முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குளமங்கலம் ச.ராமசாமி

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 139

குளமங்கலம் ச.ராமசாமி, வடக்குப் புலவர் என அப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டவர். ஆலங்குடிக்கும் அருகில் குளமங்கலம் எனும் சிற்றூர். இவரது தந்தையார் தா.சத்துரு சங்காரவேல்சாமியும் புலவர். இவர் குளமங்கல் அருள்மிகு பெருங்காரையடி மிண்டையனார் பக்திப் பாமாலை என்றொரு நூல் எழுதியுள்ளார்.



ராமசாமி இரு நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் வீசிய புயல், தன்னாண்மைத் தங்கம்மாள் காவியம். இவ்விரு நூல்களும் நாட்டுப்புற மெட்டான நொண்டிச் சிந்தில் பாடப்பட்ட காவியங்கள். 

தமிழ்நாட்டில் வீசிய புயல், எனும் இந்நூல் 1955 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி வீசியுள்ளது. தற்போது வீசிய கஜா புயல் அளவிற்கு அப்புயலின் சீற்றம் இருந்திருக்க வேண்டும். இப்புயலினால் உண்டான பாதிப்புகளை 30 பாடல்களைக் கொண்டு பாடப்பட்ட நூல் இது.




ஊருக்குள் அழித்திடுமாம் – வெள்ளம்

ஊதி வந்த காற்றுடனே போட்டியிடுமாம்!

சீருகள் அழிந்திடுமாம் – கல்விச்

செல்வங்கள் தழைக்கின்ற கலைக்கோயிலில்

ஆறுகள் நுழைந்திடுமாம் – அதன்

அருகிருந்த சோலைகளும் மரங்களுமே

வேருகள் பிடுங்கிடுமாம் வெள்ளம்

விழுங்கிவிட்ட நூல்களுக்கும் கணக்கில்லையாம்.

மரங்கள் வேரொடு சாய்ந்தன.

கூரைகள் பறந்தன.

ஆடு மாடுகள் அடித்துச் செல்லப்பட்டன.

பெரியோரும் குழந்தைகளும் உணவின்றித் தவித்தனர்.

உன்னையும் வென்றிடுமாம் – நாங்கள்

ஓட்டு விமானங்களும் திட்டங்களையும்

தன்னையும் சுழற்காற்றாய் – அந்தத்

தருணத்தில் ஆக்கிக் கொண்ட காமராசரும்

நன்மனை மாடிழந்தோ – அங்கு

நலிந்திட்ட யாவர்க்கும் உணவளித்த

தன்மையை என்னென்போம் – தேசத்

தலைவர் கடமைக்கும் நன்றியுரைப்போம்!

எனப் பாடியுள்ளார். இதுதவிர, உன்னைத் தொடலாமா, என்கிற ஓரங்க நாடகம் எழுதி பல்வேறு இடங்களில் அரங்கேற்றம் செய்துள்ளார். மேலும் திருக்குறளுக்கு உரை எழுதியுள்ளார்.  இவ்விரு நூல்களும் அச்சாகி வெளிவரவிருந்த நிலையில் காலமாகிவிட்டார்.

இவரைக் குறித்து, புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியராக பணியாற்றிய முனைவர் அ. செல்வராசு தினமணி இதழில் எழுதியுள்ளார்.

தன்னாண்மைத் தங்கம்மாள் என்கிற காவியத்திலிருந்து பெருங்காரையடி மிண்ட அய்யனார் குதிரையைப் பற்றிய ஒரு கவிதை அக்கோயிலின் குடமுழக்கு விழா சிறப்பு மலரில் இடம் பெற்றுள்ளது.

 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...