி தோட்டம். ஈழத்தமிழர்களுக்கு எதிரான சிங்களவர்களின் கொடுங்கொல் தாக்குதலின் போது புலம் பெயர்ந்து தலைமன்னார் வழியாக தனுஷ்கோடி வந்தடைந்து அங்கேயிருந்து ரயிலில் புதுக்கோட்டை வந்தடைந்தவர். இந்தப் பயணத்தில் இவருக்கொரு துர்சம்பவம் நடந்தேறியது. இந்திய குடிமகன் என்கிற சான்று, மலையகத் தமிழருக்கான வெளிறிய சிவப்பு வண்ண இந்திய கடவுச்சீட்டு, மறுவாழ்விற்கான ஏனைய ஆவணங்கள், செலவுக்கு வைத்திருந்த பணம் யாவும் சூட்கேஸூடன் ரயிலில் களவுபோகிறது. மறுவாழ்வு ஆவணமில்லாமல் எந்த அரசாங்க வேலைக்கும் விண்ணப்பிக்க முடியாமல் தனியார் துறையில் வாழ்நாளைக் கழித்து வருகிறார். இவரது முதல் சிறுகதை உரம் பதுளை ஊவாக் கல்லூரித் தமிழ் மாணவர் மன்றத்தின் இலக்கிய வெளியீடு கலை விழா மலரில் வெளியானது. 1970 ஆம் ஆண்டு வாக்கில் வெளியான சிறுகதைகளையும் புதுக்கோட்டைக்கு அவர் புலம் பெயர்ந்தன்பிறகு எழுதிய சிறுகதைகளையும் உள்ளடக்கி கறிவேப்பிலைகள் என்கிற தலைப்பி...

தீபம் முத்து

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 168 தீபம் முத்து , அறந்தாங்கி. கவிஞர், சிறுகதையாளர். தீபம் கலர்லேபில் பணியாற்றியதால் தீபம் முத்து என்று புனைப் பெயரை வைத்துக்கொண்டவர். தற்போது சென்னையில் வசிக்கிறார். இரு சிறுகதைத் தொகுப்பு , ஒரு கவிதைத் தொகுப்பு வெளியிட்டுள்ளார். 2003 ஆம் ஆண்டு தினமலர் வாரமலர் நடத்திய டி.வி.ஆர். நினைவுச் சிறுகதைப் போட்டியில் இவரது வேப்பங்கொட்ட என்கிற சிறுகதை முதல் பரிசு பெற்றது. இக்கதையின் மூலமாக பரவலான கவனத்தை ஈர்த்தவர். சுற்றுச்சூழல், காடுகளின் அவசியம்,  கல்லூரி பருவத்தினர் பார்வையில் மரங்கள் வளர்ப்பு இவற்றைப் பேசக்கூடிய நல்ல சிறுகதை. இக்கதையை முதல் கதையாகக் கொண்டு வேப்பங்கொட்டை எனும் இச்சிறுகதைத் தொகுப்பு ஜனவரி 2005 ஆம் ஆண்டு வெளியானது.  18 கதைகளின் தொகுப்பு. கடவாசல், எச்சில் உறவு, தொத்தப்பசு,  சம்மணம், ஆணிவேர்...என வட்டார வழக்குகளால் எழுதப்பட்ட சிறுகதை. இத்தொகுப்பில் ஆணிவேர் என்றொரு சிறுகதை காத்திரமான படைப்பு. ஊரின் மையத்திலிருக்கும் ஆலமரத்தை வெட்டி அவ்விடத்தில்  சமுதாயக்கூடம் கட்ட  ஊர்க்கூட்டம் போடுவதுதான் கதை. கதையின் களம் பச்சலூர். எங...

