புதுக்கோட்டை எழுத்தாளர் - 193
மருதன் பாலமுருகன், மருதன் இவரது தந்தையார். கீரமங்கலம் அருகில் பனங்குளம் இவரது ஊர். திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் பணியாற்றுகிறார்.முத்தங்களின் தாழ்வாரம் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. முத்தங்களைக் கவிதைகளாகக் கொண்ட முத்தமாலை. இவரைப் பொறுத்த வரை, முத்தமென்பது இதழ்களின் சிறகடிப்பு.
இந்நூலுக்கு அணிந்துரை தந்திருக்கும் கவிஞர் கோ.கலியமூர்த்தி அவர்கள் "காதலின், பேரன்பின், தாய்மையின் மணங்கமழும் சொற்களால் பின்னப்பட்ட கவிதைகளில் முத்தங்கள் பூக்களாக மலர்ந்திருக்கிறது" என்கிறார்.
பால்யத்தில் மொட்டுவிட்ட காதலொன்று பூப்பதற்கு முன்பே உதிர்ந்துபோனது. அது கற்றுக்கொடுத்த கவிதை மட்டும் மழையின் ஈரம் மண்ணில் கசிவதைப்போல அவ்வபோது கசிந்துகொண்டிருக்கிறது, அந்தக் கசிவுகளே முத்தங்கள் என்கிறார் கவிஞர் மருதன் பாலமுருகன்.
முத்தங்களை அன்பின் குறியீடாகக் கோர்க்கப்பட்ட இத்தொகுப்பில் இரு முத்தங்கள்
1
மழையில் துள்ளும் முத்தங்கள்
குளிக்கின்றன
இதழ் குளத்தில்
2
வண்டி வண்டியாய்
வெட்டி எடுக்கப்படுகின்றன
நதியின் முத்தங்கள்

கருத்துகள்
கருத்துரையிடுக