முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 111

வைசி. கலைச்செல்வன், வைகறை கவிஞர் என அழைக்கப்படுகிறார். பாடகர், முற்போக்கு சிந்தனையாளர். தீவிர இடதுசாரி அரசியலில் பயணிக்கும் இவர் கந்தர்வகோட்டை தாலுகா குளத்தூர் நாயக்கர்பட்டியில் பிறந்தவர். பதினைந்து வயதில் இவர் எழுதிய ரத்தம் ஒரே நிறம் என்கிற சமூக நாடகம் மாவட்ட அளவிலான ஆதி திராவிடர் நல விடுதிகளின் ஆண்டுவிழாவில் முதல் பரிசு பெற்றது. 1989 இல் புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் இளங்கலை  படிக்கும்பொழுது ஓ..பாரதமே என்கிற கவிதை மாவட்ட அளவில் முதல் பரிசு பெற்றது.


சுதந்திர சோகம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. வைகரை பதிப்பகம் மூலமாக வெளிவந்திருக்கும் இந்நூலின் வடிவமைப்பு கரம்பக்குடி துரை ஆப்செட்,.  நூலின் முகப்பு இரத்தம் தேய்ந்த காஷ்மீர் என்கிற நூலின் அட்டையின் உள்படம். கீழ்வெண்மணியில் தீக்கிரையான  தியாகிகளுக்கும் ஆயிரம் நாட்களுக்கும் மேல் ஏகாதிபத்திய முதலாளித்துவத்தை முறியடிப்பதற்காக சிறையில் போராடிய பிரிக்கால் தொழிற்சாலை தோழர்களுக்கும் இந்நூலை சமர்ப்பணம் செய்துள்ளார்.

திரைப்பட இயக்குநர் வெ.சேகர், கவிச்சுடர் கவிதைப்பித்தன்,  பழ. ஆசைத்தம்பி , அறிவொளி முருகேசன் ,கவிஞர் ம.விஜயன் சி.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கியுள்ளார்கள். கந்தர்வகோட்டை பகுதி போராளிகள் தோழர்கள் லெனின், ராஜப்பா,  குருமூர்த்தி , வேலு ஆசிரியர் போன்றோர் இந்நூலில் நினைவுகூரப்படுகிறார்கள்.

கலை முதலாவதாக ஒரு போராளி மற்றதெல்லாம் அதற்குப் பிறகுதான்,  மாவோ வரிகளுக்கேற்ப இத்தொகுப்பிலுள்ள கவிதைகள் யாவும் கறுப்புப் போராளிகளாக வெளிவந்துள்ளன. இத்தொகுப்பில் ஒரு கவிதை. தலைப்பு  - ஹரிஜனங்கள்

காலை முதல்
அந்தி நல் மாலை வரை
மண்ணைப் பொன்னாகும்
மா மைந்தர்கள்...

ஒரு வித்தை ஓராயிரமாக மாற்றும்
அறிவியல் அறிஞர் அறியா இயந்திரங்கள்...

அரசன் முதல் ஆண்டிவரை
அயலோகம் போய்விட்டால்
கொட்டு முரசு கொட்டி நிற்கும்
கொட்டு முரசர்கள்!

பசியென யாரேனும்
பக்கத்தில் வந்துவிட்டால்
வாடிய முகம் கண்டு
வாடிப்போகும் வசதியற்றவர்கள்
காற்றில்லா போதும்
களத்து மேட்டில் கை முறத்தால்
காற்று வீசி
பதறு வேறு முத்துவேறாய் பாகம் பிரித்து

ஆண்டை வீடு அவை சேரும் வரை
சேர் கழுவா சித்திரங்கள்
சேரிச் சனங்கள்!

தானியங்கள் அனைத்தும்
தாழியில் நிரப்பிவிட்டு
ஆண்டை வீட்டில் அறுத்த நெல் கூலிக்காக அளவில்லா நேரம் வரை
அயராது காத்து நிற்கும்
அன்பர்கள் அரிஜனங்கள்...







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...