புதுக்கோட்டை எழுத்தாளர் -178
பொறியாளர் தே. ஹெலினா, இயற்பெயர் - தே.ஹெலினா கிரிஸ்டோபர், புதுக்கோட்டையில் தேவசகாயம் -ஜீவமணி இணையருக்கு 16.12.1968 இல் மகளாகப் பிறந்தவர். பள்ளிப் படிப்பை சேலம், ஆத்தூர், புதுக்கோட்டை எனப் பல இடங்களில் முடித்தவர்.தஞ்சை சாஸ்திரா பல்கலைக் கழகத்தில் பொறியியல் படிப்பை முடித்தவுடன், திருச்சி மண்டலப் பொறியியல் கல்லூரியில் பொறியியல் முதுகலைப் படிப்பையும் முடித்துள்ளார். இலக்கியத்தில் மதிப்புறு முனைவர் பட்டம்( Doctorate in Literature) பெற்றுள்ளார்.
மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக நுழைந்து 30 ஆண்டுகாலப் பணியில் செயற்பொறியாளராக உயர்ந்துள்ளார். திருக்குறள்மீது கொண்ட காதலால்
1. வள்ளுவம் கூறும் வாழ்வியல், 2.வள்ளுவத்தில் மனித மாண்புகள்,
3. வளம் பெற வள்ளுவ நாட்காட்டி,
4. உறவுகளின் உயிர்ப்பு,
5.குறளும், விவிலியமும்,
மின்வாரியத்தில் உதவிப் பொறியாளராக நுழைந்து 30 ஆண்டுகாலப் பணியில் செயற்பொறியாளராக உயர்ந்துள்ளார். திருக்குறள்மீது கொண்ட காதலால்
1. வள்ளுவம் கூறும் வாழ்வியல், 2.வள்ளுவத்தில் மனித மாண்புகள்,
3. வளம் பெற வள்ளுவ நாட்காட்டி,
4. உறவுகளின் உயிர்ப்பு,
5.குறளும், விவிலியமும்,
6. திருக்குறள் புதிய உரை ஆகிய ஆறு நூல்கள் எழுதியுள்ளார்.
குறள் இனிது யாழ் இனிது என்று ஐந்து பாடல்கள் எழுதியுள்ளார். குறள் கொண்டாட்டம் என்று 2016, 2018ஆம் ஆண்டுகளில் ஈரோட்டில் கல்லூரிகளில் விழா நடத்தி உள்ளார். சென்னை நாரதகான சபாவிலும் நடத்தியுள்ளார். ஊடகங்கள் வாயிலாகத் திருக்குறள் சார்ந்த பதிப்புக்களைப் பதிப்பித்துள்ளார்.
இவருடைய திருக்குறள் பாடல் இன்டர்நேஷனல் திருக்குறள் பவுண்டேஷன், மொரிஷியஸ் - இன் கருப்பாடலாக (Theme song) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரது நூல்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது தமிழ்ப் பணிக்காக 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். எங்கும் வள்ளுவம் என்ற நோக்கில் இவரது குறிக்கோளும் கொள்கையும் பயணித்து வருகிறது.
வள்ளுவம் கூறும் வாழ்வியல்' என்னும் நூலுக்குக் கருர் திருக்குறள் பேரவை இரண்டாம் பரிசும், பாரதி, பாரதிதாசன் கவிதைகள் அமைப்பு - 'திருக்குறள் சுடர்' விருதும், 'வள்ளுவமும் விவிலியமும் நூலுக்கு அக்கினிச் சிறகு தமிழ்ப் பேரவை, திருப்பூர் 'அக்கினிச் சிறகு சேவா விருதும்' வழங்கி கௌரவித்துள்ளன. புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம் 'திருக்குறள் வழி காட்டி' விருதும் ஈரோடு தமிழ்ச்சங்கம் 'திருவள்ளுவர் விருதும்', கல்லைத் தமிழ் சங்கம், கள்ளக்குறிச்சி 'குறள்மணம்' விருதும் வழங்கிக் கௌரவித்தன. 'உறவுகளின் உயிர்ப்பு' நூலுக்கு குறளகம், நாகர்கோவில் சிறந்த நூல் பரிசு வழங்கிக் கௌரவித்துள்ளது.
இவருடைய திருக்குறள் பாடல் இன்டர்நேஷனல் திருக்குறள் பவுண்டேஷன், மொரிஷியஸ் - இன் கருப்பாடலாக (Theme song) ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இவரது நூல்கள் பரிசுகளைப் பெற்றுள்ளன. இவரது தமிழ்ப் பணிக்காக 10-க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். எங்கும் வள்ளுவம் என்ற நோக்கில் இவரது குறிக்கோளும் கொள்கையும் பயணித்து வருகிறது.
வள்ளுவம் கூறும் வாழ்வியல்' என்னும் நூலுக்குக் கருர் திருக்குறள் பேரவை இரண்டாம் பரிசும், பாரதி, பாரதிதாசன் கவிதைகள் அமைப்பு - 'திருக்குறள் சுடர்' விருதும், 'வள்ளுவமும் விவிலியமும் நூலுக்கு அக்கினிச் சிறகு தமிழ்ப் பேரவை, திருப்பூர் 'அக்கினிச் சிறகு சேவா விருதும்' வழங்கி கௌரவித்துள்ளன. புவனேஷ்வர் தமிழ்ச் சங்கம் 'திருக்குறள் வழி காட்டி' விருதும் ஈரோடு தமிழ்ச்சங்கம் 'திருவள்ளுவர் விருதும்', கல்லைத் தமிழ் சங்கம், கள்ளக்குறிச்சி 'குறள்மணம்' விருதும் வழங்கிக் கௌரவித்தன. 'உறவுகளின் உயிர்ப்பு' நூலுக்கு குறளகம், நாகர்கோவில் சிறந்த நூல் பரிசு வழங்கிக் கௌரவித்துள்ளது.

கருத்துகள்
கருத்துரையிடுக