முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தமித்திரர்

 புதுக்கோட்டை எழுத்தாளர் -201

புத்தமித்திரர்,  புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலிருந்து இருபத்தைந்து கல் தூரத்தில் தென்கிழக்கு கடற்கரையொட்டியுள்ள பொன்பற்றி எனும் ஊரில் பிறந்தவர். வீர ராசேந்திர சோழ மன்னன் அதிகாரத்திற்குட்பட்ட சிற்றரசராக ஆட்சிப்புரிந்தவர்.  புத்த மதத்தவர். இந்நூல் இயற்றப்பட்ட காலம் கி.பி 1063 - 1070.

இவர் வீரசோழியம் எனும் இலக்கண நூலைப் படைத்தார். இப்பெயர் வீர ராசேந்திர சோழனைக் குறிக்கும்.

"மிக்கவன் போதியின் மேதக் கிருந்தவன்,  மெய்தவத்தால்
தொக்கவன், யார்க்கும் தொடரவொண்ணாதவன், தூயனெனத்
தக்கவன் பாதந் தலைமேற் புனைந்து தமிழுரைக்கப்
புக்கவன் பைம்பொழிற் பொன்பற்றி மன்புத்த மித்திரனே "

எனும் வரும் முதற் செய்யுள் மூலம் இவர் பொன்பற்றி எனும் ஊரைச் சேர்ந்தவர் அறியமுடிகிறது.

"தேமேவிய தொங்கற் நேர்வீர சோழன் திருப்பெயரால்
பூமே லுரையப்பன் வடநூன் மரபும் புகன்று கொண்டே " என்று பாடியுள்ள அடிகள் மூலம் இந்நூலை இயற்றிவித்தவன் வீரராசேந்திர சோழ மன்னனாவான் என அறியமுடிகிறது.

வீரசோழியம் வடமொழி இலக்கண விதியைத் தன்னகத்தே கொண்ட நூல். எழுத்து, சொல், பொருள், யாப்பு, அலங்காரம் எனும் ஐந்து இலக்கணங்களையும் ஐந்து அதிகாரங்களாகக் கூறுகிறது. இந்நூலுக்கு முதல் நூல் தொல்காப்பியமும் காவிய தரிசனம் எனும் வடமொழி நூலும் ஆகும்.

வீரசோழியம் கட்டளைக் கலித்துறை எனும் பாவால் அமையப்பெற்ற இலக்கண நூல். பெரும் பிரிவுகள் அதிகாரம். என்றும் உட்பிரிவுகள் படலம் என்றும் பெயர் பெறுகின்றன. சொல்லதிகாரம் ஆறு படலங்களை உடையது. மற்றவை ஒவ்வொரு படலமே. இந்நூல் மொத்தம் 181 செய்யுட்களைக் கொண்டது.


இந்நூல் புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்கும் நூலாகும். இந்நூல் ஓலைச்சுவடியிலிருந்து அச்செடுத்து முதல்  நூற்பதிப்பு கண்டது  1895 ஆம் ஆண்டு. சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்பித்தார்.







கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அறந்தை மணியன்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 209 அறந்தை மணியன் , ஆவுடையார்கோவிலில் பிறந்தவர். இயற்பெயர் வை. சுப்பிரமணியன். தமிழ், சமஸ்கிருதம்,  இந்தி, பிரெஞ்சு என்று பல மொழிகள் கற்றவர். சென்னை வடபழனி எஸ்.ஆர்.எம் சிவாஜி கணேசன் பிலிம் இன்ஸ்டியூட்டில் விரிவுரையாளராகப் பணியாற்றியவர். எழுத்தாளர், பத்திரிகையாளர், பேச்சாளர், மொழிபெயர்ப்பாளர், நாடக நடிகர், இயக்குநர், குறும்பட, ஆவணப்பட இயக்குநர் என பன்முகக் கலைஞர். 1970 ஆம் ஆண்டு முதல் இவர் Free - Lanct பத்திரிக்கையாளர். முப்பதுக்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளார். 1. தமிழ் நாடகக் கலை, 2. கர்நாடக இசை, 3. ஹிந்துஸ்தானி இசை, 4. தமிழ் இசை மரபு, 5. ராகங்களும் திரைப்பட பாடல்களும், 6. திரைக்கதை எழுத புதுபுது யுத்திகள், 7. திரைப்பட உலகில் நுழைவது எப்படி?, 8. வெளிநாடு செல்ல வேண்டுமா?, 9. திரைச்சுடர்கள், 10. பம்மல் முதல் கோமல் மரை, 11. தமிழ் சினிமாவின் ஒளி ஓவியர்கள், 12. காதல் கலை, 13. கருத்தடை முறைகள், 14. ஏற்றுமதியாளர்கள் கையேடு, 15. ஐ.ஆர்.டி. டாட்டா, 16. மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், 17, யாக்ஞ வல்கியர் வரலாறு, 18. யாக்ஞ வல்கியர் ஜனக மன்னர் உரையாடல்...
  புதுக்கோட்டை எழுத்தாளர் – 146 ம.விஜயன் , பள்ளத்தான்மனை, குளந்திரான்பட்டு ஊராட்சி. தற்போது கரம்பக்குடியில் வசித்துவருகிறார். இடதுசாரி குடும்பம். இவரது தந்தையார் மணிவேல், இந்திய கம்யூனிஸ்ட் ( மார்க்சிஸ்ட் ) கட்சியிலும் இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) கட்சியிலும் மக்கள் பணியாற்றுகிறார்கள். சிபிஐ( எம்-எல்) கட்சியின் ஒன்றிய செயலாளராகவும் அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் மாவட்டச் செயலாளராகவும் உள்ளார். கவிஞர், பேச்சாளர், சமூகச் செயற்பாட்டாளர். இவர் எழுதிய பல துணுக்குகள் பல்வேறு இதழ்களில் வெளிவந்துள்ளன. இன்றைய தலைமுறை எழுத்தாளர்களில் கரம்பக்குடி பகுதியில் முதலில் நூல் வெளியிட்டவர் இவர். 1998 ஆம் ஆண்டு அவரது சொந்தக் கிராமமான பள்ளத்தான்மனையில் கரம்பக்குடி அரசு மேனிலைப் பள்ளியின் தமிழாசிரியராக இருந்த திரு. மலையாண்டி புனிதன் அவர்கள் நூலை வெளியிட அன்றைய கரம்பக்குடி பேரூராட்சித் தலைவர் தோழர் எம். உடையப்பன் , ஆர். மோகன், மு.யோகானந்தம் ஆகியோர் பெற்றுக்கொண்டார்கள். காதல் + சமுதாயம் = காகிதம் எனும் இந்நூல் இவரது முதல் கவிதைத் தொகுப்பு. காதல், வறுமை, சாதியம், ஏழ்மை...

ஆதிநாதர்

  புதுக்கோட்டை எழுத்தாளர் - 154 ஆதிநாதர் , புலவர். இவரது ஊர்  நலக்குன்றம் எனும் குடுமியான்மலை. இவரது காலம் சரியாக கணிக்க முடியவில்லை. குடுமியான்மலை அகிலாண்டேசுவரி அம்மன் கோவில் இரண்டாவது கோபுர வாசலுக்கு இடதுபுறச் சுவரில் இவரது கவிதை சாசனமாக வடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை சாசனங்கள் எண் - 1092 இவரது கவிதையை ஆவணப்படுத்தியுள்ளது. மேலும் மயிலை சீனி. வேங்கடசாமியின் சங்ககால வரலாற்று ஆய்வுகள் எனும் நூல் இவரையும் இவரது கல்வெட்டு செய்யுளையும் பதிவுசெய்துள்ளது. உமையாளை இடதுபுறத்தில் வைத்திருக்கும் சிவபெருமான், அவ்வமையார் அறியாதபடி கங்கை என்பவளைத் தமது அடர்த்தியான சடாமுடியில் மறைத்து வைத்திருக்கிறார் என்பது புராணக் கதை. குடுமியான்மலையில் உள்ள சிவபெருமானுக்குச் சடா முடி குறைந்து சிறுகுடுமியாய் விட்டதாம். அதைக் கண்டு உமையம்மையார் "அடர்த்தியான சடை போய்விட்டபடியால், இனிக் கங்கையாளை இவர் எங்கே மறைத்து வைக்கப் போகிறார்!" என்று கூறி நகைப்பதாக இப்பாடல்  கூறுகிறது. எங்கள்நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே-கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்...