புதுக்கோட்டை எழுத்தாளர் – 142
பூவை. எஸ். ஆறுமுகம், புதுக்கோட்டை பூவை என்கிற கிராமத்தில் பிறந்தவர். இவர் ஏலக்காய் எனும் இதழில் உதவியாசிரியராகப் பணியாற்றி பிறகு பொன்னி இதழில் இலக்கியப் பயணத்தைத் தொடங்கியவர். பிறகு உமா இதழின் பொறுப்பாசிரியரானார். தமிழ்நாடு அரசு பரிசினை மூன்று முறை பெற்றவர்.இருநூறுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். இவரது நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டவை. உமா இதழில் நாவல்களைத் திறனாய்வு செய்துவந்தார். கல்கி முதல் அகிலன் வரை எனும் நூல் 1964 ஆம் ஆண்டு உமா பத்திரிக்கையில் தொடராக எழுதிய திறனாய்வுகளின் தொகுப்பு. இந்நூலில் பத்து நாவல்களை ஆய்வுக்குட்படுத்தினார். கல்கியின் அலைஓசை, நா. பார்த்தசாரதியின் குறிஞ்சி மலர், ராஜம்கிருஷ்ணனின் மலையருவி, க.நா.சுவின் நளினி, ஆர். ஷண்முகசுந்தரத்தின் அறுவடை, கோவி. மணிசேகரனின் செம்பியன் செல்வி, அமரர் விந்தனின் பாலும் பார்வையும், மு. கருணாநிதியின் வெள்ளிக்கிழமை, அகிலனின் பாவை விளக்கு ஆகிய நூல்கள் அவை.
ஜெயகாந்தன் முதல் சிவசங்கரி வரை எனும் நூல் இவரது இரண்டாவது திறனாய்வு நூல். இந்நூலில் ஜெயகாந்தனின் சில நேரங்களில் சில மனிதர்கள், விந்தனின் பாலும் பாவையும், க.நா.சுவின் நளினி, சுஜாதாவின் காயத்தி, புஷ்பா தங்கத்துரையின் ஒரு் ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது, இந்துமதியின் மணல்வீடுகள், அனுராதா ரமணனி்ன் உறவைத் தேடும் பறவைகள், மகரிஷியின் பத்ரகாளி, பாலகுமாரனின் கல்யாணிமுருங்கை, சிவசங்கரியின் ஒரு சிங்கம் முயல் ஆகிறது ஆகிய நாவல்களை இந்நூல் ஆய்வு செய்கிறது. இந்நூலைத் தொடர்ந்து சாண்டிலியன் முதல் வாஸந்தி வரை என்கிற நூலைப் படைத்தார். வாண்டுமாமாவிற்கு அடுத்து அதிக நூல்கள் படைத்த புதுக்கோட்டை எழுத்தாளர் இவர்.
.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக