முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

சி. செகநாதன்

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 132

சி. செகநாதன், அருளகம், திலகர் திடல், புதுக்கோட்டை. அருட்பா அவதானி, திருமந்திரச் செம்மல் பட்டங்களால் அறியப்படுகிறார். புத்தகங்களுக்குச் செலவிடும் பணம் செலவல்ல, அறிவின் முதலீடு என்பதை மக்கள் மத்தியில் சொல்லிக்கொண்டிருப்பவர். அருட்பெருஞ்சோதி அகவல் இனிய எளிய உரை, சிவபுராணம் ஞான உரை, விநாயகர் அகவல் ஞான உரை, அறியத்தக்க ஆயிரம் – தொகுதி -1, அருட்பாவில் அறியத்தக்க ஆயிரம் தொகுதி – 2, வள்ளலாருக்கு மட்டுமே வாய்த்த வரங்கள், திருக்குறள் சன்மார்க்க உரை, வள்ளலார் பிள்ளைத்தமிழ், அருட்பெருஞ்ஜோதி அகவலில் அறியத்தக்க ஆயிரம் தொகுதி-4, மங்கைபாகர் – தேனம்மை அருள் அந்தாதி, அருவியூர் நகரத்தார் அம்மானை ஆகிய நூல்களின் ஆசிரியர்.

நீங்களும் வள்ளலார் ஆக,..எனும் இந்நூல் வள்ளலாரை முழுமையாகப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்நூல் எழுதுவதற்கான காரணத்தை இவ்வாறு என்னுரை தருகிறார். வள்ளற் பெருமானுடைய அருமை பெருமைகளை அரிய உண்மைகளை அருட்பாவை ஆராய்ந்து தெரிந்து அதனை மேடைகளில் பேசும் பொழுதும், பேசி முடித்த பின்னரும் பலர் என்னைச் சூழ்ந்துகொண்டு கேட்கும் கேள்வி, “ வள்ளலாருக்குப் பின்னர் வந்த 190 ஆண்டுகளாக யாரேனும் ஒருவர் அவர் போன்று வந்துள்ளாரா?” என்பதே ஆகும். இப்படிப்பட்ட கேள்வி அவர்களுக்குள் எழுந்த இனம் புரியாத, அவா மிகுந்த கேள்வி என எண்ணிக்கொள்வேன்.

இக்கேள்விக்குச் சரியான பதிலை என் உளம் தேடிக்கொண்டே இருந்தது. ஒரு நாள் வள்ளலாரைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டிருந்த பொழுது ஐயோ பாவம்! இந்த ஜனங்கள் இறைவனைப் பற்றிச் சரியாகத் தெரிந்து கொள்ளாததினாலேதான் நம்மை இறைவன் எனச் சுற்றுகிறார்கள் என்று அவர் தம் கருத்து என்னுள் பளிச்சிட்டது.

ஆம்! ஆம்! இந்த மக்கள் வள்ளலாரைச் சரியாகப் புரிந்துகொள்ளாததினால் அல்லவா, இன்னுமொரு வள்ளலாரைத் தேடி அலைகிறார்கள். ஐயோ பாவம் என எண்ணினேன். இவர்கள் வள்ளலாரை எப்படிச் சரியாகப் புரிந்துகொள்வார்கள்?அல்லது நம்மால் இவர்களுக்குப் புரிய வைக்க முடியுமா? எனச் ஊன்றிச் சிந்தித்தேன். அதன் விளைவே இந்த நூல், என்கிறார்.




 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...