முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அழ.கணேசன்

 புதுக்கோட்டை எழுத்தாளர்கள் - 126

அழ.கணேசன், அழகப்பன் கணேசன். கணேஷ் நகர் (நெடுவை), சத்தியமங்கலம், குளத்தூர் வட்டம். நார்த்தாமலை.  கறிக்கடை நடத்துகிறார்.

மெத்தப் படித்தவர்கள்தான் கவிதைகள், கட்டுரைகள் எழுத முடியுமென்கிற கருத்தை முழுமையாக உடைத்திருப்பவர். மூன்றாம் வகுப்பு கூட முழுதும் முடிக்காத இவர் ஆறு நூல்களுக்கும் மேல் எழுதியிருக்கிறார்.  இந்தியாவிலுள்ள பல நகரங்களையும் பல நாடுகளையும் சுற்றி வந்தவர்.  இவரது முதல் கவிதை சிங்கப்பூர் இதழில் வெளியான அற்புத சிங்கபுரம் என்கிற கவிதையாகும். ஆனந்த ஜோதி, சாரல், கீதம், உரத்த சிந்தனை உட்பட பல இதழ்களில் இவரது கவிதைகள் பிரசுரமாகியுள்ளன.  கண்ணால் காண்பது அனைத்தையும்/ கற்றுமுடி/ இல்லையேல் செத்து மடி என அறம் பாடுகிறவர். 




இவரது முதல் கவிதைத் தொகுப்பு எளியவனின்  ஏணிப்படிகள்,  புதுக்கோட்டை மீரா பதிப்பகம் மூலம் வெளியானது. மனதைப் பாரமாக்கிய புத்தக வரிகள்,  இறப்பிற்கும் பிறப்பிற்கும் இடையிலாடும் ஊஞ்சல் ஆகிய நூல்கள் விரைவில் வெளிவர இருக்கின்றன.

கவனத்தில் கொள்ளவேண்டிய கவிதைகள் எனும் இத்தொகுப்பு , மணிமேகலை பிரசுரம் வழியே 2021 ஆம் ஆண்டு வெளியானது. இத்தொகுப்பில் கவிஞர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறார். கவனத்தில் கொள்ளவேண்டிய கவிஞரின் வேண்டுகோள் கவிதை இது.

கவிஞர்களே !

நிலவினைப் பாடியே
நிம்மதி கொள்ளாதீர்கள்.

உழவனைப் பாடுங்கள் அவன் தூய உள்ளத்தைப் பாடுங்கள்

குயவனைப் பாடுங்கள் அவன்கையின் கலையினைப் பாடுங்கள்

தெருவோர வாசிகளின் கையில்இருக்கும் சிசுவினைப் பாடுங்கள்





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...