புதுக்கோட்டை எழுத்தாளர் – 144
எஸ்.நடராஜன்,
தமிழாசிரியர், சுப்புராமய்யர் மத்யதரகலாசாலை, புதுக்கோட்டை. தாய்நாடு இதழின் முன்னாள்
உதவி ஆசிரியர். சமஸ்தான புதுக்கோட்டையில் பெரிய பதிப்பகமாக இருந்த கார்த்திகேயினி பிரசுரத்தின்
உரிமையாளர். பல நூல்களும் ஆய்வு நூல்களும் எழுதியுள்ளார். பல அறிஞர்களின் படைப்புகளைத்
தொகுத்துள்ளார்.
புதுமுறை அகராதி எனும் இந்நூல்
கார்த்திகேயினி பிரசுரம் தொகுத்திற்கும் புதுக்கோட்டையின் முதல் அகராதி.
10.11.1949 அன்று இந்நூல் வெளிவந்தது. இந்நூலின் முன்னுரை தமிழ் – லெக்ஸிக்கன் பதிப்பாசிரியர்
எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள்.
இந்த அகராதி மூன்று உள்ளுறைகளைக்
கொண்டிருக்கிறது. ண,ன பேதங்கள், ர, ற பேதங்கள்,
ல,ழ,ள பேதங்கள். இவ்வெழுத்துகளால் உருவாகும் சொற்களுக்கு இடையேயான பொருள்களை இந்த
அகராதி நூல் விளக்குகிறது. குணட்டு – கதிர்
முதலியவற்றின் சிறுகொத்து. குனட்டு – குறும்பு.
சேணம் – கலணை, சுவர்க்கம், மெத்தை. சேனம் – பருந்து
ஏரான் – பள்ளிக்கூடத்திற்கு
முதலில் வருகிறவன். ஏறான் – ஏற்றான். ஒருவு
– ஆடு ஒறுவு – வருத்தம். அலகு – அகலம், அளவு. அழகு – வனப்பு, சிறப்பு. அளகு – கோட்டான் கோழியின் பெண் இனம். இப்படியான
வேறுபாடுகளைத் தரும் அகராதி இது.
நூலின் பதிப்புரை – அகராதி ஓர் அரிய திரவியசாலை. எளியோரிடம் உள்ள செப்புக் காசும்
அதனில் உண்டு. ஏந்தலிடம் உள்ள பொற்காசும் அதனில் ஒளிவிடும். ஆனால் அதைச் செலவிடவோ,
அளவறிந்து செய்ய வேண்டும். அவ்விதம் செய்யாவிடில் ஒளி மாறிய, ஒலி மாறிய பொத்தலாகிய
செல்லாக்காசைப் போன்று சொல்லின் பொருள் வேறுபட்டு விகார உருவில் காட்சியளிக்கும். அவ்வித
நிலை அகல ஒரு உதவுகோலாக இவ்வகராதி உதவுமென்று கருதுகின்றோம்.
இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கும் எஸ்.நடராஜன், தமிழ்மொழியை
பிழையற எழுதவேண்டுமென்ற பெருநோக்குடன் வெளியிடப்பட்டதே இந்நூல். இம்முயற்சியை அறிஞர்
பலரிடம் கூறினேன். அவர்களின் ஆசியே இந்நூல் என்று அகமகிழ்கின்றேம். எம் சிற்றறிவுக்கு
எட்டிய வரை செப்பம் செய்துள்ளேம். இந்நூலைத் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஆதரித்து மேன்மேலும்
இம்முறையான சிறிய நோக்கங்களுக்கு ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும்படி விரும்புகின்றோம்.


கருத்துகள்
கருத்துரையிடுக