இரா.சிவப்பிரகாசம், தென்னகம், கரம்பக்குடி. சொந்தமாக அரிசி ஆலை நடத்துகிறார். வணிகர். எல்.ஐ.சி முகவர். அறிவியல் ஆன்மீகம், மருத்துவம், வாழ்வியல் கட்டுரைகள்,..எனத் தொடர்ந்து எழுதி வருகிறவர். சேனையர் முரசு, தினமலர் இதழ்களில் உள்ளூர் பிரச்சனைகளைப் பதிவு செய்து வருகிறார். இவரது புதல்வர் சி.அன்பழகன், புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
எனது சிந்தனைகள், இவரது இரண்டாவது நூல். எளிமையான வரிகள் கொண்ட கவிதைகள். சுய விமர்சனம், அறிவுரை, அனுபவம், பணத்தின் சூத்திரம், ஆரோக்கிய அரிச்சுவடி,...என வாழ்தலுக்கான எதிர்கொள்ளலைப் பேசுகிறது. இத்தொகுப்பில்
மிஞ்சாது....என்றொரு கவிதை
உயர உயரப் பறந்தாலும்
ஒருக்காலும் காகம் கழுகை மிஞ்சாது!!
காட்டு விலங்குகளால்
கானகம் நிறைந்திருந்தாலும்!!
கர்ஜிக்கும் காட்டு ராஜா
சிங்கத்தை எதுவும் மிஞ்சாது!!
பறக்கும் இனத்தில்
பல்லாயிரம் இருந்தாலும்!!
சுறுசுறுப்பில் தேனியை
எதுவும் மிஞ்சாது!!
உழைக்கும் மக்கள்
ஓராயிரம் ஆனாலும்!!
உழவுத் தொழிலை
ஒன்றும் மிஞ்சாது!!

கருத்துகள்
கருத்துரையிடுக