புலவர் யா.வென்னரசு

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 166 புலவர் யா.வென்னரசு ,  சந்தப்பா வேந்தர். இவரது இயற்பெயர் யா.மரியசெயராசன், ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். எந்நேரமும் கவிதை மனம் கொண்டவர். தனது மானசீக ஆசானாக மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களை ஏற்றுக்கொண்டவர். தனித்தமிழ் பற்றாளர். தனது இல்லத்திற்குப் பாவாணர் இல்லம் எனப் பெயர் வைத்தவர். 03.02.1975 இல் பாவலர் ஏறு பெருஞ்சித்திரனார் அவர்களால் பாவாணர் படத்தைத் திறந்து வைத்த பெருமைக்குரியவர்.  1969 இல் பாவாணர் பாசறை எனும் அமைப்பைத் தொடங்கி தனித்தமிழ்க் கொள்கை முழக்கம் செய்தவர். இந்தப் பாசறையில் கவிச்சுடர் கவிதைப் பித்தன் , கு.மாரிமுத்து, மு. இளங்கோவன், வெள்ளிநிலவன், தனிக்கொடி , இளமாறன், கருணாநிதி, தமிழ்த்தும்பி தமிழ்மாறன்,நிலவை.பழனியப்பன்,மா.இலக்குவன், சுவாதீ,  முத்துகலா என்று பலரும் பங்காற்றியிருக்கிறார்கள். 18.9.1982 இல் கந்தர்வகோட்டையில் நடந்த ஆசிரியர் சங்கக் கூட்டத்தில் பாட்டரங்கத் தலைமையேற்றுப் பாடியிருக்கிறார். 1980 இல் புதுக்கோட்டையில் இவரது கவியரங்கப் பாடலைக் கேட்ட உவமைக் கவிஞர் சுரதா அவர்கள் சந்தப்பா வேந்தர் என்று பாராட்டிச...

நா. கண்ணன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 167 நா. கண்ணன், கவித்தென்றல் நா.கண்ணன் என அழைக்கப்படுகிறவர். இவரது இலக்கிய வட்ட நண்பர்களால் சொல்லின் செல்வர் எனப் பாராட்டப் பெறுபவர். அறந்தாங்கியில் பிறந்து புதுக்கோட்டையில் குடியேற்றம். இவரது துணைவியார் தமிழாசிரியர். மகள் கவிதா புவனேஸ்வரி  பட்டிமன்ற பேச்சாளர். மூத்த மகன் பாபு சண்முகநாதன் கராத்தே,  சிலம்பு கலை பயிற்றுநர்.  இளைய மகன் முருகபாரதி சொல்லாட்சி கலைஞர். தன்னம்பிக்கை உரையாளர்.  யோசி என்கிற புத்தக நிலையம் நடத்துகிறார். மேலும் கவிராசன் அறக்கட்டளை மூலமாக சமூகத் தொண்டாற்றி வருகிறார். நா.கண்ணன் மூன்று நூல்கள் எழுதியுள்ளார். வாழி ! தமிழே வாழி!, குமரேசனார் குறள், கவிராசனின் புவிவாசனை .  கவிராசனின் புவிவாசனை எனும் இந்நூல் இவரது மூன்றாவது நூல். கவிராசன் அறக்கட்டளை வெளியீடு. இந்நூல் பாரதியின் 125 ஆவது பிறந்த ஆண்டை முன்னிட்டு வெளியானது. பாரதியின் வாழ்வை கவி வடிவில் வடிக்கப்பட்ட  நூல். பாரதி பற்றிய வாழ்க்கைக் குறிப்புகள் , பாரதியுடன் தொடர்புடையவர்கள் கால வரிசையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜி. சுப்பிரமணிய அய்யர் - சுதேசிமி...

