புதுக்கோட்டை எழுத்தாளர் - 171
ப.சந்திரமோகன், கொத்தக்கோட்டை, சென்னை தலைமை செயலகத்தில் துணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடன் பணியாற்றி ஓய்வு பெற்ற சிவகாமி என்பவர் ஓய்வு காலத்தில் சிறுகதைத் தொகுப்பு வெளியிட அவரது விழாவிற்குச் சென்ற ப.சந்திரமோகன் பணிக்காலத்தில் எழுதிய கவிதைகளைத் தொகுத்து வெளியிடலாம், என்கிற முடிவுக்கு வந்தார். இவரது ஆசை நிறைவேற இவரது நண்பர் ந.முருகன் உற்ற துணையாக இருந்திருக்கிறார்.
மகிழும் பூக்கள், இவரது முதல் கவிதைத் தொகுப்பு. இந்நூலுக்கு அணிந்துரை ந.முருகன், மதிப்புரை ப.முத்துப்பாண்டியன், பாண்டியன் புத்த - அகம்.
கடவுள், நீர், உழைப்பு, கடவுளின் சிரிப்பு, ஊர், கல்வி, வேலைவாய்ப்பு என்று பல தலைப்புகளில் கவிதைகள் வார்த்திருக்கிறார்.
இத்தொகுப்பில் ஒரு கவிதை,
தலைப்பு- பொன்வண்டு
காடு இருந்தது அப்போது
நகரத்தையொட்டி
காடு இருந்தது அப்போது
கூழாங்கற்கள் கொட்டிக்கிடக்கும் தேவிகுளம் தாண்டி
கொழிஞ்சி செடி காய்த்திருக்க
பழுத்த கனிகள் இனித்திருக்க
களித்து குதித்த நாட்கள் அவை
பாடிப் பறக்கும் பொன்வண்டு
வந்து அமரும் மலர்மீது
பதுங்கிப் பிடிப்போம் கைக்கொண்டு
பின்கழுத்தில் பசும் இலைவைக்க
பாங்காய் வெட்டும் அதன் தலை காண்போம்
டப்பாவில் வீட்டுக்கு விருந்தாளி
மஞ்சள் முட்டையிடும் சிலநாள் வாசம்
பறக்க விடுவோம் வெளிவானம்
மனசும் பறக்கும் வானில்.

கருத்துகள்
கருத்துரையிடுக