புதுக்கோட்டை எழுத்தாளர் - 145
ந. ஆறுமுகம், தலைவர், குறிஞ்சி நகர், ஸ்ரீ பாலாஜி நகர், குடியிருப்போர் நலச்சங்கம், புதுக்கோட்டை. சொந்த ஊர் - வெண்ணாவல்குடி, புதுக்கோட்டை மாவட்டம். இளநிலை உதவியாளராகப் பணியில் சேர்ந்து கிராம நிர்வாகப் பணியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிதைகள், கட்டுரைகள் எழுதுவதில் பன்னிரெண்டு வயது முதலே ஆர்வம் கொண்டவர். கல்லூரி காலங்களிலும் அரசுப் பணி காலத்திலும் எழுதிய கவிதைகளில் தொகுப்பே கவிதைச்சரமாக மலர்ந்துள்ளது. இவர் பல கவியரங்குகளின் கலந்துகொண்டு சிறந்த கவிஞர் எனப் பாராட்டப் பெற்றுள்ளார். இவரது துணைவியார் திருமதி என்.ராக்கம்மாள், ஆலங்குடி அரசு பெண்கள் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியராகப் பணியாற்றி அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலராகப் பதவி உயர்வு பெற்றவர்.கவிதைச் சரம் எனும் இந்நூல் மரபு, புதுக்கவிதை, சினிமா மெட்டு என பல வடிவக் கவிதைகளின் தொகுப்பு. இத்தொகுப்பில் ஒரு பாடல்.
மாரியம்மா துதி
( என்னடீ ராக்கம்மா- மெட்டு )
அடி என்னம்மா பொன்னம்மா
பூவம்மா -தாயே
எங்கமுத்து மாரியம்மா! - திருக்
கண்ணனூர்ப் பெண்ணே- என்
வெண்ணாவல் நாட்டின்
கன்னி முத்து மாரியம்மா!
ஐந்தாறு பெண்களுடன் நீ பிறந்து- உலகு ஆளவந்தாய் பொருத்தமடீ! - இந்த
ஆறாவதாய்ப் பிறந்த ஆறுமுகன்
அவனைப் பார்க்கவில்லை வருத்தமடீ!
சேந்தாங்குடி கீழையூரு குளவாய்ப்பட்டி - எல்லாம்
சேர்த்து வைக்கும் வெண்ணாவல்குடி சிங்கார வீதிகளும் தோரணங்களும் செல்வச் செழிப்பினில் பறக்குதடீ!
எப்போதும் நான் உன்னை நினைத்திருப்பேன்
என்னை தப்பாகாமல் காக்கணுமே!
என் அன்னை தினம் உன்னை நான் எண்ண
அடி- அம்மம்மா கண்ணாலே பார்க்கணுமே!
கடைக்கண்ணாலே பார்க்கணுமே!
முன்னாளில் வாழ்ந்தவர்கள் பல கோடி -தினம்
பண்போடு உனைப்பாடி-தனே
தன்னானே தானே என்று விளையாடி வாழ்ந்த- தாத்தனுக்குப் பேரனடி!
கண்ணான மாரி என்மேல்
கருணை வைத்து- நல்ல
கல்வி அருள் கொடுக்கணுமே! - அடி செல்லம்மா
கற்றபடி நடக்கணுமே!

கருத்துகள்
கருத்துரையிடுக