புதுக்கோட்டை எழுத்தாளர் – 198
கி.லட்மண சர்மா, இந்திய இயற்கை வைத்யர். புதுக்கோட்டை கணேஷ் நகரில் சர்மா இயற்கை வைத்திய இல்லம் நடத்தியர். இவர் புதுக்கோட்டை THE INDIAN INSTITUTE IF NATURAL THERAPEUTICS எனும் நிறுவத்தில் மேலாளராகப் பணியாற்றியவர். மேலும் இவர் தலைமையில் அகில பாரத ப்ராக்ருதிக சிகித்ஸா ஸம்மேளனம் ஏழாவது மகாநாடு, மே – 1945 ஆம் நடைபெற்றது.
பத்ய உணவு, இவரது மூன்றாவது நூல். இதுதவிர பூர்ணசக்தி, உபவாஸதத்வம் எனும் இரண்டு நூல்கள் எழுதியுள்ளார். பத்ய உணவு எனும் இந்நூல் இயற்கை இல்லம், புதுக்கோட்டை ( திருச்சி) எனும் பதிப்பகத்தின் மூலம் ஆகஸ்ட், 1944 ஆம் ஆண்டு இரண்டாம் பதிப்பாக வெளியானது.
ப்ரபல இந்திய இயற்கை வைத்யரான ஸ்ரீ கி. லட்மண சர்மாவினால் ஊருக்கு ஒதுப்புறமாகவும் காற்றோட்டமும், ஜலவசதியிமுள்ள உயயர்ந்த ஸ்தலத்தில இயற்கை வைத்யஇல்லம் நிறுகப்பட்டிருக்கிறது. அங்கு சிகிச்ஸைபெறும் போது வைத்ய முறைகளைத் சந்தேகமறக் கற்றுக்கொள்ளலாம்.
மானேஜர்
சர்மா இயற்கை வைத்ய இல்லம்
கணேச நகர்
புதுக்கோட்டை ( திருச்சி) என்கிற குறிப்பு இடம் பெற்றுள்ளது.
இந்நூலுக்கான முன்னுரையில், உயிர்ச் சக்தியானது ஒரு நிர்மாண வேலைக்காரன், என்று இதன் முன் குறிப்பிட்டோம். அதாவது உடலென்னும் வீட்டை நிர்மித்து அதை அன்றன்று பழுது படாது காக்கும் சக்தியே உயிர். இதுவே முந்திய நூல்களின் சுருக்கமாகும். நிர்மாண வேலை செய்பவன் சிற்பி எனப்படுவான். உயிரை லெட்சுமண சிற்பி என்று சொல்லவேண்டும்.
இச்சிற்பி உணவாகிய சரக்கைக் கொண்டு தன்னாலாகும் நிர்மாண வேலைகளை நடத்துகிறது. உணவானது ஐவகை அவற்றில் தாழ்ந்தது வாயினால் உட்கொள்ளும் உணவு. அத்தாழ்ந்த உணவு இயற்கைக்கு மாறாக உட்கொள்ளப்படுமானால் உடல்நிலைத் தவறிக் கெடும் என குறிப்பிடுகிறது.
இந்நூலில் உணவின் தன்மை – அதாவது நல்ல உணவு, நல்லதல்லாத உணவு – பற்றி விவரிக்கிறது. நல்ல உணவானது உயிருக்கு உதவியாவது. நோய்ச்சரக்குகள் உடலில் குவியாகமலிருப்பதற்கு ஏற்ற உணவு அது. நோய்ச் சரக்குகளை வெளியேற்றும் தொழிலாகிய நோயில் உயிருக்கு உதவி செய்வதும் அதுவே. இவ்விருவகை உதவியாலும், அவ்வுணவு பத்திய உணவு எனப்படும்.
இந்நூலில் உணவுச் சத்துக்கள், உணவு வகைகள், தானிய வகைகள், முக்குணங்கள், சமையல், பச்சை உணவு, தனிஉணவு, கலப்புணவு, நோயில் பத்யம், முளை கண்ட தான்யங்கள் ஆகிய தலைப்புகளின் கீழ் இந்நூல் உணவு குறித்து பேசுகிறது.
நோயில் பத்யம் எனும் தலைப்பு உணவு கட்டுப்பாடுகள் குறித்து பேசுகிறது.
1.நடமாட்டமும் ஜீர்ண சக்தியும் பசியும் உள்ளவர் தினம் ஒரே தடவை சாப்பாட்டோடு இருக்க வேண்டும்.
2. அது கறிகாய்களின் கூட்டுடன் சாதமாக அல்லது ஸாத்விக இட்டலி, அல்லது பொங்கலாக இருக்க வேண்டும்.
3. கறிகாய் அதிகமாயும் மற்றவை குறைவாயும் இருக்க வேண்டும். எல்லாம் ஒரே சாப்பாடாக சாப்பிட வேண்டும். தாய் வகைகளை முற்றிலும் விலக்கிவிட்டு கறிகாய்களையும் தேங்காயையும் மட்டும் சாப்பிடுவது உத்தமம்.
4. தேங்காய் ஜீரணத்துக்கேற்றபடி கறிகாய்க்கூட்டில் சேர்க்க வேண்டும். புளிப்புள்ளவைகொழம்பு, சாறு, மோர். இவை தள்ளுபடி. ஆனால் புளியாத மோரைத் தண்ணீர்போல் பின்னாடி குடிக்கலாம்.
5.மலக்குடலின் தாழ்வுள்ளவர்கள் கீரை அ்லது காய்களைத் தேங்காயுடன் மாத்திரம் சாப்பிட வேண்டும். மற்ற உணவை அடிக்கடி சேர்க்கலாகாது.


கருத்துகள்
கருத்துரையிடுக