புதுக்கோட்டை எழுத்தாளர் - 199
கவிஞர் ச.தோ.தமிழ்மாறன், இலுப்பூர். தற்போது புதுக்கோட்டை சத்தியமூர்த்தி நகரில் வசிக்கிறார். இயற்பெயர் சர்க்கரை தோமாஸ் அந்தோணிசாமி. தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இலுப்பூர் கழனிவாசலில் கலை இலக்கியப் பேரவை என்ற அமைப்பைத் தொடங்கி ஆசிரியர் அலுவலர்களுக்குப் பேச்சுப் பயிற்சி அளித்தவர். மேலும் புதுக்கோட்டையில் இலக்கியப் பேரவை அமைப்புத் தொடங்கி அதன் செயலாளராக இருந்து கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகளை நூலாக வெளியிட்டவர்.
தனித்தமிழ் ஆர்வலர், இசை - இலக்கிய- நகைச்சுவை பட்டிமன்ற நடுவர்.பாவேந்தர் பாரதிதாசன், கலைஞர் மீது பெரும்பற்று கொண்டவர்..தமிழ் இலக்கிய ஆய்வுப் பண்ணை, வீரமாமுனிவர் இலக்கியப் பேரவை தொடங்கி அதன் தலைவராக செயலாற்றியவர். இவரது முதல் நூல் 'உருகுவதை விட்டுவிடு'. 'நாடும் மொழியும் நம் இரு விழிகள்' எனும் இந்நூல் இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு. ஆண்டு -2010, மணிமேகலைப் பிரசுரம்.
இந்நூலுக்கு அணிந்துரை - கவிஞர் மு.மேத்தா, கவிச்சுடர் இரா.சு. கவிதைப்பித்தன். வாழ்த்துரை புரவலர் சீனு.சின்னப்பா. அறிமுகவுரை - சொல்லருவி மு.முத்துசீனிவாசன்.
இத்தொகுப்பில் உழவன் என்றொரு கவிதை.
உழுவதால் உழவன் என்பார்.
இல்லை,
உழல்பவன்.
வறுமையில் உழல்பவன்
துன்பத்தில் உழல்பவன்.
வேதனையில் உழல்பவன்
இப்படி
உழல்வதால்
உழல்பவன் மருவி
உழல்வன் ஆனவன்...


கருத்துகள்
கருத்துரையிடுக