கோவில் குணா

புதுக்கோட்டை எழுத்தாளர் - 165 கோவில் குணா , ஆவுடையார்கோவில் சீ. குணசேகரன் என்பதன் சுருக்கமே கோவில் குணா. கணக்குப் பதிவியல் - வணிகவியல் படித்தவர்.  சத்துணவு அமைப்பாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு சத்துணவு பணியாளர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர், மாநிலச் செயலாளர் பொறுப்புகளில் செயலாற்றியவர்.  கவிஞர், சிறுகதையாளர், பேச்சாளர். கலை, இலக்கியம் மீதான ஈடுபாட்டால்  தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தில் தன்னை இணைத்துக்கொண்டு கலையாற்றி வருகிறார். இப்பெருமன்றத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர். இவரது முதல் சிறுகதை, ராஜாளிக்குள் ஒரு சின்னப்புறா கல்கி இதழில் பிரசுரமானது. தாமரை, தொடரும் என்று பல இதழ்களில் இவரது கதைகள் பிரசுரமாகியுள்ளன. இவரது சிறுகதைகளில் ஒன்றான  'பரிசு ' கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இளநிலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் மூன்றாண்டுகள் இடம் பெற்றிருந்தது. ஏமாற்றம் இவரது படைப்புகளில் முக்கியமான ஒரு  சிறுகதை. இக்கதை தொடரும்,..ஒளித்திரள் பன்னிரெண்டாம் ஆண்டு சிறப்பு மலரில் இடம் பெற்றது. மழைக்காலத்தில்  கொடலைமட்டை,  பாலித்தீன் பை...

சி.வேலாயுதம்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 164 சி.வேலாயுதம் ,  ஓவியக் கவிஞர், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், கொத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர். தனித்தமிழ் இயக்கம், பன்னாட்டுத் தமிழ் உறவுக் கழகம், வள்ளுவர் மன்றம், பைந்தமிழ்ப் பாசறை போன்ற அமைப்புகளில் ஈடுபாடு கொண்டவர். கவியரங்கம், பட்டிமன்றம், வழக்காடு மன்றங்களில் உரை வீச்சாக உரையாற்றுகிறவர். சந்தக்கவி பாடுவதில் வல்லவர். புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் தேர்ந்தவர். வண்ண வண்ணப் பூக்கள் , எனும் இந்நூல் இவரது முதல் நூல். சின்னஞ் சிறுவர்களின் மனதைக் கவரும் பாடல்களின் தொகுப்பு. இத்தொகுப்பில் ஒரு பாடல், தலைப்பு - பள்ளிக்கூடம் போனேன் ! ஆட்டுக்குட்டி! ஆட்டுக்குட்டி! பள்ளிக்கூடம் போனேன்- நான் ஆடிப் பாடிப் படித்ததெல்லாம் கேட்டுத்தான் பாரேன்! பூனைக்குட்டி! பூனைக்குட்டி! பள்ளிக்கூடம் போனேன்- நான் போட்டு வைத்த வீட்டுக் கணக்கை நீட்டித்தான் பாரேன்! பச்சைக்கிளி! பச்சைக்கிளி! பள்ளிக்கூடம் போனேன்- நான் படம் வரைந்தேன் உன்னைப் போல இருக்குதா பாரேன்! வெள்ளை முயலே! வெள்ளை முயலே! பள்ளிக்கூடம் போனேன்- நான் விளையாட்டிலே வாங்கிவந்த பரிசைத்தா...

குருபாததாசர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 163 குருபாததாசர் . இவரது இயற்பெயர் முத்து மீனாட்சி.   கவிராயர் என மக்களால் அழைக்கப்படுகிறார். சைவ வேளாளர்.  பிறந்த ஊர் அன்றைய சோழ நாட்டிற்குட்பட்ட புல்வயல் என்கிற சிற்றூர். இவ்வூரின் மலைமீது எழுந்தருளியுள்ள குமரேசன் எனும் முருகனை நூறு பாடல்களால் பாடியவர். இப்பாடல்களின் தொகுப்பு குமரேச சதகம்.   சதகம் என்றால் நூறு. இவர் முருகனைப் பாடிய நூறு பாடல்களின் கடைசி வரியை இவ்வாறு முடிக்கிறார். " மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு/ மலைமேவு குமரேச னே " சதகம் பாடுவதற்கும் முன்னதாக பாடும் காப்பு பாடலில் குமரேசனைப் பாடுவதற்கும் முன்பாக ஊரைப் பாடுகிறார். இறைவன் குமரேசன் நூறு பாடல்களாலும் புலவர் பிறந்த ஊரான புல்வயலை நூற்றிரண்டு பாடல்களாலும் பாடியிருக்கிறார். இவர் பாடிய காப்பு பாடல், பூமேவு புல்லைப் பொருந்துகும ரேசர்தம்மேல் தேமே வியசதகஞ் செப்பவே- கோமேவிக் காக்குஞ் சரவணத்தான் கம்பகும்பத் தைந்துகரக் காக்குஞ் சரவணத்தான் காப்பு. இங்கு பூ என்பது பூமி. புல் என்பது திருப்புல்வயல்.

