புதுக்கோட்டை எழுத்தாளர் - 128
நெப்போலியன், சாரதா நகர், மச்சுவாடி, புதுக்கோட்டை. தற்போது சிங்கப்பூரில் பணிநிமித்தமாய். சிங்கப்பூர் தமிழ்முரசு, முத்தமிழ், தமிழ்நாடன், மலேசியா நயனம், ஆனந்த விகடன், அம்ருதா, காலச்சுவடு உட்பட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. சிறுகதை, கவிதை, திறனாய்வு, கட்டுரை என பல தளங்களில் இயங்குகிறார்.
பதின்மூன்று வயதிலிருந்து கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'நானும் என் கருப்புக் குதிரையும், 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்கஸ் வழங்கும் கோல்டன் பாயின்ட் விருது பெற்றது.
நெப்போலியன், சாரதா நகர், மச்சுவாடி, புதுக்கோட்டை. தற்போது சிங்கப்பூரில் பணிநிமித்தமாய். சிங்கப்பூர் தமிழ்முரசு, முத்தமிழ், தமிழ்நாடன், மலேசியா நயனம், ஆனந்த விகடன், அம்ருதா, காலச்சுவடு உட்பட பல இதழ்களில் இவரது கவிதைகள் வெளியாகியுள்ளன. சிறுகதை, கவிதை, திறனாய்வு, கட்டுரை என பல தளங்களில் இயங்குகிறார்.
பதின்மூன்று வயதிலிருந்து கவிதைகள் எழுதிவரும் இவரது முதல் கவிதைத் தொகுப்பு 'நானும் என் கருப்புக் குதிரையும், 2002 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்நூல் சிங்கப்பூர் தேசியக் கலைகள் மன்றம் மற்றும் சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்கஸ் வழங்கும் கோல்டன் பாயின்ட் விருது பெற்றது.
சிங்கப்பூரில் இருந்தபடி தமிழ்ச்சினிமாவுக்கு பாட்டு எழுதியவர் இவர். காதலில் விழுந்தேன், திரைப்படத்தில் இவர் எழுதிய , உன் தலைமுடி உதிர்வதைக்கூடத் தாங்க முடியாது அன்பே, என்கிற பாடல் காதல் கீதமாக ஒலித்தது.
காணாமல் போன கவிதைகள், இவரது இரண்டாவது கவிதைத்தொகுப்பு. வடிவத்தால், செய்நேர்த்தியால் மொழியால் புதுமைப் படைத்த கவிதைகளின் தொகுப்பு.
சிங்கப்பூர் இலக்கிய மையமும் பெருவிரைவு ரயில் நிறுவனமும் தேசிய கலைகள் மன்றமும் இணைந்து நடத்திய 'மூவிங் வோர்ட்ஸ் 2011' போட்டியில் தேர்வு பெற்று சிங்கப்பூர் பெருவிரைவு ரயில்களிலும் நிலையங்களிலும் மற்றும் சிங்கப்பூர் இலக்கியத் திரட்டிலும் இடம் பெற்ற கவிதை இது.
ஒவ்வொரு பயணமும்...
ஒவ்வொரு பயணமும் முடிவற்ற நிறுத்தங்களை
நோக்கியே
பயணிக்கின்றன...
தற்காலிக தடங்களில்
முற்றுப்பெறும் பயணம்
மறுபடியும் மற்றொரு
நிறுத்தம் நோக்கியே
தொடர்கின்றன...
பயணத்தில்
யாருக்கும்
எந்த நிறுத்தமும்
நிரந்தரமல்ல...
நிறுத்தமற்ற பாதைகளில் நிறுத்தங்களைத் தேடியலையும்
நிற்காத நீண்ட பயணமாய்
இறப்பும்...
பிறப்பும்....
ஒவ்வொரு பயணமும்...
ஒவ்வொரு பயணமும் முடிவற்ற நிறுத்தங்களை
நோக்கியே
பயணிக்கின்றன...
தற்காலிக தடங்களில்
முற்றுப்பெறும் பயணம்
மறுபடியும் மற்றொரு
நிறுத்தம் நோக்கியே
தொடர்கின்றன...
பயணத்தில்
யாருக்கும்
எந்த நிறுத்தமும்
நிரந்தரமல்ல...
நிறுத்தமற்ற பாதைகளில் நிறுத்தங்களைத் தேடியலையும்
நிற்காத நீண்ட பயணமாய்
இறப்பும்...
பிறப்பும்....

கருத்துகள்
கருத்துரையிடுக