புதுக்கோட்டை எழுத்தாளர் – 194
சி.மு.சி.சின்னையா செட்டியார்,
புதுக்கோட்டை சமஸ்தானம் பனையப்பட்டி புண்ணியசீலர் சி.மு.முத்துக்கருப்பஞ்செட்டியார்
அவர்களின் குமாரர் சி.மு.சி. சின்னையா செட்டியார் என்று குறிப்பிடப்படுகிறார். சுவாநுபவத்
திருவாக்கு என்னும் பாராயண சிந்தாமணி எனும் இந்நூல் மதுரை பிரஹ்மஸ்ரீ யோகானந்த சுவாமிகள்
ஆக்ஞையின் படி புதுக்கோட்டை சமஸ்தானம் பனையப்பட்டி
புண்ணிய சீலர் சி.மு.முத்துக்கருப்பஞ் செட்டியார்
அவர்கள் குமாரர் சி.மு.சி.சின்னையா செட்டியாரால் திரட்டி அச்சியற்றப்பெற்ற்து.
ஆண்டு – 1926.
இந்நூலுக்கு
முகவுரை எழுதியிருக்கும் சி.மு.சி. சின்னையா செட்டியார்
பரசிவ
ஞானத்தில் விருப்புடைய அறிஞர்கள் பிரதி தினமும் பாராயணஞ் செய்வதற்கு அனுகூலமாய்ச் சிவானுபவப்
பேற்றை அடைந்த மஹாத்மாக்களின் அருமைத் திருவாக்குளைப் பழைய பிரதிகளுக்கிணங்க ஒரே புத்தகமாகப்
பேரறிஞர்களின் அனுமதியில் பகவானருளால் திரட்டிய இந்நூல் முதற்பதிப்பில் அச்சிட்ட
2000 புத்தகம் செலவாகிவிட்டபடியால் இரண்டாம் பதிப்பில் 2000 புத்தகமும் அடியேனால் அச்சியற்றப்
பெற்றது. இப்புத்தகம் சாதுக்களுக்கு இனாமாகக் கொடுக்கப்படும். இதில் பிழையுளதாயின,
க்ஷமிக்குக.
இந்நூற்
பெயர் எனும் தலைப்பிட்ட வெண்பா இவ்வாறு பாடுகிறது.
ஆரண முடிவத் வைத முத்திப்பே றடைவ
தற்கு
நாரண னருளால் மேலோர் நவின்றசா தனமனைத்துஞ்
சீரணப் பன்னூ லாய்ந்து திரட்டியச்
சிட்ட விந்நூல்
பாரண மக்க ளுக்குப் பகர்சிந்தா மணியா
மாதோ.
இந்நூல்
மூன்று இடங்களிலும் எழுதிப் பெற்றுக்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
1. பிரஹ்மஸ்ரீ யோகானந்த சுவாமி அவர்கள்
பிட்டுத்தோப்புக்கடுத்த அழகாடி மடம், மதுரை
2.
சி.மு.சின்னையா
செட்டியார் 138, பவழக்காரத் தெருவு, மதராஸ்
3.
சி.மு.
சின்னையா செட்டியார், பனையப்பட்டி, குளிபிறை போஸ்டு, புதுக்கோட்டை சமஸ்தானம்.
இந்நூல்
பாராயண சிந்தாமணி, ஔவையார் அருளிச் செய்த விநாயகரகவல், குமரகுருப சுவாமிகள் அருளிச் செய்த திருச்செந்தூர்க்
கந்தர் கலிவெண்பா, ஸ்தோத்திரப் பாக்கள், ஞானிகளின் பெருமை, தேவாரம் – திருஞானசம்பந்த
சுவாமிகளருளியது, திருநாவுக்கரசு சுவாமிகளருளியது, சுந்தரமூர்த்தி சுவாமிகளருளியது,
திருவாசகம் – ஸ்ரீமாணிக்கவாசக சுவாமிகளருளியது, யாத்திரைப் பத்து, நால்வர் மகிமை, சிவப்பிரகாச
சுவாமிகளருளிய நால்வர் நான்மணிமாலை, திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருமூலநாயனார்
அருளிய திருமந்திரம், பட்டணத்தார் அருளிய பாடல்கள், அருணகிரிநாதர் அருளிய பாடல்கள்,
சேக்கிழார் அருளிய பெரியபுராணம், திருவாய்மொழி, வில்லிபுத்தூராழ்வார் அருளியது, பகவற்கீதை
12 ஆவது பக்தியுாக வத்தியாயம், ஈஸ்வர கீதை, பிரமகீதை, ரிபுகீதை, ஞானவாசிட்டம், உபசாந்திப்
பிரகரணம், கைவல்லிய நவநீதம், சொரூபசாரம், தத்துவராய சுவாமிகள் அருளிய பாடுதுறை, ஸ்ரீ
குமாரதேவர் அருளிய அத்துவிதவுண்மை, ஸ்ரீ சதாசிவப் பிரஹ்மேந்திரர் அருளிய அத்துவிதரமஞ்சரி,
நிஷ்டானுபூதி, தாயுமானவர் அருளியது, சிவஞான வள்ளலார் பாடல்கள், திருவள்ளுவர் அருளிய
திருக்குறள், ஔவையார் அருளிய பாடல்கள், சிவவாக்கியர் பாடல்கள், திருப்போரூர்ச் சந்நிதி
முறை, குகை நவசிவாயர், குரு நமசிவாயர், குசேலோபாக்கியானம், மூவர் அம்மானை, நாலடியார்,
பிரபோத சந்திரோதயம், சிவபோகசாரம், ஞானசுகாதீத வெண்பா, சசிவன்ன பேதம், பிரத்தியட்சானுபூதி விளக்கம், இராமலிங்கசுவாமிகள்
அருட்பா, ஸ்ரீ சங்கராசாரியார் அருளிய விவேகசூடாமணி, விவேகஷட்கம், ஆத்மானுசந்தானக்கிரமம்,
ப்ரஹ்ம நாமாவலீ, முத்துராமலிங்க சுவாமிகள் அருளிய சுவாநுபவத் திருவாக்கு, கோயிலூர்
அடியார்குழாத்துள் ஒருவரியற்றிய குரும்பரம்பரை வணக்கம், திருநெல்லையம்மை வணக்கம், அர்ச்சனை
நாமங்கள், ஸ்ரீசங்கராசார்ய சுவாமிகளின் அஷ்டோத்ர சத நாமங்கள் ஆகியவற்றின் தொகுப்பு.

கருத்துகள்
கருத்துரையிடுக