புதுக்கோட்டை எழுத்தாளர் - 135
ஏம்பல் ராஜா, இயற்பெயர் என்.பழனிவேல் ராஜா. MBBS, மக்கள் நல மருத்துவர். ஆவுடையார்கோவில். கவிஞர், பத்திரிகையாளர், தமுஎகச கௌரவத் தலைவர், நவீன ஏகலைவன் இலக்கிய இதழின் ஆசிரியர், சமூகச் செயற்பாட்டாளர், ஏகலைவன் இலக்கிய_வட்டம், ஏகலைவன் இரவு பாடசாலை நடத்துகிறார். டாக்டர் ராஜா மருத்துவமனையின் வாயிலாக மக்கள் உடல்நலம் பேணுகிறார்.சமூக மேம்பாட்டிற்குப் பெரிதும் காரணம் கல்வியே, கவிஞர் அறிவுமதி தலைமையிலான கவியரங்கத்தில் இவரது கவிதை முதல் பரிசு பெற்றது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர், கவிக்குயில் விசாலி,..போன்றவர்களின் கரங்களால் பரிசுகள் பெற்றுள்ளார்.
அக்னிக்குஞ்சுகள் இவரது முதல் கவிதை நூல். அணிந்துரை கவிஞர் அறிவுமதி அவர்கள். என் இரவுகள் கவிதைகளால் விடுகின்றன. என் காயங்கள் கவிதைகளால் ஆறுகின்றன, என்கிறார் ஏம்பல் ராஜா. கரைகளைப் பிடித்துக்கொண்டே நதி பயணமாவதைப்போல் கவிதையினைப் பிடித்துக்கொண்டே நான் பயணமாகிறேன். அடிநெஞ்சில் கனன்றுகொண்டு என் உயிரின் ஆணிவேரையே எரித்ததால் இந்தக் கவிதைகளுக்கெல்லாம் நான் அக்னிக் குஞ்சுகள் என்று பெயரிட்டேன், என்கிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக