புதுக்கோட்டை எழுத்தாளர் -184
அன்பரசு மணி , உதவிப் பேராசிரியர் வணிகவியல், வணிகத்துறையில் ஆய்வியல் நிறைஞர் முடித்தவர். தனித்தமிழ் எழுத்தாளர்.நகரும் நட்சத்திரங்கள் , எனும் இந்நூல் இவரது முதல் ஹைக்கூ தொகுப்பு. ஏலே பதிப்பகம் , திருநெல்வேலியிலிருந்து இந்நூல் வெளிவந்துள்ளது. ஆண்டு 2021.
இந்நூலில் நூலாசிரியர் இவ்வாறு என்னுரை எழுதியுள்ளார்.
என் வானில் என் கற்பனை அலாதியாக மின்னுகிறது நட்சத்திரங்களாக. அந்த நட்சத்திரம் அங்கும் இங்கும் எங்கும் திசை அறியா காற்றாக நகர்ந்து நகர்வலம் சென்றது.
"நகரும் நட்சத்திரங்களைப் பின்தொடர்ந்து நானும் ஊர் சுற்றுவதும் உணவுகள் ருசிப்பதும் முகமறியா மனிதர்களின் அகம் கண்டு அன்புக் கொண்டு பழகுதல் என்று வாழ்க்கை நகரும் நட்சத்திரங்களோடு நகர்ந்து போகிறேன்.
நகர்ந்து சென்ற நட்சத்திரங்கள் அன்றொரு இரவில் தேவதையுடன் வந்து என்னைய் சந்தித்தது. உன் எழுத்துக்கள் வாசிக்கும் தருணத்தில் உணரும் பொழுதுகளில் ரசிக்கும்படியுள்ளது. உனது ஆழ்மனதின் கற்பனை அலாதியாக மின்னுகிறது. அந்த மின்னும் கற்பனைகளை சொற்களாக மாற்றி குறுங் கவிதையாக ஒர் ஐக்கூவை எழுதி நகரும் நட்சத்திரமாய் மிளிரசெய் இந்த உலகை.
தமிழனாய் பிறந்தது நினைத்து பெருமைகொள்கிறேன். பிறமொழி கலப்பில்லாமல் எனக்கு தெரிந்த தனித்தமிழில் உறவுகளுடன் நேரில் பேசும் போதும், எழுதும் போது இணையத்தின் வழியாக தட்டச்சு உரையாடும் பொழுதிலும் தனித்தமிழிலே பெரும்பாலும் உரையாடுகிறேன். தமிழுக்கு நான் செய்யும் மிகப்பெரிய காணிக்கையாகும்"
இத்தொகுப்பில் பெரும்பாலான ஹைக்கூக்கள் நட்சத்திரம் , மழை, மேகம், மரம், காற்று என இயற்கையைப் பாடுகிறது.
இத்தொகுப்பில் இரு ஹைக்கூ
1
திருமணம் ஆகாமல்
விதவையானான்
ஒரு தலை காதலன்
2
விலங்குகள்
பசி தீர்ந்த பிறகு
வேட்டையாடுவதில்லை
கம்யூனிசம்

கருத்துகள்
கருத்துரையிடுக