முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

வீ.செல்லப்பன்

புதுக்கோட்டை எழுத்தாளர் - 153

வீ.செல்லப்பன், தலைமை ஆசிரியர் மற்றும் கல்வி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தந்தை பெரியார் இல்லம், சுப்பிரமணியபுரம், புதுக்கோட்டை. தமிழ்மன்றம், நுகர்வோர்குழு கூட்டுறவுச்சங்கம்,  பகுத்தறிவு பணிகளில் பங்களிப்பு செய்கிறவர்.

தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் எனும் இந்நூல் பணி ஓய்வுக்குப் பிறகு இவர் எழுதிய முதல் நூலாகும். ஒரு மொழியில் எழுத்துக்கள் அமையும் முறைகள், தமிழ் மொழியில் அமைந்துள்ள எழுத்துக்களின் அமைப்பு முறை, திருந்தாத் தமிழ் நெடுங்கணக்கு, தற்போதுள்ள தமிழ் எழுத்து முறையால் ஏற்படும் கேடுகள், பழைய எழுத்துமுறைகள், இதுநாள் வரை மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்கள், தமிழக அரசின் எழுத்துச் சீர்திருத்த ஆணை, தற்போது எழுத்து முறையில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்,தமிழ் எழுத்துச் சீரமைப்பால் ஏற்படும் நன்மைகள் , எழுத்துச் சீர்திருத்தம் வேண்டும் தமிழறிஞர்கள் கருத்துக்கள் ஆகிய தலைப்புகளைப் பொருளடக்கமாகக் கொண்ட நூல் இது.

"ஒரு மொழியானது எந்த அளவிற்குத் தொன்மை வாய்ந்தது என்று கூறுகிறார்களோ,  அந்த அளவிற்கு அம்மொழி மாற்றம் செய்யப்பட வேண்டும் என்று பொருள் " என்கிறார் தந்தை பெரியார். 18 ஆம் நூற்றாண்டில் வீரமாமுனிவர் தமிழ்மொழி எழுத்துகளில் செய்த மாற்றமே முதல் பெரும் மாற்றமாகும். அதன்பிறகு தந்தை பெரியார் செய்த சீர்திருத்தம் பெரும் சீர்திருத்தமாகும். தமிழ்மொழியில் நெடிலைக் குறிக்க 13 வகையான குறியீடுகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சா - துணைக்கால்
தூ - துணைப்பொய்க்கால்
சே - இரட்டைக் கொம்பு
சோ - இரட்டைக்கொம்பு மற்றும் துணைக்கால்
ஏ - அடிக்கோடு
டூ - 0 என்ற மேற்சுழி
ஓ - 0 என்ற அடிச்சுழி
சி - மேற்கொம்பு
சீ - மேற்சுழியும் கொம்பும்
டீ - அடிமுதல் மேல்வரை கொம்பும் சுழியும்
சூ - கீழ்க்கொம்பும் சுழியம்
ஊ , ஔ - ள என்ற எழுத்து
ஈ - எழுத்தின் முழுவடிவமே மாறி நெடிலைக் குறிக்கிறது.
கூ - உ என்ற குறியீடு

06,07.08.1932 நாட்களில் துறையூரில் நடைபெற்ற தமிழர் மாநாட்டில் தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை குத்தூசி குருசாமி முன்மொழிய கோவை.சிவானந்தம் வழிமொழிந்தார். அதன்பிறகு தமிழ்மொழி எழுத்துச் சீர்திருத்தம் வேண்டி தொடர்ந்து குரல்கொடுத்து வந்தார்கள்.

ஓ.பி. ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகவும் அவினாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராகவும் இருந்தபோது 'தமிழ்மொழி சீர்திருத்தக் குழு ' அமைக்கப்பட்டது. அதில் தமிழ் அறிஞர்கள் தெ.பொ. மீ, ரா.பி.சேதுப்பிள்ளை, டி.சொக்கலிங்கம், கே.சுவாமிநாதன் போன்றோர் உறுப்பினராய் இருந்தனர். தமிழ் மொழி எழுத்து சீர்திருத்தம் மேற்கொண்டால் அப்பெருமை தந்தை பெரியார் அவர்களைச் சென்று சேரும் என கருதி அக்குழுவைச் செயலற்றதாக்கினர்.

பெரியாரின் நூற்றாண்டு விழாவின் போது ஈரோட்டில் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்கள் பெரியார் சீர்திருத்த எழுத்துகளை ஏற்று 19.10.1978 அன்று அரசு ஆணை வெளியிட்டார். 
பெரியார் சீர்திருத்த எழுத்துகளில் சில சீர்திருத்தங்கள்  மட்டுமே ஏற்கப்பட்டன. குறிப்பாக ஐ - அய், ஔ - அவ் எழுத்துக்கள் நடைமுறைக்கு ஒத்துவரவில்லை. 



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...