முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கவிஞர் தெ.சி.க. சுவாமி,

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 149

கவிஞர் தெ.சி.க. சுவாமி, கீழராஜா 4 ஆம் வீதி, செந்தூர் இல்லம் , புதுக்கோட்டை.கவிஞர், ஆய்வாளர், ஓவியர்.

சாதிகளே தேவையில்லை! ஏன்? எப்படி? ஓர் முழு ஆய்வு நூல்.  விஞ்ஞானத்தின் வேகம், மனித வரலாறு, தொழிலாளர்கள் தோற்றம், மன்னனும் மக்களும், சாதிகள் வலுப்பெற்ற விதம், ஐவகை நிலப்பிரிவு, போர் துவங்கிய வரலாறு, உரிமைப் போராட்டம், பெண்ணடிமை, அறமும் மறமும், தொழில் வழிச் சாதிகள், பெண்கள் சாதிப் பிரிவில் அடங்கமாட்டார்கள், சோம்பேறிகளால் வரும் ஏற்றத்தாழ்வுகள்,தெய்வபக்தி தோன்றிய வரலாறு, என பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்நூல் பேசுகிறது.

பல்லவர் காலத்தில் ஆரியர்களின் கலப்பு அதிகமாகியபடியால் கடவுள்களின் பெயர்களும் வழிபாடுகளும் சைவ சமயப் பிரிவுகளும் அதிகமாயின.  சோழர்கால சமூக வாழ்க்கை சாதி பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. விஜயநகர நாயக்கர் காலத்தில் வர்ணாசிரமம் தர்மத்தை போற்றி காப்பது அரசின் கடமை என்று மன்னர்கள் கருதினர். இந்து சமய அடிப்படையில் தோன்றிய சாதி வேறுபாடுகள் அனைத்திற்கும் அரசினர் பாதுகாப்பு அளித்தனர், என்று தமிழ்நாட்டுச் சமுதாய - பண்பாட்டு வரலாறு டாக்டர் ஏ. சுவாமிநாதனின் நூலை மேற்கோள் காட்டுகிறார்.

திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல், சாதி தோற்றம் குறித்து இவ்வாறு சொல்கிறார். "திராவிட கௌரிய இனத்தவர் அனைவரையும் உள்ளிட்ட இன்றைய இந்தியர்களுள் பெரும்பகுதியினரைக் குறிக்கும் பொதுப் பெயராக வழங்கப்படும் ,சூத்ர என்ற சொல், பண்டு சிந்து நதிக்கரையில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்களை மட்டுமே குறிக்க வழங்கியதாகத் தெரிகிறது.

சூத்ர என்னும் சொல் பிறந்த வரலாறு யாதேயாயினும், காலம் செல்லச் செல்ல தஸ்யு,மிலேச்சர் என்ற சொற்கள், ஆரியருக்கு அடங்காத வாழ்ந்த பழங்குடியினரைக் குறிப்பனவாக, சூத்ர என்ற சொல் ஆரியரால் அடிமை நிலைக்குத் துரத்தப்பட்ட இனத்தவர் அனைவரையும் குறிக்கலாயிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை.

திராவிட இனத்தைக் குறிக்க சத்திரிய, வைசிய என்ற பெயரில் எவ்வளவு பொருத்தமற்றனவோ அவ்வளவு பொருத்தமற்றது. சூத்திரர் என்ற பெயரும் திராவிட இனத்தவரை - அறவே பொருத்தமற்ற முறையாகிய மநுமுறைப்படி பிரித்து வழங்காது, ஆங்கர்ங்குள்ள வழக்காற்றையொட்டி வேளாளர், நாயக்கர் என்பன போலும், அவரவர் குலப் பெயரால் அழைப்பதே பொருந்தும்.




மேலும் இந்நூல் சாதிய மனநிலையில்தான் விடுபட பல வழிகளைக் கூறுகிறது.  அதிலொன்று சாதியைக் குறிப்பிடாத அரசு விண்ணப்பங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...