புதுக்கோட்டை எழுத்தாளர் - 149
கவிஞர் தெ.சி.க. சுவாமி, கீழராஜா 4 ஆம் வீதி, செந்தூர் இல்லம் , புதுக்கோட்டை.கவிஞர், ஆய்வாளர், ஓவியர்.சாதிகளே தேவையில்லை! ஏன்? எப்படி? ஓர் முழு ஆய்வு நூல். விஞ்ஞானத்தின் வேகம், மனித வரலாறு, தொழிலாளர்கள் தோற்றம், மன்னனும் மக்களும், சாதிகள் வலுப்பெற்ற விதம், ஐவகை நிலப்பிரிவு, போர் துவங்கிய வரலாறு, உரிமைப் போராட்டம், பெண்ணடிமை, அறமும் மறமும், தொழில் வழிச் சாதிகள், பெண்கள் சாதிப் பிரிவில் அடங்கமாட்டார்கள், சோம்பேறிகளால் வரும் ஏற்றத்தாழ்வுகள்,தெய்வபக்தி தோன்றிய வரலாறு, என பல்வேறு தலைப்புகளின் கீழ் இந்நூல் பேசுகிறது.
பல்லவர் காலத்தில் ஆரியர்களின் கலப்பு அதிகமாகியபடியால் கடவுள்களின் பெயர்களும் வழிபாடுகளும் சைவ சமயப் பிரிவுகளும் அதிகமாயின. சோழர்கால சமூக வாழ்க்கை சாதி பாகுபாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டிருந்தது. விஜயநகர நாயக்கர் காலத்தில் வர்ணாசிரமம் தர்மத்தை போற்றி காப்பது அரசின் கடமை என்று மன்னர்கள் கருதினர். இந்து சமய அடிப்படையில் தோன்றிய சாதி வேறுபாடுகள் அனைத்திற்கும் அரசினர் பாதுகாப்பு அளித்தனர், என்று தமிழ்நாட்டுச் சமுதாய - பண்பாட்டு வரலாறு டாக்டர் ஏ. சுவாமிநாதனின் நூலை மேற்கோள் காட்டுகிறார்.
திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம், டாக்டர் கால்டுவெல், சாதி தோற்றம் குறித்து இவ்வாறு சொல்கிறார். "திராவிட கௌரிய இனத்தவர் அனைவரையும் உள்ளிட்ட இன்றைய இந்தியர்களுள் பெரும்பகுதியினரைக் குறிக்கும் பொதுப் பெயராக வழங்கப்படும் ,சூத்ர என்ற சொல், பண்டு சிந்து நதிக்கரையில் வாழ்ந்திருந்த பழங்குடி மக்களை மட்டுமே குறிக்க வழங்கியதாகத் தெரிகிறது.
சூத்ர என்னும் சொல் பிறந்த வரலாறு யாதேயாயினும், காலம் செல்லச் செல்ல தஸ்யு,மிலேச்சர் என்ற சொற்கள், ஆரியருக்கு அடங்காத வாழ்ந்த பழங்குடியினரைக் குறிப்பனவாக, சூத்ர என்ற சொல் ஆரியரால் அடிமை நிலைக்குத் துரத்தப்பட்ட இனத்தவர் அனைவரையும் குறிக்கலாயிற்று என்பதில் சிறிதும் ஐயமில்லை.
திராவிட இனத்தைக் குறிக்க சத்திரிய, வைசிய என்ற பெயரில் எவ்வளவு பொருத்தமற்றனவோ அவ்வளவு பொருத்தமற்றது. சூத்திரர் என்ற பெயரும் திராவிட இனத்தவரை - அறவே பொருத்தமற்ற முறையாகிய மநுமுறைப்படி பிரித்து வழங்காது, ஆங்கர்ங்குள்ள வழக்காற்றையொட்டி வேளாளர், நாயக்கர் என்பன போலும், அவரவர் குலப் பெயரால் அழைப்பதே பொருந்தும்.

கருத்துகள்
கருத்துரையிடுக