புதுக்கோட்டை எழுத்தாளர் -196
அன்னை சௌந்தரராஜன், பாலன் நகர், திருச்சி சாலை சிப்காட், புதுக்கோட்டை. இவரது இயற்பெயர் ப. சௌந்தரராஜன். தேனி மாவட்டம் அழகாபுரி கிராமத்தில் பிறந்தவர். தொழில் பொருட்டு புதுக்கோட்டைக்கு வந்தவர்.தனது சிறிய வயதில் தாயை இழந்து தந்தையின் அரவணைப்பில் வளர்ந்தவர். தாய்ப்பாசத்தின் ஏக்கத்தால் தாயின் நினைவாக அன்னை என்கிற சொல்லை இணைத்துக்கொண்டு அன்னை சௌந்தரராஜன் என்று பெயரை மாற்றிக்கொண்டவர்.
ஓராயிரம் பார்வையிலே...! இவரது முதல் நூல், கவிதைத் தொகுப்பு. மார்ச் -2011. இந்நூலுக்கு வாழ்த்துரை தந்திருக்கும் எய்ம் பள்ளி தாளாளர் கே.டி.கந்தசாமி, இத்தொகுப்பு மனிதனின் மேன்மையை வலியுறுத்துவதாக இருக்கிறது, என்கிறார்.
இந்நூல் அச்சாக்கம் மீரா ஆப்செட் பிரிண்டர். வெளியீடு
அன்னை சௌந்தரராஜன் பதிப்பகம், புதுக்கோட்டை.
காதல், உழைப்பு, வறுமை, ஏழ்மை என பல்வேறு பாடுபொருளைக் கொண்டுள்ளது. இந்நூலுக்கு என்னுரை தந்திருக்கும் எழுத்தாளர் தனி மனிதனின் தொகுப்புதான் சமுதாயம் ஒருவன் இந்தச் சமுதாயத்தைக் குறை கூறும் போது தன்னைத் தன் வசதிக்கேற்றவாறு மறைந்து விடுகிறான், என்றார்.
1
நீந்தத் தெரியாத
மீன்களுக்கு
நீச்சல் கற்றுத் தரும்
இரு விழிகள்
காதல்...!
2
பெண்புத்தி
பின்புத்தி
'மல்லிகை' யுக்தி
3.
விலைவாசியை
கருத்தில்கொண்டு
பஞ்சாயத்து
தீர்ப்பு கூறியது !
பெற்றோர்களுக்கு
அண்ணன் சோறு போடணும்!
தம்பி
'குழம்பு' ஊற்றணும்!

கருத்துகள்
கருத்துரையிடுக