புதுக்கோட்டை எழுத்தாளர் - 151
பி. வெங்கட்ராமன் . எழுத்தாளர் , அச்சகத்தார், பதிப்பாளர், இதழாசிரியர். தனது இயற்பெயரிலும் வடமலையழகன் எனும் புனைபெயரிலும் எழுதியவர். சமஸ்தான இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு காகிதத் தட்டுப்பாடு மேலோங்கிய காலத்தில் அதுவரை இயங்கிக் கொண்டிருந்த பல அச்சகங்களும் பல இலக்கிய , குழந்தை இதழ்களும் நின்றுவிட்டிருந்தன. அந்தக் காலக்கட்டத்தில் தொடர்ந்து இயங்கியது புதுக்கோடடை கண்ணபிரான் அச்சகம். பல இதழ்களை அச்சேற்றிக் கொடுத்தது இந்த அச்சகம்தான். இதை நடத்தியவர் பரசுராம். இவரது மகன் பி. வெங்கட்ராமன் அவர்கள். தற்போது சென்னையில் வசிக்கிறார்.தந்தையார் பரசுராமிடம் தானொரு இதழ்த்தொடங்கி நடத்தப்போவதாக விருப்பம் தெரிவித்தார். அப்போது இவருக்குப் பள்ளி வயது. தந்தையும் விருப்பத்திற்கு இசைவு தெரிவிக்க 'டிங் டாங்' எனும் குழந்தை இதழைத் தொடங்கினார். இந்த இதழின் ஆசிரியர் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா அவர்கள். மேலும் இவர் அகிலனுடன் நெருங்கிய நட்பு கொண்டவர்.
பி.வி என அழைக்கப்படும் வெங்கட்ராமன் , வடமலையழகன் எனும் புனைப்பெயரில் பல படைப்புகள் தந்துள்ளார். சாலைவிதிப் பாடல்கள் இவரது படைப்புகளில் முக்கியமானது. தினமணி பத்திரிகையில் சில காலம் பணியாற்றி பிறகு டி.வி.எஸ் நடத்திய தனிச்சுற்று ஹார்மணி இதழில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு குழந்தை இலக்கியம் மீது நாட்டம் கொண்டு அழ. வள்ளியப்பா படைப்புகளைத் தொடர்ந்து பரவலாக்கிவருகிறார், மேலும் அழ. வள்ளியப்பா பெயரில் குழந்தை எழுத்தாளர்களுக்கு விருது வழங்க அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஒரு பி.ஆர்.ஓவின் இலக்கிய டயரி எனும் இந்நூல் பல இலக்கிய நிகழ்வுகளின் கட்டுரைத் தொகுப்பு. கண்ணபிரான் அச்சகம், டங் டாங் இதழ், புதுக்கோட்டை தினம் கொண்டாடுவோம், பாலர் இதழ் காலமே மணிக்கொடிக்காலம், பண்பில் சிகரம் பாலா, ஞானபீட விருதாளர் அகிலன், தமிழில் சிறுவர் இதழ்கள்,..என பல இலக்கிய நிகழ்வுகளை இந்நூலில்பதிவு செய்துள்ளார். வெளியீடு மணிவாசகர் பதிப்பகம்.


கருத்துகள்
கருத்துரையிடுக