முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ந. ஆறுமுகம்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 145

ந. ஆறுமுகம்,  தலைவர், குறிஞ்சி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குடியிருப்போர் நலச்சங்கம், புதுக்கோட்டை.  சொந்த ஊர் - வெண்ணாவல்குடி,  புதுக்கோட்டை மாவட்டம்.  இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து கிராம நிர்வாகப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் பன்னிரெண்டு வயது முதலே ஆர்வம் கொண்டவர்.  கல்லூரி காலங்களிலும் அரசுப் பணி காலத்திலும் எழுதிய கவிதைகளில் தொகுப்பே கவிதைச்சரமாக மலர்ந்துள்ளது. இவர் பல கவியரங்குகளின் கலந்துகொண்டு சிறந்த கவிஞர் எனப் பாராட்டப் பெற்றுள்ளார். இவரது துணைவியார் திருமதி என்.ராக்கம்மாள், ஆலங்குடி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்.

கவிதைச் சரம் எனும் இந்நூல் மரபு, புதுக்கவிதை, சினிமா மெட்டு என பல வடிவக் கவிதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் ஒரு பாடல்.

மாரியம்மா துதி
( என்னடீ ராக்கம்மா- மெட்டு )

அடி என்னம்மா பொன்னம்மா
பூவம்மா -தாயே
எங்கமுத்து மாரியம்மா! - திருக்
கண்ணனூர்ப் பெண்ணே- என்
வெண்ணாவல் நாட்டின்
கன்னி முத்து மாரியம்மா!

ஐந்தாறு பெண்களுடன் நீ பிறந்து- உலகு ஆளவந்தாய் பொருத்தமடீ! - இந்த
ஆறாவதாய்ப் பிறந்த ஆறுமுகன்
அவனைப் பார்க்கவில்லை வருத்தமடீ!

சேந்தாங்குடி கீழையூரு குளவாய்ப்பட்டி - எல்லாம்
சேர்த்து வைக்கும் வெண்ணாவல்குடி சிங்கார வீதிகளும் தோரணங்களும் செல்வச் செழிப்பினில் பறக்குதடீ!

எப்போதும் நான் உன்னை நினைத்திருப்பேன்
என்னை தப்பாகாமல் காக்கணுமே!
என் அன்னை தினம் உன்னை நான் எண்ண
அடி- அம்மம்மா கண்ணாலே பார்க்கணுமே!
கடைக்கண்ணாலே பார்க்கணுமே!

முன்னாளில் வாழ்ந்தவர்கள் பல கோடி -தினம்
பண்போடு உனைப்பாடி-தனே
தன்னானே தானே என்று விளையாடி வாழ்ந்த- தாத்தனுக்குப் பேரனடி!
கண்ணான மாரி என்மேல்
கருணை வைத்து- நல்ல
கல்வி அருள் கொடுக்கணுமே! - அடி செல்லம்மா
கற்றபடி நடக்கணுமே!



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...