முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கோபிநாத்

 புதுக்கோட்டை எழுத்தாளர் - 187

கோபிநாத், அறந்தாங்கி. தற்போது சென்னையில் வசிக்கிறார்.  விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.

2004 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துநராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டு அந்நாட்டில் நடந்த சர்வதேச செய்தியாளர்கள் கலந்தாய்வில் பங்கேற்றார்.

ஊடகங்களில் இவருடைய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் முன்னணி செய்தி வார இதழான இந்தியா டுடே வழங்கிய 2006 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருதைப் பெற்றவர். 2007 ஆம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆனந்த விகடன் வார இதழால் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் எழுதிய முதல் புத்தகம், 'தெருவெல்லாம் தேவதைகள்'. இது தவிர 'ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!', 'நேர் நேர் தேமா',  'நீயும் நானும்' ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.


2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. 'ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! ' அவர் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள் , பயணங்கள் பற்றி எழுதியுள்ளார். கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறபோது ஒரு கால்குலேட்டரை தேடுகிறோம். அதனால் உங்களுக்கு கணக்கு தெரியாது என்பதல்ல. இந்தப் புத்தகம் ஒரு கால்குலேட்டர்.  உங்களுக்கு தெரிந்ததை..நீங்களே வேகமாக புரிந்துகொள்ள இது எழுத்து கால்குலேட்டர், என்கிறார் இந்நூலுக்கான முன்னுரையில்.

சந்தோஷத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்கமாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை.

நம் அக்கறை சிரிக்கக்கூடாது என்பதில் இல்லை. உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.

ஒரு வேலையை விரும்பிச் செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை. வருந்திச் செய்கிற போது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது

இது போன்ற தலைப்பின் கீழ் பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பு. 





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...