புதுக்கோட்டை எழுத்தாளர் – 159
மு.பெரியசாமி, கால்நடைத் துறையில் கண்காணிப்பாளராக பணியாற்றி பணிநிறைவு பெற்றவர். அங்காளம்மன் கோவில் தெரு, எம்.ஆர்வி காலனி, அறந்தாங்கி.எல்லாச் சுவரங்களிலும் என் இசை ( கவிதைகள்) இவரது சமீப கவிதைத் தொகுப்பு. இளமை ஒரு கனாக்காலம் மட்டுமல்ல, நிலாக்காலம் என்று சொல்லும்படியாக இயற்கையை நேசித்து வாசிப்பதற்கு வண்ணமுது தரும் கவிஞர். இந்நூலுக்கு அணிந்துரை அறந்தாங்கித் தமிழ்ச் சங்கம் முனைவர் சே.யோ.இளங்கோவன், வாழ்த்துரை சித்தாந்த புலவர் வீ. ரெங்கையா தந்துள்ளார்கள்.
தழைக்கும் வாழ்வொரு நாள், தேடிவரும் உனக்காக, வரும் நாள் பாடம், தோற்கடி தோல்வியை, கடலே இனிக்குமென்று, கடல் கொண்ட நீர் என கவித்துவமான தலைப்புகள் கொண்ட கவிதைகளின் தொகுப்பு.
இத்தொகுப்பில் ஒரு கவிதை
தழைக்கும் வாழ்வொரு நாள்
எரியும் விளக்கிருந்தால் இரவுக்கு ஒளியுமுண்டு
அறியும திறனிருந்தால் அறிவுக்கு வளர்வுமுண்டு
அறியாமை இருள் விலக்க தெரியாத மக்களுக்கு
திரியாய் எரிந்து நீ திசையெங்கும் வெளிச்சமிடு
எல்லோருக்கும் நல்லவனாய் இருப்பதிலே பயனில்லை
நல்லவர்கள் நல்லதென் நவிழ்வதிலே நலமுண்டு
பொல்லார்கள் புகழ்வதர்க்கு பொழுதெ நீ கழிக்காதே
வல்லோரின் பயத்தாலே நல்வழியே நீ மறக்காதே

கருத்துகள்
கருத்துரையிடுக