அமிர்தன், திருவப்பூர், புதுக்கோட்டை.
இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது, அன்புள்ள மான்விழியே. கவிப்பேரரசு வைரமுத்துவின் 'தடைக்கல்லை படிக்கல்லாக்கு' எனும் கவிதை வரிகள் இவரது கவிதைகளின் வைராக்கியத்தை வளர்த்தது என்கிறார். இந்நூலுக்கு வைரமுத்துவிடம் அணிந்துரை வாங்கி, இந்நூலைக் கொண்டுவர பத்து வருடங்கள் ஆகிவிட்டன, என்கிறார். மேலும் கவிஞர் சினேகன், பேராசிரியர் க.துரைப்பாண்டியன், கே.டி. கந்தசாமி ஆகியோர் அணிந்துரை தந்துள்ளார்கள்.வைரமுத்து தன் அணிந்துரையில் கவிதை என்பது ஒரு கவிஞன் எவ்வளவு உணருகிறான் என்பதும் எவ்வளவு உணர்த்துகிறான் என்பதும்தான். அந்த வகையில் அமிர்தன் உன்னதமாக உணர்கிறான். அற்புதமாக உணர்த்துகிறான், என்கிறார்.
இத்தொகுப்பில் ஒரு கவிதை. மரம் பற்றியது. மரம் மனிதனை விடவும் எத்தகைய மேலானது எனச் சொல்லும் கவிதை இது.
மனிதனை
மரமென்று திட்டாதீர்கள்!
இன்னும்
மரங்கள்
தம்
சொந்தக்காலில்தான்
நின்றுகொண்டிருக்கின்றன.

கருத்துகள்
கருத்துரையிடுக