ஆ.ஞானப்பிரகாசம், வல்லளார் நகர் - குரும்பூர், அறந்தாங்கி. கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கிராம ஊராட்சி அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். வள்ளலாரின் சமய சன்மார்க்கம் மீது பற்று கொண்டவர். ஆன்மீகவாதி. திருவள்ளுவர் , வினோ பாவே, காந்தியடிகள் , நம்மாழ்வார் , அப்துல் கலாம் இவர்கள் வலியுறுத்தும் கருத்துகளை ஏற்று அதன்படி நடப்பவர். பசுமை, இயற்கை, வேளாண்மை இவற்றின் மூலமே மனித மாண்பைக் காக்க முடியும், என நம்புகிறவர்.
உங்களால்தான் முடியும், எனும் இந்நூல் இவரது முதல் படைப்பு. நூல் அட்டை முதல் உள்பக்கங்கள் வரை பச்சை மயம். நிலா பதிப்பகம், அறந்தாங்கி.
முதுமக்கள் தாழி, பஞ்சகவ்யம், அமுதக் கரைசல் , அக்னி அஸ்திரம் , பீமா அஸ்திரம் தயாரிப்புகள் குறித்து குறிப்புக்கள் தருகிறார்.
இந்நூலில் இடம்பெற்ற தகவல்கள் யாவும் பயனுள்ளவை. குறிப்பாக எங்கெங்கு என்னென்ன மரங்கள் வளர்க்க வேண்டுமென தரும் பட்டியல் யாவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
தண்ணீர் வசதி உள்ளவர்கள் வளர்க்க வேண்டிய மரங்கள்
வாழை, கொய்யா, மாதுளை, சப்போட்டா, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பேரீச்சை, தென்னை
தண்ணீர் குறைவாக உள்ளவர்கள் வளர்க்க வேண்டிய மர வகைகள்
மா, சப்போட்டா, முந்திரி, சந்தனம் , செஞ்சந்தனம், மகோகனி, களா, முள்ளில்லா மூங்கில்
தண்ணீரே இல்லாத மானாவாரி நிலங்களில் வளர்க்க வேண்டிய மர வகைகள்
வேம்பு, வாதா, வாகை, புங்கன், புளி, சூபாபுல், வேங்கை, வேலா கருவேல், இலவம், ஒதியன்
கட்டாந்தரையில் வளர்க்க வேண்டிய மர வகைகள்
உசிலை, வெட்பாலை, கொன்றை, மாங்காது வேல், வாகை, சூபாபுல்
மணல் சாரியான மண்ணில் வளர்க்க வேண்டிய மரங்கள்
முந்திரி, பனை , உடைவேலா
களிமண் நிலங்களுக்கு ஏற்ற மரங்கள்
கருவேல், வெள்வேல், சூபாபுல் வாகை, வேம்பு, புங்கன், புளி, கொடுக்காய்ப்புளி, நாவல், நெல்லி , வில்வம், விளா
களர் உவர் நிலங்களுக்கு ஏற்றவை
உடைவேலா, வெள்வேலம்
நீர் பிடிப்பு பகுதி வளர்க்க வேண்டிய மர வகைகள்
நீர்மருது, நீர்க்கருவேல், நாவல், கடம்பு
கோவில்களில் வளர்க்க வேண்டிய மரங்கள்
மகிழம், ஆல், அரசு ,அத்தி, இத்தி, வேம்பு, நாவல், நெல்லி, நாகலிங்கம் , மாவிலங்கம் , வில்வம், வன்னி, புன்னை, புரசு, மா, வேங்கை
ஆறு, ஏரி, குளம், குட்டை, அருவிகளில் வளர்க்க வேண்டிய மர வகைகள்
பனை, புங்கன், புளி, வேம்பு, நாவல், வில்வம், விளா, மா, பாலை, கடுக்காய், தான்றி, ஆல், உசிலை, மாவிலங்கம், புரசு, பூவரசு
கால்நடை அழிவிலிருந்து காப்பாற்ற முடியாதவர்கள் வளர்க்க வேண்டிய பாட வகைகள்
பனை, புங்கன், கொன்றை வகை, அழிஞ்சில், காஞ்சிறா, வெட்பாலை, பொரிசி, புரசு, ஆவி, ஆயா, ஆச்சா, நரிவிழி, பானை, பாலை, வில்வம், விளா, சீத்தா, சொர்க்க மரம்.
ஒரு மரத்தின் சமன் என்னவென்று ஒரு பாடலில் பாடுகிறார்.
பத்து கிணறுகள் ஒரு குளத்திற்குச் சமம். பத்து குளங்கள் ஒரு ஏரிக்குச் சமம். பத்து ஏரிகள் ஒரு குழந்தைக்குச் சமம். பத்து குழந்தைகள் ஒரு மரத்துக்குச் சமம்.
- மாமனிவர் சரபாலர்

கருத்துகள்
கருத்துரையிடுக