முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

உப்பை தமிழ்க்கிறுக்கன்,

 புதுக்கோட்டை எழுத்தாளர் -188

கவிஞர் உப்பை தமிழ்க்கிறுக்கன், இயற்பெயர் ஆ.ராஜதுரை.  உப்பிலிக்குடி, குளத்தூர் வட்டம், புதுக்கோட்டை.

தமிழின் மேல் கொண்ட பற்றுதல் காரணமாக இலக்கிய பிரவேசத்திற்கு தமிழ்க்கிறுக்கன் என்ற புனைப்பெயரோடு தனது ஊர் பெயரான உப்பிலிக்குடி என்பதை உப்பை என்று சுருக்கி உப்பை தமிழ்க்கிறுக்கன் என்று பெயர் சூட்டிக்கொண்டவர்.

மரபுக் கவிஞர். சிங்கப்பூர், மலேசியா பத்திரிகைகளில் கவிதைகள் எழுதியவர். இவரது கவிதைகளில் சந்தம் சரளமாய் நின்று நடனம் புரியும்.

2005 ஆம் ஆண்டு வெளியிட்ட  செந்தில்வேல் சதகம் இவரது முதல் நூல். இதைத் தொடர்ந்து சித்திரச் சிலேடை வெண்பா, வியர்வைப் பூக்கள் என்று மரபு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார். இவ்விரு நூல்களும் 2014 ஆம் ஆண்டு வெளிவந்தவை. மீரா பதிப்பகம் வழியே வெளிவந்தது.

சித்திரச் சிலேடை வெண்பா, மரபு வடிவில் எழுதப்பட்ட சிலேடை பாடல்களைக் கொண்ட நூல். சிலேடை கவிதைகள் மீது இவருக்கு வந்த ஈர்ப்பை இவ்வாறு என்னுரையில் எழுதுகிறார் கவிஞர்.

தற்சாற்று

சிறு வயதில் எனது தந்தையார் புலவர்கள் கதைகளை சொல்வார்கள். அப்போது கம்பர் ஒட்டக்கூத்தர், ஒளவையார், இரட்டைப்புலவர்கள், காளமேகப்புலவர் இவர்களைப் பற்றியும் இவர்கள் பாடிய பாடல்களையும் சொல்லிக் காட்டுவார்கள். அவற்றில் இந்த காளமேகப் புலவரின் சிலேடையை மிகவும் சிலாகித்துக் கூறுவார்கள். அப்போது நான் அது எப்படி வாழைப்பழமும் பாம்பும் ஒன்றாகும் என்பேன். அதற்கு எனது தந்தையார் நீண்ட நேரம் விளக்கம் தருவார். இதே கதைகளை பலநாட்கள் மீண்டும் மீண்டும் சொல்வார். அப்போதே ஏன் நாமும் இவர்களைப் போல் பாடல் எழுதக் கூடாது என்று நினைப்பேன்.

இது எனது ஐந்து,ஆறு வயது அனுபவம். பின்னர் படிக்க முடியவில்லை, வறுமை. ஆனால் மற்ற நூல்களை நிறையப் படிப்பதுண்டு. சிலேடை எழுதிப் பார்ப்பதுண்டு. இதில் வெறும் இலக்கியச் சுவைக்காக சிலேடை எழுத வேண்டுமா? சமூக நலக்கருத்துக்களை ஏன் பாடக் கூடாது என சிந்தித்தேன். அதாவது ஒரு செய்தியைப் பாடலாக எழுதுகிறோம். அது வலுப்பெற உவமானம் கூட்டுகிறோம். அதையே சிலேடையாக மாற்றினால் என்ன? என்று சிந்தித்ததன் விளைவே இந்த நூல். எழுத முயன்றபோது யாப்பிலக்கணப் பிழையில் மாட்டிக் கொண்டேன். பின்னர் சிங்கப்பூர் பாத்தேறல் இளமாறன் அவர்களிடம் யாப்பியலைக் கற்று, பின்னர் முறையாக வெண்பா எழுதினேன்.

சரி, சமூகம் சார்ந்த சிலேடைகள் மற்றும் நகைச்சுவை கலந்தும் எழுதியாகிவிட்டது. ஏதாவது புதிதாக செய்ய முடியுமா என்று சிந்தித்தேன். ஒரு சொல் இரண்டாக பொருள் கோளுவது, அதை இரண்டு படமாகக் காட்டுவது, பின் இரண்டுக்கும் வசனத்தில் இரு குறுங்கவிதைத் தருவது, பின் இரண்டையும் இணைத்து வெண்பா பாடுவது... இப்படி எழுதி என் குருநாதர் பாத்தேறலிடம் காட்டியபோது, அட, ஏனப்பா மரபுக் கவிதை எழுதவே ஆளைக் காணோம். நீ வேறு! ஏதோ குழப்புகிறாய் என்றார். பின் எழுது, இலக்கணப் பிழை இல்லாமல் பார்த்துக் கொள் என்றார். பாத்தென்றல் முருகடியான் அவர்களோ ஏற்கனவே சித்திரக்கவி என்றொரு முறை இருக்கிறது. இதுவும் ஒரு வகையாக சான்றோர் கொள்ளக் கூடும். ஒரு நூலாக செய் எனக் கூறினார். ஓவியர் கிடைக்கவில்லை. மூன்று நான்கு பேரிடம் சென்று ஓவியம் முழுமை பெறவில்லை. பின்னர் புதுக்கோட்டை அன்பிற்குரிய அண்ணன் கவிஞர் மீரா சுந்தர் அவர்கள், அன்பிற்குரிய சகோதரர் கவிஞர் சுகுமாரன்.சி அவர்களை அறிமுகப்படுத்தினார். அவர் ஓவியம் வரைந்து கொடுக்க இந்த நூல் வடிவத்தைப் பெற்றது.

