புதுக்கோட்டை எழுத்தாளர் -136
கோ.சாமிநாதன், ஆசிரியர், புலவர். ஊர் மூட்டாம்பட்டி, வைத்தார். பூர்வீகம் அரியலூர் மாவட்டம் பாளையப்பாடி. அழகப்பா பல்கலைக் கழகம் காரைக்குடியின் தொலைத்தூர கல்வி மையத்தில் ஆங்கிலத்துறை இளங்கலை மற்றும் முதுகலை பகுதிநேர விரிவுரையாளராக பணிபுரிந்துள்ளார். ஓய்வுக்குப் பிறகு புதுக்கோட்டை நேரு யுவகேந்திராவில் பணியாற்றியுள்ளார். நூலகத்துறையில் பெரிய ஈடுபாடு கொண்டவரென்பதால் புதுக்கோட்டை வடக்கு ராஜா 3ஆம் வீதியில் எஸ்.ஆர். ரெங்கநாதன் பெயரில் தனிநபர் நூலகம் நடத்திக்கொண்டிருக்கிறார். இதற்கான வாடகையைத் தன் ஓய்வூதியத்திலிருந்து கொடுக்கிறார். இந்நூலகத்தில் சுமார் ஆயிரத்து ஐநூறு நூல்களுக்கும் மேலுள்ளன.
இவர் ஆறு நூல்கள் எழுதியுள்ளார். கர்மயோகி டாக்டர் சியாழி இராமாமிர்த அரங்கநாதன், Women sensibility in Anitha Desai Novel, சோர்வறியா உழைப்பாளி சாமிநாதன் இல்லையென்றால், அமிழ்தினும் இன்ப, வாசிப்பை நேசிப்போம் ஆகிய நூல்கள் குறிப்பிடத் தகுந்தவை.
வாசிப்பை நேசிப்போம், என்கிற நூல் வாசிப்பின் அவசியத்தையும் நூலகப் பயன்பாடுகளைப் பற்றியும் பேசுகிறது. புத்தகங்கள் நல்ல நண்பர்கள், படிக்கும் பழக்கம், படித்தல் சுமையல்ல சுகம், எண்ணமும் செயலும்,ஏழைகளுக்கு ஏற்றம் நல்கும் நூலகம், என பல தலைப்புகளில் பல்வேறு தகவல்களைத் தருகிறது.
உண்மையான வாசகன் வாசிப்பை முடிப்பதே இல்லை, ஒரு எழுத்தாளன் ஒரு புத்தகத்தைத் தொடங்கி வைக்கிறான். வாசகன் அதை முடித்து வைக்கிறான், எஸ்.ஆர். அரங்கநாதன் வகுத்தளித்த நூலகச் சட்டம் 1949 ஜனவரி 29 ஆளுநர் ஒப்புதல் பெறப்பட்டது, என பல்வேறு சிதறல் செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆசியாவிலேயே மிகப்பெரிய தனிநபர் நூலகம் அம்பேத்காருடையது, எனச் சொல்லும் ஆசிரியர் புலவர் கோ.சாமிநாதன் தன் ஓய்வுகாலத்தை இன்றைய மாணவத் தலைமுறை பயன்பெறும் வகையில் நூலகம் நடத்திக்கொண்டிருக்கிறார். போற்றுதலுக்குரியவராக இருக்கிறார் கோ.சாமிநாதன். வாழ்த்துகள் , வணக்கங்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக