புதுக்கோட்டை எழுத்தாளர் - 191
ஜெனா, இயற்பெயர் ஆர். ஜெனார்த்தனன். பிறப்பு கும்பகோணம். வசிப்பு - இராஜகோபாலபுரம் புதுக்கோட்டை.பொருளியல் மற்றும் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்று புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
கவிதை, சிறுகதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு ஆகிய துறைகளில் தடம் பதித்தார். இவரது வாழ்வின் தாகம், வாழ்வைத் தேடி ஆகிய கவிதை நூல்கள் பெரும் வரவேற்பையும் பலரின் பாராட்டையும் பெற்றன.
காலத்தின் கர்ப்பத்தின் தினம் தினம் நிகழும் அற்புதங்களை ஆழ்ந்த மனிதாபிமானத்தோடு வியக்கத்தக்க வகையில் அழகிய கதைகளாக வடித்தவர். சிறுகதைகள் துளிர் எனும் இத்தொகுப்பு டிசம்பர் 1991 இல் வெளியானது.இந்நூலுக்கு அணிந்துரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இந்தித்துறைத் தலைவர் டாக்டர் என்.ஸ்ரீதரன்.
இந்நூலுக்கான முன்னுரையில் ஒரு படைப்பாளிக்கு நான்கு முக்கிய குணாதிசயங்கள் இருக்க வேண்டுமென கூறுகிறார். 1. ஒரு படைப்பாளி மென்மையான உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். 2. அந்த நுண் உணர்வுகளை அவன் போற்றி வளர்ப்பவனாக இருக்க வேண்டும் 3. அவன் வளர்த்துக்கொண்ட அந்த மென்மையான உணர்வுகளை மன அதிர்வுகளை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதல் அவனிடம் இருக்க வேண்டும் 4. அனுபவக் கருக்கொண்டு பக்குவப்பட்ட அவன் படைப்புகளை வெளிபடுத்த சரியான ஒரு வழிமுறையை அவன் மேற்கொள்ள வேண்டும்.
இந்த தகுதிகளில் என்னிடமிருப்பது மென்மையான உணர்வுகள் என்கிறார்.
இந்தத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
1. சுதர்மம்
2. புதிய புறப்பாடு
3. துளிர்
4. நாராயணி பார்த்த படம்
கடைசி கதையான நாராயணி பார்த்த படம், வன்முறையாக திரைப்படத்தைக் காணும் குழந்தைகள் வீட்டில் அந்த வன்முறையை குடும்பத்தாருடன் பொருத்திப் பார்க்கும் கதை. அட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படத்தைப் பார்க்கிறாள் நாராயணி. காந்தியாக நடித்தவர் தன் அப்பாவைப் போலிருக்கிறார். காந்தியைச் சுட்டிவிடும் காட்சிக் காணும் அவள் தான் அப்பாவை யாரோ சுட்டுவிட்டதாக கலங்குகிறாள். வீட்டுக்கு வரும் அவள் அப்பாவைப் பார்த்தும் அவரைத் தொட்டும் பார்க்கிறாள். இரவில் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. விழித்து விழித்து பார்க்கிறாள். அவளது தூக்கத்தில் வன்முறைக் காட்சி பெரும் வன்முறையை நிகழ்த்தி முடிக்கிறது.
இப்படியாக அன்றாடம் நிகழ்ந்தேறும் சம்பவங்களைக் கதையாக்கியிருக்கும் விதம் சிறப்பு.
இந்நூலை புதுக்கோட்டை மீரா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.
காலத்தின் கர்ப்பத்தின் தினம் தினம் நிகழும் அற்புதங்களை ஆழ்ந்த மனிதாபிமானத்தோடு வியக்கத்தக்க வகையில் அழகிய கதைகளாக வடித்தவர். சிறுகதைகள் துளிர் எனும் இத்தொகுப்பு டிசம்பர் 1991 இல் வெளியானது.இந்நூலுக்கு அணிந்துரை புதுக்கோட்டை மன்னர் கல்லூரி இந்தித்துறைத் தலைவர் டாக்டர் என்.ஸ்ரீதரன்.
இந்நூலுக்கான முன்னுரையில் ஒரு படைப்பாளிக்கு நான்கு முக்கிய குணாதிசயங்கள் இருக்க வேண்டுமென கூறுகிறார். 1. ஒரு படைப்பாளி மென்மையான உணர்வு கொண்டவனாக இருக்க வேண்டும். 2. அந்த நுண் உணர்வுகளை அவன் போற்றி வளர்ப்பவனாக இருக்க வேண்டும் 3. அவன் வளர்த்துக்கொண்ட அந்த மென்மையான உணர்வுகளை மன அதிர்வுகளை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்ற உந்துதல் அவனிடம் இருக்க வேண்டும் 4. அனுபவக் கருக்கொண்டு பக்குவப்பட்ட அவன் படைப்புகளை வெளிபடுத்த சரியான ஒரு வழிமுறையை அவன் மேற்கொள்ள வேண்டும்.
இந்த தகுதிகளில் என்னிடமிருப்பது மென்மையான உணர்வுகள் என்கிறார்.
இந்தத் தொகுப்பில் நான்கு சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.
1. சுதர்மம்
2. புதிய புறப்பாடு
3. துளிர்
4. நாராயணி பார்த்த படம்
கடைசி கதையான நாராயணி பார்த்த படம், வன்முறையாக திரைப்படத்தைக் காணும் குழந்தைகள் வீட்டில் அந்த வன்முறையை குடும்பத்தாருடன் பொருத்திப் பார்க்கும் கதை. அட்டன்பரோ எடுத்த காந்தி திரைப்படத்தைப் பார்க்கிறாள் நாராயணி. காந்தியாக நடித்தவர் தன் அப்பாவைப் போலிருக்கிறார். காந்தியைச் சுட்டிவிடும் காட்சிக் காணும் அவள் தான் அப்பாவை யாரோ சுட்டுவிட்டதாக கலங்குகிறாள். வீட்டுக்கு வரும் அவள் அப்பாவைப் பார்த்தும் அவரைத் தொட்டும் பார்க்கிறாள். இரவில் அவளுக்குத் தூக்கம் வரவில்லை. விழித்து விழித்து பார்க்கிறாள். அவளது தூக்கத்தில் வன்முறைக் காட்சி பெரும் வன்முறையை நிகழ்த்தி முடிக்கிறது.
இப்படியாக அன்றாடம் நிகழ்ந்தேறும் சம்பவங்களைக் கதையாக்கியிருக்கும் விதம் சிறப்பு.
இந்நூலை புதுக்கோட்டை மீரா பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக