புதுக்கோட்டை எழுத்தாளர் - 172
முனைவர் மு. பழனியப்பன், அரிமா நகர், பொன்னமராவதி . புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் தமிழ்த்துறை உதவி பேராசிரியராகப் பணியாற்றியவர். பெரியபுராணத்தில் பெண்கள் - ஓர் ஆய்வு, பெண்ணிய வாசிப்பு, விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் , சி.கே. சுப்பிரமணிய முதலியாரின் பெரியபுராண உரைத்திறன் ஆகிய ஆய்வு நூல்கள் எழுதியுள்ளார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மாநில தலைவர்களில் ஒருவர்.விடுதலைக்கு முந்தைய பெண்களின் நாவல்கள் எனும் இந்நூல் இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய பெண்களின் நாவல் படைப்புகள் குறித்து ஆய்வு செய்கிறது. இவ்வாய்விற்கான எல்லை 1897 ஆம் ஆண்டு முதல் விடுதலை நாள் வரை ஐம்பது ஆண்டுகளுக்குள் பெண்களின் நாவல்களை ஆய்வின் மூலமாகக் கொண்டுள்ளது.
இக்கால எல்லைக்குள் விசாலாட்சி அம்மாள் (1901-1910), மலைமகள், மீனாட்சிசுந்தரம்மாள், வி.பாலாம்பாள் (1911-1920), சரஸ்வதி அம்மாள், கோதைநாயகி அம்மாள், (1931-1940), செய்யூர் சாரநாயகி அம்மாள், மூவலூர் ராமாமிர்தத்தம்மாள், டி.பி.இராஜலெட்சுமி அம்மாள், வேங்கடலட்சுமி, குமுதினாஆகியோர் நாவலாசிரியராக அடங்குகிறார்கள். இவர்களின் பிற படைப்புகளையும் படைப்புகளின் சாராம்சங்களையும், நாவல்களில் படைக்கப்பட்ட கதாமாந்தர்களைப் பற்றியும் பதிவுசெய்துள்ளது.
நாவலாசிரியைகளின் படைப்பு முயற்சிகளும் எழுந்த விமர்சனங்களும், நாவலாசிரியைகள் படைத்த கதைத்தலைமை மாந்தர்கள், நாவலாசிரியைகள் கையாண்ட உத்திகள்,... என பல தலைப்புகளின்கீழ் இந்நூல் ஆய்வு செய்கிறது.
தி பார்க்கர் பதிப்பகம், சென்னை


கருத்துகள்
கருத்துரையிடுக