முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 122

சு. நரேந்திரன், மருத்துவர்.  பூர்வீகம் புதுக்கோட்டை.  தொடக்கக் கல்வியைப் புதுக்கோட்டை டி.இ.எல்.சி பள்ளியிலும், கல்லூரிக் கல்வியைச் சென்னையிலும் நிறைவு செய்தவர். தஞ்சையில் மருத்துவப் படிப்பை முடித்து, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் நுண்ணுயிரியல் துறையில் முனைவர்ப் பட்டம் பெற்றவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் “கல்லீரல் அமீபா சீழ்க்கட்டியினால் நேரும் இறப்பு விழுக்காடு கட்டுப்பாடு” என்னும் தலைப்பிலும் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். இவரது தந்தை தினத்தந்தி  இதழின் மாவட்ட நிருபர்.


30 ஆண்டுகள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றியவர். பேராசிரியராகப் பல ஆயிரம் மருத்துவர்களை உருவாக்கியவர். தற்போது தஞ்சாவூர் கீழவீதியில் அரண்மனைக்கு எதிரில் ஒரு சிறிய மருத்துவ ஆலோசனை மையம் நடத்துகிறார்.

19.10.2022 நாளிட்ட ஆனந்த விகடன், மாரத்தான் மனிதர்கள் வரிசையில் வெ.நீலகண்டன் இவரைப் பதிவு செய்துள்ளார். தமிழில் மருத்துவம் படித்த டாக்டர்கள் வர வேண்டும்! என்பது இவரது ஆகப்பெருங்கனவு. அதற்காகத் தன் வாழ்வின் 50 ஆண்டுகளை அர்ப்பணித்திருக்கிறார். இதுவரை 20000 சொற்களுக்கும் மேல் மருத்துவக் கலைச் சொற்களைச் சேகரித்துள்ளார். செரிமானப் பாதை அறுவை மருத்துவம் ; பொது அறுவை மருத்துவம் என இரண்டு நூல்கள் மருத்துவ மாணவர்களுக்குப் பாடநூல்களாக வைக்கப்பட்டுள்ளன.  இது தவிர 30 மருத்துவ நூல்கள் தமிழில் எழுதியிருக்கிறார். தமிழ் பயிற்றுமொழி கனவும் நனவும்; தமிழால் மருத்துவக் கல்வி முடியும் என்கிற இரு நூல்களும் நம்பிக்கையூட்டும் நூல்கள்.






நரேந்திரன் தன் எழுத்துப் பங்களிப்புக்காகவும் மருத்துவ ஆய்வுக்காகவும் ஏராளமான அங்கீகாரங்களைப் பெற்றிருக்கிறார். இந்திய அரசின் தேசிய விருது, இங்கிலாந்தின் ராயல் காலேஜ் ஆப் சயின்ஸ் அமைப்பின் விருது, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது,...உட்பட பல விருதுகள் பெற்றவர்.

"தமிழால் மருத்துவக் கல்வி முடியும்", எனும் இந்நூல் தமிழ் வழி மருத்துவக் கல்வி முடியும், முடியாது என்கிற கருத்து மோதல் தமிழகத்தில் சில ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதற்கு ஒரு முடிவு காணும் வகையில் முடியும் என்பதைத் தக்க சான்றுகளுடன் நிறுவுகிறார். 




புதுக்கோட்டை புத்தகக் கண்காட்சி -2022, நூல் போட்டியில் "அறிவியல் தமிழ் நேற்றும் இன்றும்" -இணையத் தளக் கட்டுரை பிரிவில் பரிசு பெற்றது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...