புதுக்கோட்டை எழுத்தாளர் -185
பொ.அ.ராஜ்குமாரன்,மருத்துவர். இராஜகோபாலபுரம், புதுக்கோட்டை. தற்போது சென்னை தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தில் மருத்துவராகப் பணியாற்றுகிறார்.
மௌனமான காதலுக்கு, இந்நூல் இவரது மூன்றாவது கவிதைத் தொகுப்பு. டிசம்பர் 2011 இல் இந்நூல் புதுக்கோட்டை ஸ்ரீ சண்முக பாண்டியன் பதிப்பகம் வழியே வெளிவந்தது. இது தவிர உனது விழியசைவில், காதல் மொழி என இரண்டு கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார்.
இந்நூலுக்கு அணிந்துரை எழுதியிருக்கும் கவிஞர் பழநிபாரதி அவர்கள், மௌனம் ஒரு பேரழகு. அது சொற்களற்ற வெறுமையல்ல. சொற்களைக் கடந்த தனிமை. அந்த இடத்தில் எது இருந்தாலும் இனிது. காதல் இருந்தால் இனிதினும்; இனிது. காதலை அந்த உயரத்திற்குக் கூட்டிச் செல்வதற்காக...ஒரு பறவையின் இறகெடுத்து மலரினும் மெல்லிய மொழியில் ராஜ்குமாரன் எழுதிய கவிதைகள்தாம் இந்தத் தொகுதி, என்கிறார்.
இத்தொகுதி முழுக்கவும் காதல் கவிதைகள். காதலி மீது காதலன் பாடும் கவிதைகள். இத்தொகுப்பில் ஒரு கவிதை,
உனக்காக
இன்றும்
காதலும் நானும்
கவிதையுடன்
காத்திருக்கின்றோம்...
வா!
அமர்ந்துகொண்டு
வாசிக்கலாம்
இல்லை
அமர்ந்திருந்த
இடத்தை
நேசிக்கலாம்....

கருத்துகள்
கருத்துரையிடுக