முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அ.சந்திரபோஸ்

 புதுக்கோட்டை எழுத்தாளர் – 140

அ.சந்திரபோஸ், முனைவர், உதவிப் பேராசிரியர், வரலாறு, கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, பற்றிய ஆய்வுத் திறன் பெற்றவர். ஆலங்குடி வட்டம் கொத்தமங்கலம் கிராமத்தில் பிறந்தவர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் வரலாறு படித்து, அதே கல்லூரியில் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற இவர், இந்திய அரசின் சுற்றுலா மற்றும் பண்பாட்டு அமைச்சகத்தின் 2001 -2002 ஆம் ஆண்டிற்கான இளநிலை ஆய்வாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். செட்டிநாடு ஓவியங்கள் என்கிற தலைப்பில் ஆய்வு செய்த இவர் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுத் துறையில் கௌரவ விரிவுரையாளராகப் பணியாற்றியிருக்கிறார். இருபதுக்கும் மேற்பட்ட ஆய்வுக்கட்ரைகள் எழுதியுள்ளார்.

தானவ நாட்டு வரலாறு, இவரது முதல் நூல். பாண்டிய காலத்து ஒரு கல்வெட்டு செயசிங்க குலகால வளநாட்டு தென்னச்சினத்துத் தானவநாடு, எனக் குறிப்பிட்டுள்ளது. தானவ நாடு என்பது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தின் ஒரு பகுதியும் தஞ்சாவூர் மாவட்டம் ஆலங்குடி வட்டத்தின் ஒரு பகுதியும் தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆட்சி செய்த காலத்தில் தானன் என்ற தானவதரையர் என்கிற குறுநில மன்னன் ஆட்சி செய்தான். இப்பகுதி தானவ நாடு என அழைக்கப்படுகிறது. இந்நாட்டின் எல்லைகளாக ஆலங்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் ஆகிய நான்கு திசைகளும் இருந்துள்ளன. சோழ நாட்டிற்கான படைக்கருவிகள் உற்பத்தி செய்யும் நாடாக இருந்திருக்க வேண்டும், என்கிறார் நூலாசிரியர். அம்புலி ஆற்றின் இரு கரையிலும் அமையப்பெற்ற இந்நாடு ஆற்றின் கரை தென் தானவ நாடு வட தானவ நாடு எனப் பிரிக்கிறது. இதற்குள் நாற்பதுக்கும் மேற்பட்ட ஊர்கள் இருந்துள்ளன. இந்நாடு அழும்பில் என அழைக்கப்படும் அம்புக்கோவிலைத் தலைமையிடமாகக் கொண்ட அம்பு நாட்டின் தொடர்ச்சியான நாடாக இருந்திருக்கிறது. தானவ நாட்டின் தலையிடம் கடாரம் கொண்ட சோழபுரம் எனும் சிற்றூர். இந்த இடம் இன்று அரண்மனைத் தோப்பு என அழைக்கப்படுகிறது, என்கிறார். முதலாம் ராசேந்திர சோழனின் ஆட்சிக்காலமான கி.பி 1012 – 1044 இடைப்பட்ட காலத்தில் கடாரத்தின் வெற்றியின் நினைவாக இவ்வூர் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், என்கிறார்.

இந்நூல் தானவ நாட்டின் மக்கள், சாதிய அடுக்குகளின் கீழான கரைகள், மக்களின் தொழில், சமூக கட்டமைப்பு,கோயில்கள் பற்றி பேசுகிறது. இந்நூலில் நடேசக் கோனாரின் நாட்டுப்புறப் பாடல்கள், விடுதலைப்போராளி நல்லையா பற்றிய பதிவுகள் உள்ளன. நல்லையா கள்ளுக்கடை மறியல், வரி எதிர்ப்பு இயக்கம், ஜெமீன் ஒழிப்புப் பேராட்டம், தனிநபர் சத்தியாக்கிரகம் என பல போராட்டங்களை முன் நின்று நடத்தியவர். இவரது நினைவாக கொத்தமங்கலத்தில் ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்நூல் தானவ நாட்டு ஊர்களின் பெயர்க்காரணம், அவ்வூரில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு குறிப்புகள் பற்றிய பதிவுகளையும் பதிவு செய்துள்ளது. புதுக்கோட்டையின் வளமான மற்றும் வலிமையான பகுதியாக தானவநாடு இருந்திருக்கிறது. இந்நூலை வாசிப்பதன் மூலம் ஆலங்குடி மற்றும் அதற்கும் கிழக்குப் பகுதி வரலாற்றை அறிந்துகொள்ளலாம்.




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...