க.மணி. பாரப்பட்டி, குளத்தூர். சுயத்தொழில் செய்கிறார். உண்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் தனது சிந்தனை பயன்பெறட்டும், என்பதாக கவிதைகளைப் பாவிக்கிறார்.
ஆனந்த ரதம், இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காட்டுவாசி எழுதும் கடுதாசி என்கிறார் இக்கவிதைகளை.கவிதை என்பது கட்டுப்படுவதல்ல, பின்னப்படுவது, என்பது இவரது படைப்பூக்கப் பார்வை.
இந்நூலுக்கு அணிந்துரை பேரா. சு.மாதவன் அவர்கள். சமூகம் படைப்பினைப் படைக்கிறது. படைப்போ அடுத்தக்கட்ட சமூகத்தையே படைக்கிறது, என்கிறார் தன் அணிந்துரையில்.
புதுக்கோட்டையின் வரலாற்றுச் சிறப்புமிக்க மீரா பதிப்பகம் இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறது. பதிப்புரை எழுதியிருக்கும் கவிஞர் மீரா சுந்தர், இவரை இயற்கைக் கவிஞர் என்கிறார். குமரகுருபரருக்குக் குழந்தைப் பருவத்தில் சக்தி யின் அருளால் ஞானம் கிடைத்தது போல, கல்வியறிவு அதிகம் பெறாத க.மணிக்கு இயற்கை அன்னை கடைக்கண் காட்டியுள்ளது, என்கிறார்.
எம்மொழியும் நம்மொழி, தவம், அரும்புகளே, தண்ணீரைத் தேடும் கண்கள் என கவித்துவமான தலைப்பிட்ட கவிதைகளில் ஒவ்வொரு கவிதைக்கும் ஒரு முன்னுரை தந்து கவிதை இயற்றிருப்பது வாசிக்க மட்டுமல்ல, வடிவத்தாலும் புதிதாக இருக்கிறது.
சுதந்திரப் பறவை என்றொரு கவிதை.
முன்னுரை
துன்பமில்லாத இடமில்லை
துன்பப்படாத இனமில்லை
கோடி கோடியா இருந்தாலும்
குழப்பமும் கூடக் கலந்திருக்கும்- நிலம் வேலி வேலிய அமைந்தாலும்
வேதனை புகுந்து குடியிருக்கும்
நாடாளும் அரசனுக்கும்
கூடாத பயம் பெறக்கும்
நாடாத முனிவரையும்
நாடி வந்து வினையிழுக்கும்
மணமான இளைஞருக்கும்
மருந்தாகச் சுகம் கிடைக்கும்
மழைக்கால மானாலும்
மரம்விட்டு இலை இறக்கும்.
விஞ்ஞானி யானாலும்
வேதாந்தி யானாலும்
மெயென்ற கையுறையில் -துன்பம் மெதுவாக நுழைந்துவிடும்!
துன்பம் ஆட்சி செய்ய
சுதந்திரம் தலையாட்டும்
இன்பம் காட்சி தர
இதயத்தை அலையாட்டும்

கருத்துகள்
கருத்துரையிடுக