முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆ.சேவியர்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 182

ஆ.சேவியர், உடற்கல்வித் துறை ஆசிரியர். மேரிஸ் பப்ளிகேஷன்ஸ், 12,எஸ்.எஸ் நகர், புதுக்கோட்டை.

உடல் திறன் வளர்ப்போம், எனும் இந்நூல் பயில்வோர் பயிற்றுவோர், பயனுக்காக எனும் நோக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.  இந்நூலில் பல யோகாசனங்களும் சிறுவர்கள் விளையாடி மகிழ சிறு விளையாட்டுகளும் குழுவாக விளையாடப்படும் முதன்மை விளையாட்டுகளும் உடலை உறுதி அடையச் செய்யும் பலவகை உடற்பயிற்சிகளும் தடகள போட்டிகளுக்குத் தகுதி பெறச்செய்யும் தடகளப் பயிற்சிகளும் விதிமுறைகளும் விளக்கப்படங்களுடன் தரப்பட்டுள்ளது. அணிநடைப் பயிற்சி, சுகாதாரக் கல்வி, நிலக்கல்வி, பாதுகாப்புக்கல்வி, முதலுதவி, பொதுஅறிவு, என கற்க வேண்டியவை அனைத்தும் மிக விளக்கமாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்நூலில், உடற்கல்வியின் நோக்கம் பயன்கள், பழைய புதிய ஒலிம்பிக் போட்டிகள், யோகாசனங்கள், தாளப்பயிற்சிகள், எளிய உபகரணப் பயிற்சிகள், உடல் தகுதியை உயர்த்தும் உடற்பயிற்சிகள், தடகள விளையாட்டுகள் - ஓடுகளம், தாண்டுதல், எறிதல், கால்பந்தாட்டம், கூடைப்பந்தாட்டம், கிரிக்கெட், கையுந்து பந்தாட்டம், கோ-கோ,வளைகோல் பந்தாட்டம்,மேஜைப் பந்தாட்டம், கபடி,கைப்பந்து, டென்னிஸ், ஸ்குவாஷ், எறிபந்து,  பூப்பந்து, சிறகுப்பந்தாட்டம், வளையப்பந்தாட்டம்,  புத்துணர்வு விளையாட்டுகள், தொடர் விளையாட்டுகள், விழாக்களில் சமூக விருந்துகளில் சிறு விளையாட்டுகள்,  செயற்களப் பயிற்சிகள், கர்ணபயிற்சிகள், குத்துச்சண்டை, நீச்சல் -இந்தியப் பயிற்சி - தண்டால், இந்தியப் பயிற்சி - பஸ்கி, வாள் பயிற்சி, அணி நடைப் பயிற்சி, சுகாதாரக் கல்வி, நலக்கல்வி மற்றும் பாதுகாப்புக் கல்வி ஊட்டச்சத்துக்கள், நோய்கள், முதலுதவி, தீ, எலும்பு முறிவு, பொது அறிவு, கூட்டுடற் பயிற்சிகள், பளுப்பயிற்சி, உயிரினங்கள் ஆசனங்கள், முத்திரைகள், பிரமிட் (மனித கோபுரம்), ஒலிம்பிக் சாதனைகள், காமன் வெல்த்-2010 வெற்றியாளர்கள் என பல்வேறு உடற்கல்வி சார்ந்த செய்திகளைத் தரும் நூல் இது.



கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...