முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 115

 அந்தோனி, பாத்திமா நகர், கே.வி.கோட்டை , ஆலங்குடி. ராமசாமி தெய்வானை அம்மாள் அரசு மேல்நிலைப் பள்ளி - வல்லத்திராக்கோட்டை முதுகலை ஆங்கில ஆசிரியர். கவிஞர், மொழிபெயர்ப்பாளர். சொற்களுக்கு உயிருண்டு என்பதை உணர்ந்து அதற்கேற்ப உரையாடுகிறவர். எதையும் விளம்பரத்திற்காக செய்யாமல் மண், மக்கள் பயனுற செய்கிறவர். கோடை கால விடுமுறையில் ஆண்டனியின் ஆங்கில இலவச பேச்சுப் பயிற்சி வகுப்பு எடுத்துவருகிறார்.   ஒற்றைப்பனை,  A PEEP AROUND , A ROSE IS A ROSE IS A ROSE  ஆகிய நூல்களின் ஆசிரியர்.

தூவானம், எனும் இந்நூல் இவரது நான்காவது நூல். "ஆங்கில ஆசிரியர் தான் நான். ஆனால் வணிகம் செய்ய விரும்பவில்லை. இதயத்தையும் இந்தியாவையும் அன்பால் ஆக்கிரமிக்கவே விரும்புகிறேன். சுபயோக தினத்தில் அல்ல . உபயோக தினத்தில்தான் எனது நம்பிக்கையும் வாழ்க்கையும் நகர்ந்து கொண்டிருக்கிறது. அழகோடும் அளவோடும் கவிதைகள் இருக்க வேண்டும் என்று அன்போடும் அர்த்தத்தோடும் ஆலோசனை வழங்கிய ஐயா அருள்முருகன் அவர்களுக்கும்; கவிதைகளில் ஒளிபாய்ச்சி உளி பாய்ச்ச உதவிய ஆசான் பிரகாசம் அவர்களுக்கும்; கவிதைகளுக்கு ஞானத் தந்தையாக இருக்கும் நண்பர் பிரபாகரன் அவர்களுக்கும்; இனியவர் இயற்கை ஆர்வலர் இதயத்தில் இடம் பிடித்த இலக்குவணன் அவர்களுக்கும்; பரணிக்கும்,பதிப்பகத்தார்க்கும், கவிஞர் முத்துப்பாண்டிக்கும் எனது பணிவான நன்றிகள்" என தன்னுரையில் நன்றி பாராட்டுகிறார்.




இவரது கவிதைகளில் சொற்கள் மின்னலென வந்து விழுகின்றன. வெளிச்சச் சொற்கள் மழையில் நனைந்து பதத்துப்போகையில் அயனிச் சொற்களால் செறிவூட்டுகிறார். அப்படியாகச் செறிவூட்டப்பட்ட
இத்தொகுப்பில் ஒரு கவிதை

பார்வை
கதிர்வீச்சால்
பாதிக்கப்பட்டவன்  நான்-
நிவாரணம்
வழங்குவாயா
செறிவூட்டப்பட்ட உன்
புன்னகையால்?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...