எஸ்.மோகன்ராஜ்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 162 எஸ்.மோகன்ராஜ் ,  கவிஞர் உன்னதன் என்கிற பெயரிலும் அறியப்படுகிறார். பிறப்பு - புதுக்கோட்டை அடப்பன்வயல் , வடக்கு மூன்றாம் வீதி. தற்போது அரிமளம் சாலை,  நியூ டைமண்ட் நகரில் வசிக்கிறார். தேனி மாவட்டம் துணை ஆட்சித் தலைவர் (வருவாய் )ஆக பணியாற்றி ஓய்வு பெற்றவர். உன்னதபுரம் கிழக்கு , இவரது முதல் நூல்,  நாவல். கேசவன், மீரா, தேன்மொழி ஆகிய கதாபாத்திரங்களைக் கொண்டு இலட்சியவாத கதையாக எழுதப்பட்டிருக்கும் நாவல். கேசவன் - மீரா ஆகிய பாத்திரங்களுக்கு இடையிலான நட்பு,  முரண், பிரச்சனைகள் கவித்துவமாக சொல்லப்பட்டிருக்கிறது. தன் நிழலைத்  தானே மிதித்து விடாதவாறு நடந்துகொண்டான். இது தேமல் பூக்கும் காலம். பசலை படரும் வாரம். இடைமெலிந்து நலியும் இரவுகள் . ஒரு தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தை சப்தமிடாமல் இருப்பதாலேயே அதற்கு உயிர் இல்லை என்று கருதிவிட முடியுமா? கண்ணியம் மனதிலிருக்க வேண்டும் . அப்பொழுதுதான் கைகளும் கண்களும் கட்டுப்படும். மனதில் அழுக்குகளைச் சுமந்துகொண்டு மாமனிதரைப் போல பாசாங்கு செய்யும் இவனுக்கு அப்பாவி போன்ற தோற்றம் தேவையா?, கனிவு காதலால...

இந்தியன் கணேசன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 161 இந்தியன் கணேசன் ,  இயற்பெயர் கணேசன்.  மணமேல்குடி . இவர் நடத்தும் கடையின் பெயர் இந்தியன். இப்பெயரைக்கொண்டு இந்தியன் கணேசன் என அறியப்படுகிறார். தான் சுவைத்து  தனக்குப் பிடித்த கறியை சிவனுக்குப் படைத்த கண்ணப்ப நாயனாரைப் போல தான் வாசித்து பேரின்பம் கண்ட நூல்களைத் தன் கடைக்கு வரும வாடிக்கையாளர்களுக்கு வாசிக்கக் கொடுக்கிறார். அதற்காக கடையில்  நூலகத்திற்கென தனி அறை ஒதுக்கியிருக்கிறார். இவரது கடை நூலகம் குறித்து பல தொலைக்காட்சிகள் செய்தி வழியே கவனப்படுத்தியுள்ளன. ஆர்ப்பாட்டமில்லாத கவிஞர். ஆழ்ந்த வாசிப்பாளர். சுருக்கமாக பேசவும் எழுதவும் செய்கிறவர். இவரது சுருக்கத்தில் செறிவு உண்டு. ஒற்றைக்கீற்று கவிதைத்தொகுப்பு மூலமாக இலக்கிய உலகிற்கு அறிமுகமான இவர் இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். அவிழ்ந்தே கிடக்கும் கூந்தல் , இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு.  பிரமிக்கத்தக்க எதுவும் எளிமையிலிருந்து தொடங்குவதைப் போல எளிமையான மொழிகளின் வழியே சொற்களால் சமூகத்தைத் தராசில் ஏற்றுகிறார். பல கவிதைகளில் சமூகத்தின் மீதான கோபம் நெடியாக அடிக்கிறத...