எஸ். டோரதி ன்கிற டோரதி கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற தாவரவியல் பேராசிரியர். கவிஞர், திறனாய்வாளர், மொழிபெயர்ப்பாளர், கல்வி செயற்பாட்டாளர். ஆங்கிலக் கவிஞன் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த்தின் சகோதரி ஒரு கவிஞர். அவரது பெயர் டோரதி. ஆகவே அப்பெயரை இவருக்குச் சூட்டியிருக்கிறார்கள் பெற்றோர். இப்பெயரின் பொருள் கடவுளின் அன்பளிப்பு
திருச்சியில் பிறந்தவர். சென்னை இராணிமேரி கல்லூரியில் பணியாற்றும் பொழுது கிருஷ்ணமூர்த்தியைப் பதிவு திருமணமாக மணந்தார். இவர்கள் இருவரும் சேர்ந்த உருவாக்கிய அறிவுக் கோவில் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஞானாலயா நூலகம். வாழ்வதற்காக கட்டிய வீட்டை நூலகமாக மாற்றியவர்கள். ஒரு இலட்சத்திற்கும் மேல் நூல்களைக் கொண்ட நூலகம். சட்டபேரவை விவாதங்களின் போது முதலமைச்சர்களுக்கான பல குறிப்புகள் இந்த நூலகத்திலிருந்து சென்றிருக்கிறது.
வாழ்க்கை அழகானது. எளிமையானது. கற்றது கை மண் அளவு; யாதும் ஊரே யாவரும் கேளிர்; செல்வம் என்பது சிந்தையின் நிறைவே, யாவும் இவருக்குப் பிடித்தமான வாசகங்கள்.
இளம் வயதிலேயே ஆங்கில இலக்கியங்கள் வாசித்தார். The Crescent Moon என்கிற தாகூரின் நூலை வாசிக்க, அந்நூல் அவருக்குப் பிடித்துப்போக ஒரே இரவில் இந்நூலை மொழிபெயர்ப்பு செய்தவர்.
திருமணத்திற்குப் பின் மாமன்னர் கல்லூரி உட்பட பல கல்லூரிகளில் பணியாற்றியவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது கற்பித்தல் பணி 32 ஆண்டுகள். அறிவொளி இயக்கக் காலத்தில் மாவட்டத் துணைத் தலைவராக இருந்துள்ளார்.
தாகூரின் - Cresent moon ( வளர்பிறை ) Stray Birds ( சிந்தனைப் பறவைகள் ), கபீர் Poems ( கபீர்தாஸ் பாடல்கள் ), Aten borough's Lie on Earth ( பரிணாமத்தின் கதை ), Furgitive Auralius -Meditations ( ஆத்மதாகம்), அரபிய இரவுகள், அறிவியல் கட்டுரைகள் இவர் மொழிபெயர்த்த நூல்களாகும். இது தவிர டோரதி கவிதைகள் என கவிதை நூல் படைத்துள்ளார்.
தாகூரின் கவிதை மலர்கள் எனும் இந்நூல் கல்லூரியில் இளங்கலை மாணவியராக இருக்கையில் மொழி பெயர்த்தது. இந்நூலுக்கு அணிந்துரை வி.ஆர்.எம். செட்டியார்.இவரது மொழிபெயர்ப்பில் இரண்டு பத்திகள்.
அடிமை மனப்பான்மையுள்ள தூரிகை, குறுகிய சித்திரத் திரையின் அளவுக்கே உண்மையைக் குறைத்துக்காட்டுகிறது.
2.
ஏ மதியிழந்தவனே ! உன்னையே உன் தோளின்மேல் ஏன் தூக்கிச் சுமக்கிறாய்? ஏ, பிச்சைக்காரனே !உனது கதவண்டை ஏன் பிச்சை கேட்கிறாய்?
சுமையின் பொறுப்பை ஏற்றுக் கொள்பவனிடம் உனது கவலையை விட்டுவிடு. வருந்தித் திரும்பிப் பார்க்காதே. உனது ஆசை உனது உள் ஒளியை அணைக்கிறது. இது சுத்தமற்ற நிலை. அருட்காதலில் விளையும் கொடைகளையே அன்புடன் ஏற்றுக்கொள்.



கருத்துகள்
கருத்துரையிடுக