புதுக்கோட்டை எழுத்தாளர் - 187
கோபிநாத், அறந்தாங்கி. தற்போது சென்னையில் வசிக்கிறார். விஜய் தொலைக்காட்சி நீயா நானா நிகழ்ச்சியின் தொகுப்பாளர்.2004 ஆம் ஆண்டு இந்தியாவின் சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துநராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டு அந்நாட்டில் நடந்த சர்வதேச செய்தியாளர்கள் கலந்தாய்வில் பங்கேற்றார்.
ஊடகங்களில் இவருடைய சிறப்பான பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக இந்தியாவின் முன்னணி செய்தி வார இதழான இந்தியா டுடே வழங்கிய 2006 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் இளம் சாதனையாளர்கள் விருதைப் பெற்றவர். 2007 ஆம் ஆண்டு சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளராக ஆனந்த விகடன் வார இதழால் தேர்வு செய்யப்பட்டார்.
இவர் எழுதிய முதல் புத்தகம், 'தெருவெல்லாம் தேவதைகள்'. இது தவிர 'ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!', 'நேர் நேர் தேமா', 'நீயும் நானும்' ஆகிய நூல்கள் எழுதியுள்ளார்.
2007 ஆம் ஆண்டு வெளிவந்தது. 'ப்ளீஸ் ! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க! ' அவர் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள் , பயணங்கள் பற்றி எழுதியுள்ளார். கணக்குகளின் எண்ணிக்கை அதிகமாகிறபோது ஒரு கால்குலேட்டரை தேடுகிறோம். அதனால் உங்களுக்கு கணக்கு தெரியாது என்பதல்ல. இந்தப் புத்தகம் ஒரு கால்குலேட்டர். உங்களுக்கு தெரிந்ததை..நீங்களே வேகமாக புரிந்துகொள்ள இது எழுத்து கால்குலேட்டர், என்கிறார் இந்நூலுக்கான முன்னுரையில்.
சந்தோஷத்தை தன்னுள்ளே வைத்திருக்கிறவன் அதை வெளியே தேடிக்கொண்டிருக்கமாட்டான். அதற்காக அவன் அலையப்போவதுமில்லை.
நம் அக்கறை சிரிக்கக்கூடாது என்பதில் இல்லை. உண்மையில் பார்த்தால் அது அழக்கூடாது என்கிற நம் அச்சத்தின் மீதுதான் இருக்கிறது.
ஒரு வேலையை விரும்பிச் செய்கிறபோது உங்களுக்கு அதன் கஷ்டம் தெரிவதில்லை. வருந்திச் செய்கிற போது உங்கள் கஷ்டம் பல மடங்காகிறது
இது போன்ற தலைப்பின் கீழ் பதினைந்து கட்டுரைகளின் தொகுப்பு.
.jpeg)
கருத்துகள்
கருத்துரையிடுக