சிலேடையில் இரு வகையுண்டு. செம்மொழிச் சிலேடை, ஒரு சொல் பிரிந்தோ சேர்ந்தோ ஒன்றுக்கு மேற்பட்டு பொருள் தருமாறு எழுதினால் செம்மொழிச் சிலேடை எனவும், இருவேறு பொருள்களை இணைத்துப் பாடினால் பிரிமொழிச் சிலேடை எனவும், செம்மொழிச் சிலேடை ஒரே வகையெனவும், பிரிமொழிச் சிலேடை பலவகைப்படும் (ஒன்பது வகையென நினைக்கிறேன்) என்றும் முன்னோர் வகுத்துள்ளனர். இந்த நூலில் சித்திரம் வரைந்த சிலேடைகள் ஒரு வகையாகவும், சித்திரம் இல்லாதது ஒரு வகையாகவும் புரிதல் பொருட்டு சித்திரம் இல்லாத சிலேடைக்கு சிறு விளக்கமும் தந்துள்ளேன்" என்கிறார்.

இவரது சித்திரச் சிலேடை வெண்பா முதலில் சாரல் கீதம் இதழில் வெளிவந்திருக்கிறது.

இந்நூலுக்கு அணிந்துரை முனைவர் மு. பழனியப்பன். மதிப்புரை கவிஞர் மீரா. சுந்தர், ஆனந்த ஜோதி மற்றும் சாரல் கீதம் மாத இதழ் ஆசிரியர்.

இந்நூலின் அட்டைப்படச் சித்திரச் சிலேடைக் கவிதை இவ்வாறு பாடுகிறது.

மலரின் மணந்தெரியா மந்திக் குரங்கே
மலரை மணங்கொள் மதிப்பாய்- மலரால்தான்
மண்ணிலே மென்மை மணம்வீசச் செய்கிறது
கண்ணிலே நீரைக் கற.

இப்பாடல் மலர் என்பதைப் பூவாகவும் பெண்ணாகவும் பாடுகிறது.

பாடல் -02

ஒருகிழமை ஓர்காய் ஒருபூவும் உள்ள
திரிச்சொல் எதுசொல்லத் தேடு!- குருவிற்கும்
ஆத்தாடி! உண்விடுதி அக்குழம்பில் பூசனிக்காய்
பாத்தேறல் மாணாக்கன் பா !

இப்பாடலின் விடை, பூ - சனி- காய்.

இப்பாடலுக்கு ஒர் சிறப்புண்டு.  பாத்தேறல் என்பவர் கவிஞர் உப்பை தமிழ்க்கிறுக்கனின் ஆசிரியர்.

பாடல் -03

தட்டாரே தட்டும்! தரம்போகும் தட்டிவிடு
விட்டால் விழலுற்று வீணாவாய்- எட்டாரே
இட்டாரும் கெட்டாரே ஏற்றாரும் கெட்டாரே
பட்டாராய் ஆகாமல் பார்.

இங்கு, தட்டார்- தட்டு ஏந்தியவர்.
தட்டார்- சொன்ன சொல்லைத் தட்டாமல் குற்றேவல் புரிபவர். 



தமிழுக்காக தன் பெயரைக் கிறுக்கன் என மாற்றிக்கொண்ட இவர், புதுக்கோட்டை கவிஞர்களில் பல வடிவக் கவிதைகள் இயற்றிய மரபுக்கவிஞர். இவர் இயற்றிய சித்திரச் சிலேடை வெண்பா எனும் இத்தொகுப்பு புதுக்கோட்டைக்குப்  புதிது. இவர் கொண்டாடப்படவேண்டியவராக நான் கருதுவதற்குக் காரணம் அவரது கவிகள் அப்படியானது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

நா. கனகராஜய்யர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் -179 நா. கனகராஜய்யர் , கவிராஜ பண்டிதர் என அழைக்கப்பட்டவர். புதுக்கோட்டை  அரசர் கல்லூரித் தமிழாசிரியர். இவர் எழுதிய நூல்களில், கம்பர் பிள்ளைத் தமிழ், திருவள்ளுவர் பிள்ளைத் தமிழ், நம்மாழ்வார் பிள்ளைத் தமிழ், சங்கரர் பிள்ளைத்தமிழ், முத்துமாரி பிள்ளைத்தமிழ், சதாசிவப்பிரம்மேந்திர விஜயம் சோழ மன்னர், பாண்டிய மன்னர், புதுக்கோட்டை நகரத்திலுள்ள ஸ்ரீ ஸதாசிவ ப்ரம்மேந்திர ஸரஸ்வத் யவதூத ஸ்வாமிகள் அதிஷ்டானம் புவனேசுவரி அந்தாதி: மூலமும், உரையும் ஆகிய நூல்கள் முக்கியமானவை. ஸ்ரீ புதுக்கோட்டை சமஸ்தானம் திருக்கோகர்ணம் பெரியநாயகி பிள்ளைத் தமிழ் எனும் இந்நூல்   1942 ஆம் ஆண்டு புதுக்கோட்டை சமஸ்தானமாக இருந்த காலத்தில் புதுக்கோட்டையின் காவல் பெண் தெய்வமான திருக்கோகர்ணம் பெரியநாயகியைக் குழந்தையாகப் பாவித்து எழுதிய நூல். இந்நூல் பலவான்குடி சிவநேசச்செல்வர் உயர்திருவாளர் ராம. கும. சு. குமரப்ப செட்டியார் அவர்களின் பொருளுதவியால்  வெளிவந்தது. பரம்பரை செல்வந்தரான  இவரது குடும்பம் பற்றி முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். இந்நூலை புதுக்கோட்டை ஸ்ரீ. ஆர். ...