புதுக்கோட்டை எழுத்தாளர் - 189
ஆலங்குடி கவி நலமுடையார், இவரது இயற்பெயர் ம.ஆ.ஆரோக்கியசாமி, ஆலங்குடிக்கும் அருகில் கோட்டைக்காடு பங்கைச் சார்ந்த கன்னியான்கொல்லை. ஓமியோபதி மருத்துவர். பேச்சாளர். கதை, கட்டுரை , கவிதை , நாடகம் என பல் துறைகளில் சிறந்து விளங்கியவர்.அமுதசுரபி, கலைமகள், நம்வாழ்வு, வேளாங்கண்ணி குரலொலி ஆகிய இதழ்களில் எழுதியுள்ளார். இவர் எழுதிய ஆரோக்கியம் தாத்தாவின் ஊர் வம்பு எனும் தொடர் கட்டுரை நல்ல வரவேற்பைப் பெற்றது.
இவர் ஆலங்குடி அரசு பொது நூலக வாசகர் வட்டத் தலைவராக இருந்து சிறப்பாக பணியாற்றி நூலகத்திற்குச் சொந்தக் கட்டிடம் அமைய ஆவணம் செய்தார்.
காலமேகம் எனும் இந்நூல் இவரது முதலாவது கவிதைத் தொகுப்பு எழுபத்திரெண்டாவது வயதில் வெளியானது. 163 தலைப்புகளின் கீழ் கவிதைகள் எழுதப்பட்டுள்ளது. பல கவிதைகள் குழந்தைகளுக்கான பாடலாக உள்ளன. எது பக்தி, சிட்டுக்குருவி தலைப்பிட்ட கவிதைகளை இந்நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள குன்றக்குடி அடிகளார் பாராட்டி எழுதியுள்ளார்.
இத்தொகுப்பில் காணவில்லை உண்மையை என்றொரு கவிதை
என் அப்பா என்னிடத்தில் சேதி சொன்னார்
எங்கிருந்தும் இதைவாங்கி வாடா என்றார்!
திக்கெட்டும் நான்தேடி அலைந்துவந்தேன்
தெரிந்தவரை அதுமட்டும் கிடைக்கவில்லை !
வான்வீட்டில் அது வுண்டோ என்று பார்க்க வக்கனையாய் வானூர்தி ஓட்டிச் சென்றேன் !
கொக்கரையாய் தொங்கியதே மிச்சமன்றி கொண்டுவர அங்கெதுவும் கிட்டவில்லை!
ஆழ்கடலில் மூழ்கியங்கே நோட்டமிட்டேன் அதிசயத்தான் அங்கேயும் அது கிட்டவில்லை!
பாசிகளை மச்சங்களை பார்த்ததின்றி பாவி எனக்கேனோ அது கிட்டவில்லை!
மனம் சோர்ந்து மறுபடியும் தந்தை நோக்கி மவுனமென யோயங்கே நின்றிருந்தேன் என்னாச்சு என்று அவர் என்னைக் கேட்க எங்குமிலை உண்மை என ஒத்துக் கொண்டேன் !


கருத்துகள்
கருத்துரையிடுக