புலவர் பங்களாராயர் திருமயம் தாலுகா காரையூரில் பிறந்தவர். இவரது காலத்தைச் சரியாகக் கணிக்க முடியவில்லை. கிழவன் சேதுபதி காலத்தவராக இருக்க வேண்டும். இவ்வூரின் மாரியம்மன் கோவிலுக்கு முன்புறமுள்ள கல்லில் இவர் தமிழ்புலவர் என வடிக்கப்பட்டுள்ளார். கல்வெட்டில் இடம்பெற்ற ஒரே புதுக்கோட்டை புலவர் இவராகத்தான் இருக்கும். இவர் குறித்து புதுக்கோட்டை கல்வெட்டு சாசனம் மற்றும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சாசனச் செய்யுள் மஞ்சரி ஆகிய நூல்கள் பதிவு செய்துள்ளன.
பங்களாராயர் எழுதிய நூல்கள், ஓலைச்சுவடிகள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. ஆனால் கிழவன் சேதுபதி ஆட்சிக்காலத்தில் பெரும்புலவராக இருந்திருக்க வாய்ப்புண்டு. ஆய்வுப்படுத்தப்பட வேண்டிய புலவர் இவர். இவர் குறித்து எழுதப்பட்டுள்ள சாசனம்.
சாசனச் செய்யுள்
பாரார் தமிட்புலவன் பங்களராயன் பைம்பொற்
சீரா ரகத்தின்பேர் செப்புங்கால்- ஏராருங்
காராளர் கானார் வருங்கற்பக வீரரெனும்
பேராளர் தம்முடைய பேர்.

கருத்துகள்
கருத்துரையிடுக